முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜல்சக்தி முன்பாக ஜனசக்தி நடத்தும் ஜீவ மரணப் போராட்டம் உண்மை தான் என்ன!?

கோயமுத்தூர் மாநகராட்சிக் குடிநீர் விநியோகத்தை, பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனம் 400 மில்லியன் யூரோ மதிப்பில் ஒப்பந்தம் போட்டது.

கோயமுத்தூர் மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் முதலாவதாக, பில்லூர் இரண்டாவதாக, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு, 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறநிலையில், 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டு  சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமானது முப்பதாண்டுகளுக்கு, 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 



திட்டத்தைச் செயல்படுத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் நிறுவனம் முதல் ஒரு வருடத்தில் திட்டக் கள ஆய்வும், பின்னர்  நான்கு ஆண்டுகளில் திட்டத்தைச் செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது 




கோயமுத்தூர் மாநகராட்சி திட்டம் குறித்து சூயஸ் நிறுவனம் தன்னுடைய இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவின் கோயமுத்தூரில் .6 மில்லியன் குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் மற்றும் செயல்படுத்தும் திட்டத்திற்கு சூயஸ் நிறுவனத்தை கோயமுத்தூர் மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் 26 ஆண்டுகள் கொண்ட 400 மில்லியன் யூரோஸ் மதிப்புடைய மிகப்பெரிய குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை சூயஸ் வென்றுள்ளது.



எங்களின் முதல் பணி 2012-ஆம் ஆண்டில் டெல்லியின் மால்வியா மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் மற்றும் விநியோகம் செய்ததாகும்.  அதே போன்று இந்தியாவின் மெட்ரோ நகரங்களான கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் விநியோகம் செய்யும் பணிகளை வெற்றிகரமாகச் செய்துள்ளோம்" என்று தெரிவித்த தகவல் இடம்பெற்றுள்ளது.


தற்போது சூயஸ் நிறுவனம் திட்டத்திற்காக நேரடியாகக் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிநீருக்காக தனியார் நிறுவனம் அதிகமாக கட்டணம் வசூலிக்கும் எனவும் குடிநீருக்கான கட்டணத்தை மாநகராட்சி வசூலிக்காததனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் எனவும்.  நிறுவனம் நிர்ணயிக்கும் அளவிற்கு கட்டணத்தைச் செலுத்த மறுத்தால் விநியோகம் நிறுத்தப்படுமென்று மக்கள் மத்தியில் பயம் மற்றும் பீதி காரணமாக எதிர்ப்பு எழுந்துள்ளது. கோயம்புத்தூர் குடிநீர் விநியோக பிரான்சின் சூயஸ் கம்பெனிக்கு ரூபாய் 3100 கோடிக்கு 30 வருஷம்னு தாரை வார்த்த போதே ஊரிலுள்ள மக்களுக்கு இனி சொந்தமா போர்வெல்லோ கிணறோ வைத்திருக்க முடியாதென பயம் நிலவிய நிலையில் 




தண்ணிர்னு எவ்வளவு விலைக்கு , எவ்வளவு அளவு தருகிறார்களோ அந்த அளவைத்தான் உபயோகிக்க வேண்டும். அதுவும் உத்தரவு தந்த போது அந்த நிறுவனம் ஆர்டிஐ-2005 ன் கீழ் வாராதென தெளிவாகவே சொல்லியிருக்க. அவர்கள் போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள். அதில் இலாபத்துடன்.

சில வருடங்களுக்கு முன்னால் மத்திய அரசு ஜல்சக்தி அமைச்சகம் தண்ணீரைப் பொதுப் பிரிவிலிருந்து வணிகப் பயன்பாட்டுப் பிரிவில் கொண்டு வந்த போதே இப்படித்தான் வருமெனத் தெரியும்.

