முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முதல் பழங்குடியினக் குடியரசுத் தலைவராக இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கிறார் 15 வது குடியரசு தலைவர்

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளரான திருமதி திரௌபதி  முர்மு


6,76,803 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் சார்ந்த பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெற்ற 3,80,177 வாக்குகளை விட 2,96,626 வாக்கு மதிப்புகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் நாட்டின் முதல் பழங்குடியினக் குடியரசுத் தலைவராக இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கிறார்.

மொத்தமுள்ள 771 நாடாளுமன்ற உறுப்பினர்களில் காலியாக இருக்கும் இடங்களில் உள்ள ஐந்து பேரைத் தவிர மற்றுமுள்ள அனைவரும் வாக்களித்தனர்.  அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், மற்றும் காலியாகவிருக்கும் ஆறு நபர்கள் நீங்கலாக 4,025 பேர் வாக்களித்தனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், மணிப்பூர், மிஷோரம், சிக்ஹிம் ஆகிய மாநிலங்களில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாகத் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி திரௌபதி முர்மு அனைத்து மாநிலங்களிலும் ஒரு வாக்கை பெற்ற நிலையில்,



எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​ஆந்திரப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெறவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு முடிந்த நிலையில். 4754 வாக்குகள் பதிவாகின, அதில் 4701 செல்லுபடியாகும் மற்றும் 53 செல்லாதவையாக இருக்கும் நிலையில். ஒதுக்கீடு (ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளருக்கு) 5,28,491. திருமதி. திரௌபதி முர்மு 2824 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்றதில் 6,76,803.1,877 முதல் விருப்பு வாக்குகள் யஷ்வந்த் சின்ஹாவால் பெறப்பட்டன - மதிப்பு 3,80,177 திரௌபதி முர்மு பெற்ற முதலாவது விருப்பு வாக்குகள் தேவையான ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்தது, இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு திருமதி திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி என்ற முறையில் : பிசி மோடி அறிவித்தார்.

கேரளா மாநிலத்தில் தான் ஒரு வாக்கு மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பெற்றுள்ளார்.

கேரளா, மேற்க வங்காளம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே எதிர் கட்சிகளின் வேட்பாளர் திரு. யசுவந்த் சின்கா பெற்றுள்ளார். ஏனைய மாநிலத்திலிருந்து அவர் ஏன் எதிர்க்கட்சிகள் ஆதரவைப் பெற இயலவில்லை? என்ற நிலையில் 







குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தான் அதிக எண்ணிக்கையிலிருந்தன. ஆனால் 64.03 விழுக்காடு வாக்குகள் எப்படிப் பெற்றார் ? என்ற வினா மத்தியில் நிலையான வெற்றி பெற்று திருமதி திரௌபதி முர்மு 15 வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி முதல் இராஷ்டிரபதி பவனில் குடியேறும் நிலையில் எந்த அளவுக்கு வசதியாகவும் பறந்து விரிந்து கிடைக்கிறதோ, அதேபோல இந்தியக் குடியரசுத் தலைவர் விடுமுறை நாட்களைக் கழிக்க இந்தியாவிலேயே இன்னும் இரு பங்களாக்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரத்தில் ராஷ்டிரபதி நிலையம் என்கிற பெயரிலும், இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் ஒரு சொகுசு பங்களாவும் குடியரசுத் தலைவரின் வருகைக்காக எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


இது கோடைக்கால குளிர்கால வாசஸ்தலம் என்றும், வட இந்தியா தென்னிந்தியாவின் ஒற்றுமையையும் கலாச்சாரப் பகிர்வையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இத்தனை பெரிய பிரம்மாண்ட மாளிகையை, சொல்லப்போனால் இந்திய அரசின் முக்கிய குறியீடுகளில் ஒன்றாகத் திகழும் இந்த அலுவலகத்தைப் பராமரிக்க, பாதுகாக்கப் பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவருக்கு உதவ என நூற்றுக்கணக்கான உதவிப் பணியாளர்கள் இருப்பர்.இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 w 22 புல்மென் கார்ட் காரும், குடியரசுத் தலைவர் இந்தியாவின் பிரதிநிதியாக மேற்கொள்ளும் பயணங்களுக்கு லிமோஷன் (limousine) காரும் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியக் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல அம்சங்கள் இந்த கார்களில் பொருத்தப்படுகின்றன.இந்தியக் குடியரசுத் தலைவராக ஒருவர் பொறுப்பேற்று விட்டால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் வாடகை இல்லா ஒரு சொகுசு வீடு போன்றவை வழங்கப்படும்  இந்தியக் குடியரசுத் தலைவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள பிரசிடெநன்ட் பாடிகார்ட் (PBG) என்கிற பெயரில் ஒரு தனி பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. இது உலகின் மிக வலிமையான ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவத்தின் மிகப் பழமையான யூனிட் என்பதாகும். பொதுவாக பிபிஜி யூனிட் போர் இல்லாத காலங்களில் பெயருக்குச் செயல்படும் ஒரு யூனிட்டாகவே இருக்கும். போர் மூண்டால் ஒட்டுமொத்த பி பி ஜி யூனிட்டும் களத்திலிறக்கப்படும். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் புதிய குடியரசுத்தலைவருக்கு சிறப்பு வாழ்த்துங்கள் உரித்தாக்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த