முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான மரணம் குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் செய்தியாளர் சந்திப்பு

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் மாநில குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.             

 கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான மரண வழக்கில் சக்தி இண்டர்நேஷனல் பள்ளித் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 5 நபருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருப்பது நெறிமுறைகளை மீறிய தீர்ப்பென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்‌ தொடர்பான வழக்கில்‌ குற்றம்‌ சாட்டப்பட்டு சிறையில்‌ அடைக்கப்பட்டிருந்த பள்ளித் தாளாளர்‌, செயலாளர்‌, முதல்வர்‌ உள்ளிட்ட ஐந்து பேருக்கும்‌ பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது.     ஒரு வழக்கில்‌ குற்றம்‌ சாட்டப்பட்டவர்கள்‌ தங்களுக்கு பிணை கேட்டு விண்ணப்பிக்கும்‌ போது, நிலைமைகளை கணக்கில்‌ கொண்டு பிணை வழங்கலாமா இல்லையா என்பதில்‌ மட்டுமே நீதிமன்றம்‌ முடிவு எடுக்கும்‌. இதுதான்‌ இதுநாள்‌ வரையிலும்‌ கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை ஆகும் 

ஒட்டு மொத்த தமிழகத்தின்‌ கவனத்தை ஈர்த்த வழக்கில்‌ குற்றம்‌ சாட்டப்பட்டு சிறையில்‌ உள்ள அனைவருக்கும்‌ பிணை வழங்கப்பட்டிருப்பதையும்‌, பிணை உத்தரவில்‌ உயர்நீதிமன்றம்‌


தெரிவித்திருக்கும்‌ கருத்துக்களையும்‌ பார்க்கும்‌ போது பெரும்‌ அதிர்ச்சி ஏற்படுவதோடு, ஸ்ரீமதி மரணம்‌ தொடர்பான பிரதான வழக்கு விசாரணை நிலைகுலைந்து பாதிப்பு ஏற்படுமோ என அச்சம்‌ உருவாகியுள்ளது.

2004 ஆம்‌ ஆண்டு சமன்லால்‌ எதிர்‌ உத்திரப் பிரதேச மாநில அரசு வழக்கின்‌ (896/2004) தீர்ப்பில்‌, 'குற்றம்‌சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படும்‌ போது குற்றத்தின்‌ தன்மையை கணக்கில்‌ கொள்ள வேண்டுமெனவும்‌, குற்றம்‌ சாட்டப்பட்டவர்கள்‌ விடுவிக்கப்பட்டால்‌ அவர்களால்‌ சாட்சியங்கள்‌ மற்றும்‌ தடயங்களை அழிக்க வாய்ப்புள்ளதா என்பது போன்ற அம்சங்களை கணக்கில்‌ கொள்ள வேண்டுமெனவும்‌' உச்சநீதிமன்றம்‌ தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும்‌ 'பிணை மனுவினை விசாரிக்கும்‌ போது வழக்குத் தொடர்பான தகுதி குறித்து விவாதிக்க கூடாது' எனவும்‌ உச்சநீதிமன்றம்‌ தனது தீர்ப்பில்‌ அழுத்தமாக கூறியுள்ளது. இத்தகைய வழிகாட்டுதல்கள்‌ மற்றும்‌ நடைமுறைகள்‌ எதையும்‌ இந்தப் பிணை மீதான விசாரணையின்‌ போது சென்னை உயர்நீதிமன்றம்‌ பின்பற்றவில்லை என்பது மிகவும்‌ அதிர்ச்சிகரமாக உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிஎம் சார்பிலான மனித அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினரின் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தற்கொலை இல்லை. திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு இருக்கிறது என்றும் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கும் பணிகளை மட்டுமே செய்துள்ளது என்றார்.   




   மேலும்‌ 'பிணை மனுவினை விசாரிக்கும்‌ போது வழக்கு தொடர்பான தகுதி குறித்து விவாதிக்க கூடாது' எனவும்‌ உச்சநீதிமன்றம்‌ தனது தீர்ப்பில்‌ அழுத்தமாக கூறியுள்ளது. இத்தகைய வழிகாட்டுதல்கள்‌ மற்றும்‌ நடைமுறைகள்‌ எதையும்‌ இந்த பிணை மீதான விசாரணையின்‌ போது சென்னை உயர்நீதிமன்றம்‌ பின்பற்றவில்லை என்பது மிகவும்‌ அதிர்ச்சிகரமாக உள்ளது.  கள்ளக்குறிச்சி வன்முறை கண்டிக்கத்தக்கது தான். ஆனால் ஏன் நடைபெற்றது என ஆழ்ந்து கவனிக்க வேண்டி உள்ளது. தடையங்களை அழிக்க வன்முறைக்கு பின்னால் பள்ளி நிர்வாகமே இருக்கலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பால் புலன் விசாரணை ஒரு மாதம் முடங்கி போய் உள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. சில தேர்வுக்கு போன மாணவர்களை கூட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறிப்பாக பட்டியலின மாணவர்களை சொல்லி சொல்லி கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.    

