நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளில் வெப்பநிலை இல்லாமல் நிகர அளவை குறிப்பிடும்படி உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் / பாக்கெட்டுகளில் அடைப்பவர்கள் / இறக்குமதியாளர்கள், சமையல் எண்ணெய் போன்றவற்றின் நிகர அளவை அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வெப்பநிலையைக் குறிப்பிடாமல் எடை அலகுகளில் நிகர அளவை ஆறு மாதங்களுக்குள் அதாவது. ஜனவரி 15, 2023 வரை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சமையல் எண்ணெய், வனஸ்பதி, நெய் போன்றவற்றின் நிகர அளவு அல்லது . எடை அறிவிக்கப்பட வேண்டும். அளவாக அறிவிக்கப்பட்டால், பண்டத்தின் சமமான எடையை கட்டாயமாக அறிவிக்க வேண்டும். தொழிற்சாலைகள் நிகர அளவின் அளவை அறிவிக்கும் போது வெப்பநிலையை முன்கூட்டியே குறிப்பிடுவது அவதானிக்கப்பட்டது.
சமையல் எண்ணெயின் எடை வெவ்வேறு வெப்பநிலைகளில் மாறக்கூடியது என்பதால், வாங்கும் போது நுகர்வோர் சரியான அளவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள்/ பேக்கர்கள்/ இறக்குமதியாளர்கள் போன்றவர்கள். குறிப்பிட்ட தயாரிப்புகளை வெப்பநிலை குறிப்பிடாமல் பேக் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச் சூழலில் சமீபத்தில் சென்னையில் விற்பனை செய்யப்பட்ட கலப்பட சமையல் எண்ணெய் 4000 லிட்டர் அளவு கலப்படம் உள்ளதை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு எண்ணெய் விற்பனை செய்யும் கடையில் தரமற்ற, சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த இரகசிய தகவலையடுத்து, அங்கு திடீரென நடத்திய சோதனையில், கடைக்கு அடியில் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியை தரையில் உருவாக்கி, 3,400 லிட்டர் பாமாயிலும், 1000 லிட்டர் சூரிய காந்தி எண்ணெயையும் கலந்து விற்பனை செய்தது தெரியவரவே அந்த எண்ணெயைஅலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.அந்த கடைக்குள் கிடங்காக பயன்படுத்துவதற்கு உரிமம் பெறாமல் சில்லரை விற்பனை செய்த நிலையில் உரிய அங்கீகாரம் பெறாமலும் கடை இயங்கி வந்ததும் சோதனையில் தெரிய வந்த பின்னர், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த தகவல்:- கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்ட கடை தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பத்து 15 நாட்களில் சோதனைகளின் முடிவுகள் வரும். அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடை உரிமையாளர் யாரிடம் எண்ணெய் வாங்குகிறார்கள் என்பது குறித்து விசாரணையில் தெரியவரும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய்.10 லட்சம் வரை அபராத்துடன் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
பல உணவகங்களில் இதுபோன்ற தரமற்ற முறையில் உணவுகள் தயாரிப்பது, உணவுப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்கிறது. அதுபற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். அசைவப் பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவகங்களில் கலர் சாயம் பூசி விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம். அதுபோல தயாரிப்பது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உணவுப் பொருட்களும், உணவகமும் தரமற்ற முறையில் இருந்தால் தொலைபேசி 94440 42322 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு யாரும் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கருத்துகள்