முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிள்ளைச்சாவடி ஆனந்த ரங்கம் பிள்ளை அரசு சிறப்பு பள்ளியில் நடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமிர்தப் பெருவிழா

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாற இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்: துணைவேந்தர் டாக்டர் எஸ்.மோஹன்

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இந்தியா பல துறைகளில் முன்னேறி வருகிறது. நாம் வளரும் நாடுகள் பிரிவில் தான் இருக்கிறோம். இந்தியா தனது 100 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வளர்ந்த நாடாக மாறி இருக்கும். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று மாணவர்களும் இளைஞர்களும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். உணவு, உடை, இருப்பிடம், தொழில், வேலை, வருமானம் ஆகியவற்றில் நம் நாடு தன்னிறைவு பெற்ற நாடாக மாற வேண்டும். சுதந்திரத்திற்காக இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது நாட்டு முன்னேற்றத்தில் நாம் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது தான் என்று புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.மோஹன் கேட்டுக் கொண்டார்.


 புதுச்சேரியில் உள்ள மத்திய மக்கள் தொடர்புத் துறை கள அலுவலகம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்படும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து இன்று (10.8.2022) பிள்ளைச்சாவடி ஆனந்த ரங்கம் பிள்ளை அரசு சிறப்பு பள்ளியில் நடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமிர்தப் பெருவிழா மற்றும் வீடுதோறும் மூவர்ணக்கொடி வழங்குதல் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போது துணைவேந்தர் இவ்வாறு தெரிவித்தார்.

சுதந்திரம் என்பது நமக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் உரிமை

ஆகும். நமது உரிமை அடுத்தவர் உரிமையை மீறாமல் இருக்க வேண்டும். சித்த மருத்துவம் நமது பாரம்பரிய மருத்துவ முறையாகும். புதுச்சேரியிலேயே 28 சித்தர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. சித்த மருத்துவத்தில் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று துணை வேந்தர் மோஹன் மேலும் கேட்டுக் கொண்டார்.

மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய தலைமை அலுவலர் டாக்டர் ஆ.ராஜேந்திர குமார் நோக்கவுரை ஆற்றினார். மத்திய மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் முனைவர் தி.சிவக்குமார் தலைமை உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சமூக நலத் துறை துணை இயக்குநர் திரு.பி.கனகராஜ், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.ராஜேந்திரன், முனைவர் ஜே.குமரன், அரசு சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.சாம்பவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இந்திய விடுதலைப் போராட்டம் குறித்து நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை துணை வேந்தர் மோஹன் வழங்கினார்.

தத்தம் வீடுகளில் ஏற்றி வைப்பதற்கு மூவர்ணக் கொடிகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.

மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அமுக்கரா சூரண மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ஆனந்த ரங்கப்பிள்ளை அரசு சிறப்பு பள்ளிக்கு மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் பக்கெட், குவளை உட்பட பாத்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. டாக்டர் எஸ்.சண்முகராம் தலைமையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

முன்னதாக மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய டாக்டர்

இர.ரத்தினமாலா வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.எஸ்.வீரமணி நன்றி கூறினார். நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சிறப்பு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...