மேலும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தற்கொலை இல்லை. திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு இருக்கிறது என்றும் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கும் பணிகளை மட்டுமே செய்துள்ளது என்றார்.கள்ளக்குறிச்சி வன்முறை கண்டிக்கத்தக்கது தான். ஆனால் ஏன் நடைபெற்றது என ஆழ்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.

 பள்ளி நிர்வாகத்தின் பிள்ளைகளை இன்னும் காவல்துறை, சிபிசிஐடி என எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்காதது சந்தேகம் அளிக்கிறது. கள்ளக்குறிச்சி விவரகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை முறையாக செயல்படவில்லை. ஆர்எஸ்எஸ் பாஜகவின் மேலிடம் அழுத்தத்தால் தான் காவல்துறை செயல் இழந்தது என குற்றம்சாட்டினார்.  தஞ்சாவூர் மைக்கேல்பட்டிக்கு சென்ற அண்ணாமலை ஏன் கள்ளக்குறிச்சி சென்று பெற்றோர்களைச் சந்திக்கவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் பாஜக ஆர்.எஸ்.எஸ் என்பதால் அந்த விவகாரம் தொடர்பாக அதனை கண்டு கொள்ளாமல் கல்ல நாடகம் போடுகிறார் அண்ணாமலை என்றார்.  ஸ்ரீமதி மரணித்து 42 நாட்களாகிய நிலையில், இது வரை எந்த சிறிய முன்னேற்றமும் காவல்துறை விசாரணையில் இல்லை. மாணவி மரணத்திற்கான சிபிசிஐடியின் விசாரணைத் தகவல் நீதிமன்றத்திற்கே தெரிவிக்கவில்லை. காவல் துறையின் கைகள் கண்ணுக்கு தெரியாத ஒரு அதிகார மையத்தால் கட்டப்பட்டு உள்ளதோ என்ற கவலை பலருக்கும் உண்டு அதைத் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார் 

தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி அதிகாரத்தில் தான் தமிழக காவல் துறை உள்ளது. சைலேந்திரபாபு  தமிழக டிஜிபியாக உள்ளார். முதலில் பள்ளிக் கூடத்திற்கு ஆதரவாக வெளிப்படையாகவே கருத்துச் சொன்ன டிஜிபி. சைலேந்திரபாபு மக்களின் பெருங் கோபத்தை அடுத்தும், அடுத்தடுத்து வெளி வரும் தகவல்களையடுத்தும் சைலண்ட் நிலைக்கு போய்விட்டார்!

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு 38 நாட்கள் ஆகிய நிலையில் கைதானவர்கள் தரப்பில்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தற்போது மனுவில், ”தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. இன்னும் தங்களை நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளது.

இதற்கு தமிழக காவல்துறை வழக்கறிஞரால் பதில் சொல்ல முடியவில்லை என்பது நீதிபதிக்கே கோபத்தை உருவாக்கிவிட்டது. காவல்துறை பதில் தரவில்லை காரனம் என்ன? அதன் கைகளை கட்டிப் போட்டிருக்கும்            அந்ததிகார மையம் எது?

குற்றவாளிகளை விடுவிப்பது தான் காவல் துறையின் நோக்கமா..? என்பது புரியாத புதிர்.இத்தனை நாட்களில் காவல்துறை இவர்களின் மீதான குற்றத்தை ஒரளவேனும் உறுதிபடுத்தி, நீதிமன்றத்திற்கு அறிக்கை தந்திருந்தால், இந்த ஜாமீன் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருந்திருக்காது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ் செயல்படும் காவல்துறை இந்த வழக்கில் ஆரம்பம் முதலே சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் உள்ளதை பார்த்து வருகிறோம். அதன் விளைவாக இன்று குற்றவாளிகளுக்கு பிணை விடுதலை சாத்தியமாகி உள்ளது!

