முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குட்ஹா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மற்றும் பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு அனுமதி வழங்க சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

குட்ஹா முன்னால் அமைச்சர்கள் டாக்டர்  சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது வழக்கு பதிய சிபிஐ முடிவு தமிழ்நாடு அரசுக்கு கடிதம்    குட்ஹா முறைகேடாக விற்பனை செய்த ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மற்றும் பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்க சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதமெழுதியுள்ளது.         

    

குட்ஹா, பான் மசாலா போன்ற வடநாட்டு மக்கள் அதிகம் படுத்தும் புகையிலை கலந்த போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் 2013 ஆம் ஆண்டு முதல் மத்திய சுகாதார அமைச்சகத்தால்  தடை செய்யப்பட்டுள்ளது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்திய நிலையில் குட்ஹா சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது தெரிகிறது 

அந்த விற்பனையின் பின்னிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் முன்னால் அமைச்சர் சி.வி.ரமனா  மற்றும் காவல்துறை டிஜிபி உள்ளிட்ட 12 நபர்கள்  லஞ்சம் பெற்றிருப்பதாக 2017 ஆம் ஆண்டில் புகார் எழுந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அப்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் காலம்சென்ற ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது 40 கோடி ரூபாய் வரை இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஒரு பக்கமிருக்க, இதில் இலஞ்சம் வாங்கி, நிதி மோசடி செய்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர், முன்னாள் காவல்துறை இயக்குனர் இராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட 12 நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையும் நடத்தப்பட்டதுடன் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அந்த வழக்கு  கிடப்பில் போடப்பட்டது பற்றி மக்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில் தற்போது குட்ஹா  வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதமெழுதியுள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு விரைவில் முடிவு எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள், மற்றும் இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டுமென்றால், அதற்குத் தலைமைச் செயலாளர் அனுமதியளிக்க வேண்டும் என அரசாணை தடைசெய்யும் காரணமாக தற்போது அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்பின் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேப் வருவாய் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரின் பெயர்களும் சிபிஐ வளையத்திலிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதில் ஏற்கனவே 6 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் கூடுதலாக இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் இந்த வழக்கில் விசாரணை சூடு பிடிக்கலாம் இதில் இந்த குற்றவாளிகள் தப்பிக்க வாய்பில்லை என்று தெரிகிறது தமிழ்நாடு அரசு விரைவில் வழக்குத் தொடுக்க அனுமதி வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் ஊழல் மலிந்த மாவட்டமாக விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்திலிருந்தே மாற்றப்பட்டது மக்கள் அவர் மீது நடவடிக்கை வராதா என எதிர்நோக்கும் நிலை இருந்தாலும் அவர் ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ள பல கோடி பணம் அவரை இதுவரை காப்பாற்றி வந்த நிலையில் இனி அதுபோல நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது மேலும் அவரது பினாமிகளாக பலரும் இழுப்பூர் பகுதியில் வலம் வரும் நிலையில் அவர்களும் இதில் உடந்தையா என்பதே தற்போது மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளது.


அமைச்சரும் அரசு ஊழியர் தான் தன் கடமையைச் செய்யவோ அல்லது செய்யாமலிருக்கவோ, ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாகவோ  அல்லது பாதகமாகச் செய்யவோ சட்டப்படியாக ஊதியமல்லாத பணத்தை அல்லது பொருளைப் பெறுதல் அல்லது பெற ஒப்புக்கொள்ளுதல்  ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 7 ன் படி ஊழல்  குற்றச்செயலாகும்.

ஒரு நபரோ அல்லது பல நபர்களோ, அரசு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கடமையைச் செய்யவோ செய்யவிடாமல் தடுக்கவோ, அரசு ஊழியர்க்கு கையூட்டு கொடுப்பதோ பெறுவதோ, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 8 மற்றும் 9 ன் படி ஊழலாகும்.

ஒரு தனிநபர் இலஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக உள்ள அரசு ஊழியர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 10 ன் படி ஊழல் செய்தவராகிறார்.

அரசு ஊழியர் ஒருவர், தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்து குவித்தால் அது போன்ற குற்றங்களுக்கு ஊழல் தடுப்புச்சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 13 ன் படி ஊழல் செய்தவராகிறார். அக்டோபர் மாதம் 1993 ஆம் ஆண்டில் முன்னாள் இந்திய மத்திய உள்துறைச் செயலாளர், என்.என். வோராவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, குற்றவாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடையே உள்ள உறவினால் வரும் பிரச்சனைகளை பற்றி கூறிய அறிக்கை கிட்டத்தட்ட ஒரு இணை அரசாங்கத்தை இயக்கும் குற்றவாளிக் கும்பல்களை எடுத்துக்காட்டியது. மேலும் இந்த அறிக்கை, குற்றவாளி கும்பல்களுக்கு அரசியல்வாதிகளால் மற்றும், அரசியல் கட்சிகளால் மற்றும் அரசுத் துறை செயலர்களால் கொடுக்கப்படும் ஆதரவை விவாதித்தது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.குட்ஹா கமிஷன் பெற்ற வழக்கில் ஏன் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கூடாதென்று உயர்நீதிமன்றம் அப்போது கேள்வி கேட்டது. அமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குனர் மீது புகார் இருந்து பதவியும் விலகாத நிலையில் அதை சிபிஐ விசாரிப்பது தான் சரியாகும்

ஆனால் இவ்வளவு கேள்விகள் எழுந்தும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் அப்போது இருந்த தமிழ் நாடு அரசு தமிழகம் முழுவதும் குட்ஹா விற்பவர்களைக் கைது செய்துள்ளோம், குட்ஹாவைப் பறிமுதல் செய்துள்ளோமென்று அறிக்கை மட்டுமே வந்தது. இந்த அறிக்கையே இவர்கள் இத்தனை வருடங்களாக இலஞ்சம் வாங்கிக்கொண்டு குட்ஹா விற்க அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒரு பொருளை தடை செய்த பிறகும் இலஞ்சம் பெற்றுக் கொண்டு அந்தத் தடையை கண்டுகொள்ளாமலிருப்பதும்  காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த அரசாங்கத்தின் வாடிக்கையான செயலாகவே இருந்து வந்தது. குட்ஹா விஷயத்தில் வசமாக தற்போது சிக்கிகொண்டார்கள். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு உடனடியாக அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அப்போது காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் இருவரையும் பதவி விலகும் படி அறிவுறுத்தி  உடனடியாக அப்போதே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க  வேண்டுமென்று அறப்போர் இயக்கம் கேட்ட நிலையில் இந்தப் பிரச்சனையில் சரியான முடிவு எடுக்கப்படும் வரை அந்த இயக்கத்தின் சார்பில் அனைத்து மட்டங்களிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதென்பதையும் நாம்  அறிந்ததே 2017 ஆம் ஆண்டு விசாரிக்க வேண்டிய குட்ஹா வழக்கை 2022 ஆம் ஆண்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் சிபிஐ. எல்லாம் மேலிருந்து நடத்தும் அரசியல் தான் என சாமானிய மக்களுக்கே புரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த