முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிதம்பரம் ஆலயத்தில் ஆய்வுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை குழுவிற்கு ஏமாற்ற நிலை

 சிதம்பரம் நடராஜரெனும் சபாநாயகர் ஆலயத்தில் ஆய்வுக்கு வந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவை தில்லை வாழ் தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கணக்குகளை தர மறுத்த நிலையில் வாக்குவாதம் செய்த பரபரப்பு ஏற்படுத்தியது.


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மேற்கண்ட ஆலயத்தில் தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்ய முயன்ற சக தீட்சிதரைத் தாக்கியது, ஆதிதிராவிட வகுப்பு பெண் ஒருவரை சாதியைச் சொல்லி திட்டியது, மற்றும் கணக்கு முறைகேடு என பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இது குறித்து தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தற்போது ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஒரு குழுவை அமைத்திருந்ததில் வேலூர் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் லெட்சுமணன், பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், இந்து சமய அறநிலையத்துறையின் ஆலய நிலங்களுக்கான மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பெரம்பலூர் மாவட்ட உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டலத் தணிக்கை அலுவலர் இராஜேந்திரன் உள்ளிட்ட  ஐவர் நேற்று காலை 9.45 மணிக்கு  நடராஜர் எனும் சபாநாயகர் கோவிலுக்கு ஆய்வு செய்ய வந்ததையொட்டி கடலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.  கோவிலில் ஆய்வுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து கோவிலுக்குள் இருக்கும் ஆயிரங்கால் மண்டபமருகில் வந்த அதிகாரிகள் குழுவினர் அங்கு தீவிர ஆலோசனை நடத்தினர். அதனால் கோயிலில் சிறிய  பரபரப்பேற்பட்டது. அதிகாரிகள் குழுவினர் மதியம் ஒரு மணி வரை அங்கேயே காத்திருந்தனர். ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே தரையிலமர்ந்த படி அதிகாரிகள் குழுவினர் தாங்கள் கொண்டு வந்த பல்வேறு ஆவணங்களைப் படித்துப் பார்த்தனர்.  அப்போது கோவில் தீட்சிதர்கள் அதிகாரிகளிடம், கோவில் நடை சாத்தும் நேரமாகி விட்டதெனத் தெரிவித்ததையடுத்து மீண்டும் 4 மணிக்கு கோவிலுக்கு வருவதாகத் தெரிவித்து விட்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.



பிறகு மாலை 5 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு வந்தனர். கோவிலின் செயலர் ஹேமசபேஷ தீட்சிதர் எங்கே?                   நாங்கள் அவருக்குத்தான் ஆய்வு செய்வது தொடர்பாகக் கடிதம் கொடுத்தோம் என்றனர். அதற்கு அவர் வெளியே சென்று விட்டதாகவும் அவர் வந்தாலும் இதே கருத்தைத் தான் தெரிவிப்பாரென்றும் தீட்சிதர்கள் தெரிவித்தனர். ஆய்வு செய்வதைத் தடுக்கக் கூடாதென குழுவினர் எச்சரித்தனர்.  குழுவினருக்கும், தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கோயிலில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர்.



இன்றும் ஆய்வு தொடரும் கோவிலில் ஆய்வுப் பணிக்கு வந்தது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்டப்படி கோவில் ஆவணங்களைக் கேட்டும் அவர்கள் காட்டவில்லை. நிர்வாகத்தில் தலையிடக் கூடாதென்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கான உத்தரவு அவர்களிடமில்லை. பொது மக்கள் வழிபடும் கோவிலில் அரசாங்கம் ஆய்வு செய்வதற்கு இடமுள்ளது. ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை என்றாலும் வெளியே இருக்கும் சொத்துக்கள், கோயிலுக்குச் சொந்தமான கட்டிடிடங்களை ஆய்வு செய்தோம். கோவிலில் எந்தெந்தப் பணிகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தோம். கோயில் உள்ளே மட்டும் ஆய்வு செய்யவில்லை. வெளியில் அனைத்தையும் ஆய்வு செய்தோம். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று வருவாய் துறையில் நிலங்கள் குறித்து உள்ள கணக்குகளை ஆய்வு செய்வோம். கணக்கு விவரங்களை மட்டும் ஆய்வு செய்யவில்லை. இந்த ஆய்வு  தொடரும். ஆய்வு முடிந்த பிறகு அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.






சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற புகார்கள் குறித்தும், கோவில், சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் நேரடி விசாரணை நடத்தி நிர்வாக சீரமைப்பு குறித்து பரிந்துரை வழங்க இந்து சமய அறநிலையத் துறை ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக சி.ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.சி.ஜோதிதீட்சிதர்கள் தனி சமய சீர்மரபினர் என்று உச்சநீதிமன்றத்திவ் தீர்ப்பு முடிவு இறுதியாக்கப்பட்டுள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 107 ன் கீழ் தீட்சிதர்கள் நிர்வாகம் அறநிலையத் துறையின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டதென்பது உறுதியாகிறது. நடராஜர் எனும் சபாநாயகர் கோவில் நிலங்கள் 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதியிட்ட அரசாணை எண்: 836 ன் படி, தனி வட்டாட்சியர் கோவில் நிலங்கள் கட்டுப்பாட்டிலுள்ளதனால் நடராஜர் கோவில் நிலங்களைப் பற்றி தனி வட்டாட்சியரிடம் தான் கேட்க வேண்டும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பதிவேடுகள் தங்கள் துறை கட்டுப்பாட்டில் 40 ஆண்டுகளாக உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்களிலேயே இல்லை. முக்கியக் கோவில்களான பழநி,மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் பதிவேடுகள் இல்லாமல் உள்ளது. நகைகள் பற்றிய விபரத்திற்கு தாங்கள் 2005 ஆம் ஆண்டில் செய்த தணிக்கை அறிக்கை இதுவரை சிதம்பரம் கோவிலுக்குத் தரப்படவில்லை. கடைசியாக முடிக்கப்பட்ட தணிக்கை அறிக்கை இல்லாமல் புதிதாக 17 ஆண்டுகளுக்கு பின் துவக்க முடியாது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதியிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி துறை தணிக்கை குழுவிற்கான விதிகள் சட்டப்படி செல்லாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சட்டப்பூர்வமான தணிக்கை மற்றும் ஆய்விற்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளோம். ஆனால், தங்களது சட்டப்பிரிவு 107 ன் படி நீங்களே ஒப்புக்கொண்ட வகையில் தனி சமய பிரிவினர் நிர்வாகம் செய்யும் கோவில்களில், தன்னிச்சையாக ஆய்வு மற்றும் தணிக்கை செய்யும் அதிகாரத்திற்கு வெளியில் உங்கள் துறை உள்ளது.அதனால், தங்களது ஆய்வு மற்றும் தணிக்கையை உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டுக், கைவிடுமாறு கோருகிறோம். மேற்கண்ட அம்சங்கள் ஆணையருக்கு விரிவாக தெரிவிக்கப்பட்ட பிறகும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பல கோவில்களில் கால நிர்ணயம் செய்யாமல் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுவது சட்டப்படி செல்லாது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக் கோவில்களில், முறைகேடுகளை சரி செய்யாமல் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் அரசியல் சாசனப்படி பாதுகாக்கப்பட்டு நிர்வாகம் செய்யும் தனி சமய பிரிவினரான தீட்சிதர்களின் நிர்வாகத்தை ஆய்வுகள் இந்து சமய அறநிலையத்துறை செய்ய தார்மீக உரிமையில்லை. என் தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த