முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மற்றும் குஜராத்திற்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் பயணம்

தமிழ்நாடு மற்றும் குஜராத்திற்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் பயணம்


மேற்கொள்கிறார். சபர்கந்தாவில் உள்ள சபர் பால்பண்ணையில்

ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்கவும்,  அடிக்கல் நாட்டவும் உள்ளார்

இந்தத் திட்டங்கள் இந்தப் பகுதியின் ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு உள்ளூர் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வருவாயை அதிகரிக்கவும் உதவும்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் தொடங்கிவைக்கிறார்

செஸ் ஒலி்ம்பியாட் இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது; இந்தப் போட்டியில் எப்போதும் இல்லாத மிகப்பெரிய அணியை இந்தியா களமிறக்குகிறது


அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்

காந்திநகரில் உள்ள கிஃப்ட் நகரில் ஐஎஃப்எஸ்சிஏ தலைமையகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவிருக்கிறார்

கிஃப்ட் நகரில் இந்தியாவின் முதலாவது சர்வதேச தங்கப்பரிமாற்ற சந்தையையும் பிரதமர் தொடங்கிவைப்பார்



2022 ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். ஜூலை 28 அன்று நண்பகல் 12 மணியளவில்  சபர்கந்தாவின் கதோடா சவுக்கியில் உள்ள சபர் பால்பண்ணையில் பல்வகைத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இதன் பின் சென்னை செல்லவிருக்கும் பிரதமர், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் பிற்பகல் 6 மணியளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை  தொடங்கிவைப்பார்.

ஜூலை 29 அன்று காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பார். அதன் பின் குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப (கிஃப்ட்) நகருக்கு பயணம் செய்ய அவர் காந்திநகர் செல்லவிருக்கிறார். அங்கு பிற்பகல் 4 மணியளவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

  குஜராத்தில் பிரதமர்

ஊரகப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதிலும், விவசாயத்தையும் அது சார்ந்த செயல்பாடுகளையும் அதிக உற்பத்தித்திறன் கொண்டதாக மாற்றுவதிலும் அரசு முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தத் திசையில் மேலும் ஒரு முன்னெடுப்பாக ஜூலை 28 அன்று சபர் பால்பண்ணைக்கு பயணம் செய்து ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகைத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்தத் திட்டங்கள் உள்ளூர் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும், அவர்களின் வருவாயை அதிகரிக்கும், மேலும் இந்தப் பகுதியில் ஊரகப்  பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும்.

சபர் பால்பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 120 மில்லியன் டன் உற்பத்தி திறனுடன் பவுடர் தொழிற்சாலையை பிரதமர் தொடங்கிவைப்பார். ஒட்டுமொத்தத் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகமாகும். இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நிலைகளை எட்டுவதாக இருக்கும். இது ஏறத்தாழ கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத  அதிகபட்ச எரிசக்தி பாதுகாப்புக் கொண்டதாகும். இந்தத் தொழிற்சாலை பெருமளவில் பேக் செய்யும் நவீன, முழுவதும் தானியங்கி முறையை கொண்டிருக்கும்.

சபர் பால்பண்ணையில் நுண்கிருமி நீக்கி, பால் பேக் செய்யும் தொழிற்சாலையையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இது நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பேக் செய்யும் திறன் கொண்ட நவீன தொழிற்சாலையாகும். இந்தத் திட்டம் ரூ.125 கோடி மொத்த முதலீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் தொழிற்சாலை அதிகபட்ச எரிசக்திப் பாதுகாப்புடன் நவீன தானியங்கி முறையைக் கொண்டதாகவும் சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தைக் கொண்டதாகவும் இருக்கும்.  பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருவாயை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் உதவும்.

சபர் சீஸ் மற்றும் கெட்டி உலர் தயிர் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்தத் திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு ரூ. 600 கோடியாகும். இந்தத் தொழிற்சாலை செடார் பாலாடைக்கட்டி (நாளொன்றுக்கு 20 மில்லியன் டன்) மொஸரெல்லா பாலாடைக்கட்டி (நாளொன்றுக்கு 10 மில்லியன் டன்) பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி (நாளொன்றுக்கு 16 மில்லியன் டன்) பாலாடைக்கட்டி தயாரிக்கும் போது உருவாகும்  மோர் உலர் தொழிற்சாலையின் மூலம் நாளொன்றுக்கு 40 மில்லியன் டன் அளவுக்கு  உலர்த்தப்படும்.

சபர் பால்பண்ணை என்பது அமுல் குறியீட்டின் கீழ் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதலுக்கான குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.

ஜூலை 29 அன்று காந்திநகரில் உள்ள கிஃப்ட் நகருக்கு பிரதமர் பயணம் செய்வார். கிஃப்ட் நகர் என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகளின் ஒருங்கிணைந்த மையமாக உள்ளது.

இந்தியாவில் நிதி சார்ந்த உற்பத்தி பொருட்கள், நிதி சார்ந்த சேவைகள், நிதி சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்குமான ஒருங்கிணைந்த முறைப்படுத்தல்  அமைப்பாக விளங்குகின்ற சர்வதேச நிதிச்சேவைகள் மையத்தின் தலைமையகக் கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

கிஃப்ட் நகரில் இந்தியாவின் முதலாவது சர்வதேச தங்கப்பரிவர்த்தனை அமைப்பையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இந்த அமைப்பு இந்தியாவில் தங்கத்தின் நிதிமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு அப்பால், தரம் மற்றும் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்தி சீரான விலைக்கு வழிவகுக்கும். உலகளாவிய தங்கச்சந்தையில் சரியான இடத்தை இந்தியா பெறுவதற்கு இது உதவும். மேலும் நேர்மை மற்றும் தரத்துடன் உலகளாவிய மதிப்பு தொடருக்கும் உதவும்.

 தமிழ்நாட்டில் பிரதமர்

ஜூலை 28 அன்று சென்னை ஜவஹர்லால்நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளில் பிரம்மாண்டமான தொடக்கவிழாவை பிரதமர் பிரகடனம் செய்வார்.

 2022 ஜூன் 19 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தி தேசிய விளையாட்டரங்கில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைமையகத்தை நோக்கி செல்வதற்கு முன் இந்த ஜோதி இந்தியாவில் 40 நாட்களுக்கும் அதிகமாக சுமார் 20,000 கி.மீ. தூரத்திற்கு 75 முக்கியமான இடங்கள் வழியாகப் பயணம் செய்து மகாபலிபுரத்திற்கு வந்து சேர்கிறது.

 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் கௌரவம் மிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக்  கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்குகிறது.

ஜூலை 29 அன்று சென்னையில் பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்வார். இந்த விழாவில் அவர் 69 பேருக்கு தங்கப்பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்குவார். மேலும் அங்கு திரண்டிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார்.

அண்ணா பல்கலைக்கழகம் 1978 செப்டம்பர் 4 அன்று நிறுவப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி என் அண்ணாதுரையின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 3 பிராந்திய வளாகங்களையும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக 13 அமைப்பு கல்லூரிகளையும், 494 இணைப்பு கல்லூரிகளையும் இது பெற்றிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த