முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏழைகளுக்கு உதவி செய்ய அரசின் திட்டங்களை ஊடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டும்:-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

ஏழைகளுக்கு உதவி செய்ய அரசின் திட்டங்களை ஊடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்

சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய அரசின் திட்டங்களை உடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த அவர், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த கண்காட்சியையும்  பார்வையிட்டார்.

ஊடகவியலாளர் கலந்துரையாடலில் பேசிய மாவட்ட ஆட்சியர், பேரிடர், தேர்தல், கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் பத்திரிகையாளர்கள் மிகவும் உதவியாக இருந்ததை நினைவுகூர்ந்தார்.

அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பல இருந்தாலும், அவற்றை தேவையானவர்களுக்கு ஊடகங்கள் மூலமாகத்தான் செல்லவேண்டும். எனவே பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் பற்றி வெளியிடும் கட்டுரை பலருக்கு பயன்படும் என்று அவர் கூறினார்.  

பத்திரிக்கை சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும், நம்மால் பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

 தன்னார்வலர்கள் செய்யும் நல்ல   பணிகளை ஊடகங்கள் பாராட்டுவதன் மூலம் அவர்களை மேலும் உற்சாகப்படுத்த முடியும் என்றும் இதனால் சமூகத்தில் உள்ள பலர் பயனடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய பத்திரிகை தகவல் அலுவலக  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூடுதல் தலைமை இயக்குனர் திரு எம்.அண்ணாதுரை பேசுகையில், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் மக்களிடம் தகவல்களை கொண்டு சேர்க்கும் பணிகளை பத்திரிகை தகவல் அலுவலகம் செய்துவருகிறது. மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களை செய்தியாளர்களிடம் எடுத்துரைக்க இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது என்றார்.

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்காக மத்திய அரசிடம் மட்டும் சுமார் 157 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் திரு அண்ணாதுரை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு எல்.பாலாஜி சரவணன், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குனர் திரு நதீம் துஃபைல் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி எல். சரஸ்வதி, மாவட்ட வேளாண் துணை இயக்குனர்  திரு கே. ஜெயசெல்வின் இன்பராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் திரு விஜயராகவன் ஆகியோர் அவரவர் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.

 நிகழ்ச்சியில் மத்திய கள விளம்பர அலுவலக இணை இயக்குனர் திரு டி.சிவகுமார், கள விளம்பர அலுவலர் திருமதி ஜூனி ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...