முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடி நிதி நிறுவனங்கள் நடத்தி ஊருககே ராமம் போட்ட நாராயணன்கள்

தமிழகத்தின் மக்கள் எதிர்கொள்ளும் மற்றோரு  அபாயம்.


மோசடி நிதி நிறுவனங்கள் பற்றி பல மாதங்களாகவே பல எச்சரிக்கைகள்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில்  மூன்று மோசடி நிறுவனங்கள் சுருட்டிய தொகை மட்டும், பல்லாயிரம் கோடி ரூபாய்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை சொல்லும் தொகையே பத்தாயிரம் கோடி என்றால், கள நிலவரம் இதைவிட பல மடங்கு அதிகமாகும்  என்த் தோன்றுகிறது. 

தங்களுடைய பெரிய அளவு சேமிப்புகளை  முதலீடு செய்து ஏமாந்து போயிருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை பற்றி அறிந்தால் தலை சுற்றும் 

கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என வித்தியாசம் இல்லாமல் பல பேர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசம் போயுள்ளனர்.

கூலித் தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வர்த்தகம் செய்யும் நபர்கள் வரை மோசடி நிறுவனங்களுக்கு இரையாகின்றனர். 

சில்லறை வியாபாரிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த வட்டியில் வசூலித்து வந்தவர்கள் கூட கொடுப்பதை நிறுத்திக் கொண்டு மொத்தமாக இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்து போயிருக்கிறார்கள்.

இதனால் சிறிய மற்றும் நடுத்தர வியாபார வர்க்கமே ஒட்டுமொத்தமாய்  கடுமையான பொருளாதார சிக்கலில் தற்போது மாட்டிக் கொண்டுள்ளது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஒரு அவசரத்திற்கு பணம் புரட்ட முடியாத நிலையை கண்கூடாகவே பார்க்க முடிகிறதோடு மற்றவர்கள் கேள்விப்பட முடிகிறது.


பலரும் புலம்புவதைப் பார்த்தால் இவர்கள் எப்படி இதிலிருந்து மீண்டு வரப் போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி..மோசடி நிறுவனங்களை துவக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். 

அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. ஆனால் அந்தக் கடமையை செய்வதில் காவல்துறை தோற்றுவிட்டது என்று தான் கூறவேண்டும்  வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு 'இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்' என்ற நிறுவனம்  இதன் உரிமையாளர்களாக லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தினர். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் தருவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனம் வசூல் செய்துள்ளது. அவ்வாறு வசூல் செய்யும் நபர்களிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு இரண்டு விழுக்காடு வட்டிக்கு கடன் வாங்குவதாக ஒப்பந்தம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.


இவ்வாறு வசூல் செய்த பணத்தை பங்கு வர்த்தகத்தின் முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பதாகவும், அந்த லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு பங்கு தருவதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்தனர்.பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து முதலீடு செய்தவர்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கு 8,000 ரூபாய் மாதமாதம் கிடைத்ததை அடுத்து பலரும் அதிகப்படியான தொகையை முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே இதேபோன்று ’ஆருத்ரா கோல்ட் டிரேடிங்’ என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாய் மாதம் தருவதாகக்கூறி மோசடி செய்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையில் சோதனை நடத்தினர். சுமார் 1,400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, இதேபோன்று மோசடியில் ஈடுபடும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் மீதும் புகார்கள் எழுந்தன குறிப்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கிடைத்த ரகசியத்கவலின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்தார். தற்போது தமிழ்நாடு முழுவதும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்திற்குத் தொடர்பான 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை கிண்டியிலுள்ள தாமரை டெக் பார்க் கட்டடத்தில் செயல்படும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் கார்ப்பரேட் அலுவலகத்திலும், மயிலாப்பூர், போரூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதேபோன்று வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருக்கும் தலைமை அலுவலகம், அரக்கோணம், நெமிலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடந்தது. காட்பாடி வி.ஜி.ராவ் நகரிலிருக்கும் லட்சுமி நாராயணன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. முன்னதாக பணத்தை முதலீடு செய்தவர்கள் புகார் அளிப்பதை தடுப்பதற்காக வாட்ஸ் ஆப் குழு அமைத்து பலருக்கும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் அண்ட் சர்வீஸ் உரிமையாளர் லட்சுமி நாராயணன் ஆடியோ வெளியிட்டதும் தெரிய வந்தது.

சோதனையின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பேரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் பணம் தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுமென பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆக  நாராயணன்கள் கூடி ஊருக்கே இராமம் போட்ட கதை இன்னும் தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த