மக்களின் சத்திய ஆவேசம் மிகுந்த போராட்டத்தின் விளைவால் தான் கைது செய்தனர்.  தற்போது மக்கள்  வேறு பிரச்சினைகளில் இதை மறந்து போயிருக்கலாம்

மக்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பல அப்பாவிகள் இன்னும் சிறையில்!  ஆனால்,  உண்மையான குற்றவாளிகளுக்கோ விடுதலைக்கான வாய்ப்பு என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

மத்தியில் ஆளும் தரப்பு தாங்கள் நினைத்தை சாதிக்கும் அரசியல் சூழல் தமிழகத்தில் அவர்களுக்கு சாத்தியமாகி வருவதன் அறிகுறியாகவே இதை அனைத்து மக்களும் பார்க்கும் நிலை.ஒரு 'ஜாமீன் மனு' விசாரிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர், மேற்கொண்டு வழக்கு விசாரனைக்கு ஒத்துழைப்பாரா, சாட்சிகளை களைப்பாரா அல்லது தலைமறைவாகி விடுவாரா என்பதை எல்லாம் விசாரித்து, போதுமான உறுதியின் அடிப்படையில் பிணை கொடுப்பதா? வேண்டாமா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

போதுமான நம்பிக்கை நீதிமன்றத்திற்கு ஏற்படும்போது பிணை கொடுத்து விடும். இதுதான் இதுவரை பிணை வழக்கில் கையாளப்படும் வழக்கமான நடைமுறை.

எந்த நீதிமன்றமும் வழக்கு விசாரணையில் இருக்கும்போது, குற்றப்பத்திரிக்கை (161 ஸ்டேட்மென்ட்) தாக்கல் செய்து, அதன்பேரில் வாத பிரதிவாதங்கள், சாட்சி விசாரணைகள் எல்லாம் நடைபெறுவதற்கு  முன்பே..கைது செய்யப்பட்ட நபர்களின் ஜாமின் மனு மீதான விசாரணையில், குற்றவாளி அல்லது குற்றமற்றவர் என்று வழக்கு நடத்தும் கோர்ட் முடிவு செய்ய வேண்டியதை,

ஜாமின் மனு மீதான விசாரணையிலேயே தீர்ப்பை அறிவிப்பது என்பது  அனுபவத்தில் நாம் கண்டவரை இதுதான் முதல்முறை.என பல மூத்த வழக்கறிஞர்களால் பேசப்படுகிறது.  ஆனால் இந்த வழக்கில் அவசர அவசரமாக முந்துவது மக்களுக்கு இன்னும் ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது... முக்கியமாக அரசு வழக்கறிஞர் குற்றவாளிக்கு எதிராக வலுவான வாதத்தை வைக்காமல் இருந்ததும் அதிகமான சந்தேகத்தை கொண்டு வருகிறது.கள்ளக்குறிச்சி வழக்கு காவல்துறை விசாரணையில் உள்ளது! ஜிப்மர் கொடுத்தது ஒரு மருத்துவ ஒபினியன் தானே! அதை பொதுவெளியில் வைக்க மறுத்து, தன்னிச்சையாக கருத்துரைப்பதா? இது விசாரணையின் போக்கை கடுமையாக பாதிக்குமே! என் பலர் பேசுவது 

‘ஆட்சியாளர்கள் தப்பு செய்தாலும், காவல்துறை தப்பு செய்தாலும் கூட கடைகோடி மனிதனின் கடைசி புகழிடமாக விளங்கி வருவது நீதித் துறை தான்! கோடானு கோடி மக்களின்  அந்த மகத்தான நம்பிக்கையை ஒரு போதும் சீர்குலைந்து விடக் கூடாது’ என்பதே நம் ஆதங்கம்!

கள்ளக் குறிச்சி வழக்கில் ஆரம்பம் முதலே தப்பாட்டம் ஆடத் துவங்கி விட்டன சில அதிகார மையங்கள்! என்பதைத் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே பாலகிருஷ்ணன் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள கருத்து 

ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை என்னவோ அதை பொது வெளியில் வைத்துவிட்டு போக வேண்டியது தானே…! அதை மறைத்துவிட்டு, ரகசியப்படுத்திக் கொண்டு 

சிபிசிஐடி விசாரணை அறிக்கை இன்னும் வெளிவரவே இல்லை. அதற்குள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ‘நிரபராதி’ என உறுதிபடுத்த இவ்வளவு அவசரம் எதற்கு.

வரம்பு மீறிப் பேசி வழக்கை திசை திருப்ப நடக்கும் முயற்சியா என்பதே இப்போது உள்ள வினா இதற்கு விடை தமிழகத்தின் முதல்வர் கையில் அதனால் தான் அவரிடம் தற்போது மனு அளித்தனர். என்பது பலர் அறிவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்