முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய ஊழல் பெருச்சாளிகள் மீதான நடவடிக்கைகள்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பாஸ்கர் வீட்டில் சிக்கிய 214 ஆவணங்கள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு


நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்கிறார். அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல நிறுவனங்களையும் நடத்தி வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக



எழுந்த புகாரின் பேரில் , வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.




சேலம், நாமக்கல், தருமபுரி, மதுரை, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் 80 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்குத் தொடங்கிய  சோதனை இரவு 7 மணி வரை நடந்தது. மொத்தம் 13 மணிநேரம்  நடந்துள்ள சோதனையில் நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் சகோதரி வீடு, முன்னாள் நகராட்சித் துணைதலைவர் சேகர், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் மயில்சுந்தரம், ஸ்ரீதேவி எக் சென்டர் உரிமையாளர் மோகன், முன்னாள் நகராட்சிப் பொறியாளர் கமலநாதன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கோபிநாத், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பொறியாளர் கணேசன், கொண்டிசெட்டிப்பட்டி பைனான்ஸ் அதிபர் சங்கரன், நல்லிபாளையம் பைனான்ஸ் அதிபர் விஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.


நேற்று ஒரே நாளில் நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தகவல் தெரிவித்து உள்ளதுடன்.



மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.


மொத்தம் வழக்குக்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 900 மற்றும் 214 ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை முதல் ஆய்வு செய்து வருகிறார்கள், அந்த சொத்துகள் எப்படி வாங்கப்பட்டன, அதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள். இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் யார், யார் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு நடத்தி வருகறார்கள். ஆய்வு முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனால் இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர். அடுத்ததாக:-



பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

கே.சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் வெங்கடேச பெருமாள் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.




இது குறித்து ராகவன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை பினாப்தலின் இரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அரசு சாட்சி முன்னிலையில் அந்த பணத்தை பெறும் போது கிராம நிர்வாக அலுவலரை கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர். நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

அடுத்ததாக:-




அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏலாக்குறிச்சி கிராம வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார், சச்சினாந்தம் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் பெற்றுள்ளார். இது குறித்து சச்சிதானந்தம் அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார்.  சச்சிதானத்திடம் மேலும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், செந்தில்குமாரை கையுடன் கைது செய்தனர். அடுத்ததாக:-

வீட்டுமனையை அளவீடு செய்ய ரூபாய்.2 ஆயிரம் லஞ்சம் - நில அளவையர் கைது!




சேலம் மாவட்டம் சங்ககிரியில் வீட்டுமனையை அளவீடு செய்ய லாரி உரிமையாளரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கஸ்தூரிபட்டியை சேர்ந்தவர் கணேசன். லாரி உரிமையாளர். இவர் தனது வீட்டுமனையை அளவீடு செய்யக்கோரி, சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது, அங்கு நில அளவையராக பணிபுரியும் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த வைத்தீஸ்குமார்(வயது 40) என்பவர், வீட்டுமனையை அளவீடு செய்ய ரூபாய்.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத கணேசன், இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர்.

அங்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனைப்படி கணேசன் நேற்று பின்லாந்தின் இரசாயனம் தடவிய ரூபாய்.2 ஆயிரத்தை அரசு சாட்சி முன்னிலையில், நில அளவையர் வைத்தீஸ்குமாரிடம் வழங்கினார். அப்போது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரை கையுடன் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.    அடுத்ததாக:-ரூபாய் .5000 லஞ்சம் கூட்டுறவு சங்க ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

ஈரோடு மாவட்டம் பாண்டியம்பாளையம் அடுத்த புதுகுமாரபாளையம் சம்பத்குமார் (வயது 34). விவசாயி. இவர் அவரது மனைவி மகேஸ்வரி பெயரில், பயிர்க்கடன் பெறுவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டில் பாண்டியம்பாளையம் நல்லாம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பித்தார். இந்தச் சங்கத்தில் ஊழியராக (கிளார்க்) இருந்த ரமேஷ் (வயது 50), அவரிடம் பயிர்க்கடனுக்கு பரிந்துரைக்க ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிலுவையில் நீதிபதி சரவணன் விசாரித்து, ரமேசுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய்.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...