முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முதல் பழங்குடியினக் குடியரசுத் தலைவராக இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கிறார் 15 வது குடியரசு தலைவர்

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளரான திருமதி திரௌபதி  முர்மு


6,76,803 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் சார்ந்த பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெற்ற 3,80,177 வாக்குகளை விட 2,96,626 வாக்கு மதிப்புகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் நாட்டின் முதல் பழங்குடியினக் குடியரசுத் தலைவராக இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கிறார்.

மொத்தமுள்ள 771 நாடாளுமன்ற உறுப்பினர்களில் காலியாக இருக்கும் இடங்களில் உள்ள ஐந்து பேரைத் தவிர மற்றுமுள்ள அனைவரும் வாக்களித்தனர்.  அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், மற்றும் காலியாகவிருக்கும் ஆறு நபர்கள் நீங்கலாக 4,025 பேர் வாக்களித்தனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், மணிப்பூர், மிஷோரம், சிக்ஹிம் ஆகிய மாநிலங்களில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாகத் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி திரௌபதி முர்மு அனைத்து மாநிலங்களிலும் ஒரு வாக்கை பெற்ற நிலையில்,



எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​ஆந்திரப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெறவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு முடிந்த நிலையில். 4754 வாக்குகள் பதிவாகின, அதில் 4701 செல்லுபடியாகும் மற்றும் 53 செல்லாதவையாக இருக்கும் நிலையில். ஒதுக்கீடு (ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளருக்கு) 5,28,491. திருமதி. திரௌபதி முர்மு 2824 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்றதில் 6,76,803.1,877 முதல் விருப்பு வாக்குகள் யஷ்வந்த் சின்ஹாவால் பெறப்பட்டன - மதிப்பு 3,80,177 திரௌபதி முர்மு பெற்ற முதலாவது விருப்பு வாக்குகள் தேவையான ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்தது, இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு திருமதி திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி என்ற முறையில் : பிசி மோடி அறிவித்தார்.

கேரளா மாநிலத்தில் தான் ஒரு வாக்கு மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பெற்றுள்ளார்.

கேரளா, மேற்க வங்காளம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே எதிர் கட்சிகளின் வேட்பாளர் திரு. யசுவந்த் சின்கா பெற்றுள்ளார். ஏனைய மாநிலத்திலிருந்து அவர் ஏன் எதிர்க்கட்சிகள் ஆதரவைப் பெற இயலவில்லை? என்ற நிலையில் 







குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தான் அதிக எண்ணிக்கையிலிருந்தன. ஆனால் 64.03 விழுக்காடு வாக்குகள் எப்படிப் பெற்றார் ? என்ற வினா மத்தியில் நிலையான வெற்றி பெற்று திருமதி திரௌபதி முர்மு 15 வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி முதல் இராஷ்டிரபதி பவனில் குடியேறும் நிலையில் எந்த அளவுக்கு வசதியாகவும் பறந்து விரிந்து கிடைக்கிறதோ, அதேபோல இந்தியக் குடியரசுத் தலைவர் விடுமுறை நாட்களைக் கழிக்க இந்தியாவிலேயே இன்னும் இரு பங்களாக்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரத்தில் ராஷ்டிரபதி நிலையம் என்கிற பெயரிலும், இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் ஒரு சொகுசு பங்களாவும் குடியரசுத் தலைவரின் வருகைக்காக எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


இது கோடைக்கால குளிர்கால வாசஸ்தலம் என்றும், வட இந்தியா தென்னிந்தியாவின் ஒற்றுமையையும் கலாச்சாரப் பகிர்வையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இத்தனை பெரிய பிரம்மாண்ட மாளிகையை, சொல்லப்போனால் இந்திய அரசின் முக்கிய குறியீடுகளில் ஒன்றாகத் திகழும் இந்த அலுவலகத்தைப் பராமரிக்க, பாதுகாக்கப் பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவருக்கு உதவ என நூற்றுக்கணக்கான உதவிப் பணியாளர்கள் இருப்பர்.இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 w 22 புல்மென் கார்ட் காரும், குடியரசுத் தலைவர் இந்தியாவின் பிரதிநிதியாக மேற்கொள்ளும் பயணங்களுக்கு லிமோஷன் (limousine) காரும் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியக் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல அம்சங்கள் இந்த கார்களில் பொருத்தப்படுகின்றன.இந்தியக் குடியரசுத் தலைவராக ஒருவர் பொறுப்பேற்று விட்டால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் வாடகை இல்லா ஒரு சொகுசு வீடு போன்றவை வழங்கப்படும்  இந்தியக் குடியரசுத் தலைவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள பிரசிடெநன்ட் பாடிகார்ட் (PBG) என்கிற பெயரில் ஒரு தனி பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. இது உலகின் மிக வலிமையான ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவத்தின் மிகப் பழமையான யூனிட் என்பதாகும். பொதுவாக பிபிஜி யூனிட் போர் இல்லாத காலங்களில் பெயருக்குச் செயல்படும் ஒரு யூனிட்டாகவே இருக்கும். போர் மூண்டால் ஒட்டுமொத்த பி பி ஜி யூனிட்டும் களத்திலிறக்கப்படும். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் புதிய குடியரசுத்தலைவருக்கு சிறப்பு வாழ்த்துங்கள் உரித்தாக்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...