கடைசியாக எந்த நிலையில் வர வேண்டுமோ அங்கே வந்தாயிற்று. இப்போது கூட பலர் பதறிப்போய் ரூபாய் பத்தாயிரம்  கட்டும் படி சொல்கிற நிலையில் எதிராகக் கொதிக்கும் நிலை. விஷயம் அதிலில்லை அப்படிக் கட்டிய பின்னர் கணக்கில் வரவானதும் அதில ஒரு மீட்டர் மாட்டி எடுக்கற தண்ணீர் அளவுக்கு காசு உண்டா இல்லையா என்பதை அறிந்த பிறகு தான் உண்மை வரலாறு தெரியும்.

பணம் கட்டு இல்லை போர்வெல்ல மூடிவிடு இந்த நிலையில்  முதலில் தங்க நாற்கரச்சாலைனு வந்தபோது ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்த மக்கள் (டோல் கேட்) அதாவது சுங்க வரிக் கம்பெனி சுங்க வரி எவ்வளவு சொல்கிறதோ கட்டிட்டு சரி எனப் பாஸ்ட் டிராக் பயணம் போவது போல 

கோயமுத்தூர் மட்டுமல்ல ஈரோடு கூட அபெக்ஸ் கம்பெனிக்கு (பெக்டெல் கம்பெனி பினாமி) தாரை வார்த்த நிலையில் பலவருஷமாகிறது. இனி ஒவ்வொரு நகரமாக.இநத நிலை வந்தால் 

பாலாற்றுப் படுகை மொத்தமும் தோல்கம்பெனி புண்ணியத்தால் காவேரித் தண்ணீரை நம்பி சந்தோசமாக இருக்கிறதால் அவங்களுக்கு கஷ்டமே இல்லை இரண்டுநாள் காவிரி கூட்டுக் குடிநீரை நிறுத்தினால்  கூட மக்கள் குடிக்க நீர் கிடைக்காது. அதனால் 

ஆயிரம் கோடியை தூக்கி கூட்டுக் குடிநீர் திட்டத்தில தண்ணீர் குடியுங்கள் என நம் மக்களிடம் சும்மாவே தூக்கித்  தருவதற்கு ஜப்பான் நாடு என்ன தர்மவான்களா ? வியாபாரம் நடத்தும் வியாபாரிகள்.அந்தந்தப் பகுதிகளில்‘ தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கம்‘ என அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைப்பினர், பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அவரவர் எல்லைக்குள் தண்ணீர் வழங்கும் முகமையாக இவர்கள் செயல்பட வேண்டும்.தண்ணீரை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் என்ற ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த ஆணையம் தண்ணீருக்கு கட்டணம் விதிக்க வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். இந்த கட்டண விகிதம் ஆண்டுதோறும் மாற்றப்பட வேண்டும். நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுதல் வேண்டும்.தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்க வேண்டும். தண்ணீரின் நீரோட்ட கோணத்தை மாற்றக்கூடாது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை உறுதி செய்ய வேண்டும். அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சரியான திட்டமிடல்கள் இருத்தல் வேண்டும்.ஆற்றுப்படுகைகள், நீர்நிலைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்தி, நீர் நிலைகளில் நீர் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும்.தண்ணீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்தவே நீர்கொள்கை ஜல்சக்தி அமைச்சகம் மூலம் வகுக்கப்பட்டுள்ளதன் படி தண்ணீரை வர்த்தகப் பொருளாகக் கருதலாம். தண்ணீர் குறித்த சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருந்தாலும் தேசிய அளவிலான பொதுக் கொள்கை உருவாக்கப்படும்.

அதே நேரம் மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது. தண்ணீரை விநியோகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு சட்ட முன் வடிவை தற்போது மத்திய அரசு வகுத்துள்ளது.


இந்த சட்ட முன் வடிவுகள் சட்டமானால் நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் பணம் கட்ட வேண்டும் என்பதும், தண்ணீர் விநியோகம் தனியார் மயமாகும். இந்த முடிவு விவசாயிகளுக்கு பலத்த அடி என்பதும் குறிப்பிடத்தக்கது

வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் போன்ற கருத்துகள் நீர் கொள்கை 2012 ஆம் ஆண்டில் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த தேசிய நீர் வளக்கூட்டத்தில் விவாதம் நடந்தது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். அது நடக்குமா என்று தான் முடிவு தெரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த