முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குட்ஹா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மற்றும் பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு அனுமதி வழங்க சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

குட்ஹா முன்னால் அமைச்சர்கள் டாக்டர்  சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது வழக்கு பதிய சிபிஐ முடிவு தமிழ்நாடு அரசுக்கு கடிதம்    குட்ஹா முறைகேடாக விற்பனை செய்த ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மற்றும் பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்க சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதமெழுதியுள்ளது.         

    

குட்ஹா, பான் மசாலா போன்ற வடநாட்டு மக்கள் அதிகம் படுத்தும் புகையிலை கலந்த போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் 2013 ஆம் ஆண்டு முதல் மத்திய சுகாதார அமைச்சகத்தால்  தடை செய்யப்பட்டுள்ளது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்திய நிலையில் குட்ஹா சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது தெரிகிறது 

அந்த விற்பனையின் பின்னிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் முன்னால் அமைச்சர் சி.வி.ரமனா  மற்றும் காவல்துறை டிஜிபி உள்ளிட்ட 12 நபர்கள்  லஞ்சம் பெற்றிருப்பதாக 2017 ஆம் ஆண்டில் புகார் எழுந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அப்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் காலம்சென்ற ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது 40 கோடி ரூபாய் வரை இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஒரு பக்கமிருக்க, இதில் இலஞ்சம் வாங்கி, நிதி மோசடி செய்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர், முன்னாள் காவல்துறை இயக்குனர் இராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட 12 நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையும் நடத்தப்பட்டதுடன் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அந்த வழக்கு  கிடப்பில் போடப்பட்டது பற்றி மக்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில் தற்போது குட்ஹா  வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதமெழுதியுள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு விரைவில் முடிவு எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள், மற்றும் இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டுமென்றால், அதற்குத் தலைமைச் செயலாளர் அனுமதியளிக்க வேண்டும் என அரசாணை தடைசெய்யும் காரணமாக தற்போது அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்பின் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேப் வருவாய் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரின் பெயர்களும் சிபிஐ வளையத்திலிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதில் ஏற்கனவே 6 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் கூடுதலாக இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் இந்த வழக்கில் விசாரணை சூடு பிடிக்கலாம் இதில் இந்த குற்றவாளிகள் தப்பிக்க வாய்பில்லை என்று தெரிகிறது தமிழ்நாடு அரசு விரைவில் வழக்குத் தொடுக்க அனுமதி வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் ஊழல் மலிந்த மாவட்டமாக விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்திலிருந்தே மாற்றப்பட்டது மக்கள் அவர் மீது நடவடிக்கை வராதா என எதிர்நோக்கும் நிலை இருந்தாலும் அவர் ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ள பல கோடி பணம் அவரை இதுவரை காப்பாற்றி வந்த நிலையில் இனி அதுபோல நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது மேலும் அவரது பினாமிகளாக பலரும் இழுப்பூர் பகுதியில் வலம் வரும் நிலையில் அவர்களும் இதில் உடந்தையா என்பதே தற்போது மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளது.


அமைச்சரும் அரசு ஊழியர் தான் தன் கடமையைச் செய்யவோ அல்லது செய்யாமலிருக்கவோ, ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாகவோ  அல்லது பாதகமாகச் செய்யவோ சட்டப்படியாக ஊதியமல்லாத பணத்தை அல்லது பொருளைப் பெறுதல் அல்லது பெற ஒப்புக்கொள்ளுதல்  ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 7 ன் படி ஊழல்  குற்றச்செயலாகும்.

ஒரு நபரோ அல்லது பல நபர்களோ, அரசு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கடமையைச் செய்யவோ செய்யவிடாமல் தடுக்கவோ, அரசு ஊழியர்க்கு கையூட்டு கொடுப்பதோ பெறுவதோ, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 8 மற்றும் 9 ன் படி ஊழலாகும்.

ஒரு தனிநபர் இலஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக உள்ள அரசு ஊழியர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 10 ன் படி ஊழல் செய்தவராகிறார்.

அரசு ஊழியர் ஒருவர், தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்து குவித்தால் அது போன்ற குற்றங்களுக்கு ஊழல் தடுப்புச்சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 13 ன் படி ஊழல் செய்தவராகிறார். அக்டோபர் மாதம் 1993 ஆம் ஆண்டில் முன்னாள் இந்திய மத்திய உள்துறைச் செயலாளர், என்.என். வோராவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, குற்றவாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடையே உள்ள உறவினால் வரும் பிரச்சனைகளை பற்றி கூறிய அறிக்கை கிட்டத்தட்ட ஒரு இணை அரசாங்கத்தை இயக்கும் குற்றவாளிக் கும்பல்களை எடுத்துக்காட்டியது. மேலும் இந்த அறிக்கை, குற்றவாளி கும்பல்களுக்கு அரசியல்வாதிகளால் மற்றும், அரசியல் கட்சிகளால் மற்றும் அரசுத் துறை செயலர்களால் கொடுக்கப்படும் ஆதரவை விவாதித்தது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.குட்ஹா கமிஷன் பெற்ற வழக்கில் ஏன் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கூடாதென்று உயர்நீதிமன்றம் அப்போது கேள்வி கேட்டது. அமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குனர் மீது புகார் இருந்து பதவியும் விலகாத நிலையில் அதை சிபிஐ விசாரிப்பது தான் சரியாகும்

ஆனால் இவ்வளவு கேள்விகள் எழுந்தும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் அப்போது இருந்த தமிழ் நாடு அரசு தமிழகம் முழுவதும் குட்ஹா விற்பவர்களைக் கைது செய்துள்ளோம், குட்ஹாவைப் பறிமுதல் செய்துள்ளோமென்று அறிக்கை மட்டுமே வந்தது. இந்த அறிக்கையே இவர்கள் இத்தனை வருடங்களாக இலஞ்சம் வாங்கிக்கொண்டு குட்ஹா விற்க அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒரு பொருளை தடை செய்த பிறகும் இலஞ்சம் பெற்றுக் கொண்டு அந்தத் தடையை கண்டுகொள்ளாமலிருப்பதும்  காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த அரசாங்கத்தின் வாடிக்கையான செயலாகவே இருந்து வந்தது. குட்ஹா விஷயத்தில் வசமாக தற்போது சிக்கிகொண்டார்கள். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு உடனடியாக அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அப்போது காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் இருவரையும் பதவி விலகும் படி அறிவுறுத்தி  உடனடியாக அப்போதே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க  வேண்டுமென்று அறப்போர் இயக்கம் கேட்ட நிலையில் இந்தப் பிரச்சனையில் சரியான முடிவு எடுக்கப்படும் வரை அந்த இயக்கத்தின் சார்பில் அனைத்து மட்டங்களிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதென்பதையும் நாம்  அறிந்ததே 2017 ஆம் ஆண்டு விசாரிக்க வேண்டிய குட்ஹா வழக்கை 2022 ஆம் ஆண்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் சிபிஐ. எல்லாம் மேலிருந்து நடத்தும் அரசியல் தான் என சாமானிய மக்களுக்கே புரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...