முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

பவ்நகரில் ரூ 5200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,


நிறைவுபெற்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

பவ்நகரில் பிராந்திய அறிவியல் மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்

சௌனி யோஜ்னா இணைப்பு 2, 25 மெகாவாட் பாலிதானா சோலார் பிவி திட்டம், ஏபிபிஎல் கொள்கலன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

சௌனி யோஹ்னா இணைப்பு 2, சோர்வட்லா மண்டல நீர் வழங்கல் திட்டம், தொகுப்பு 9 உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

"300 வருட பயணத்தில், பவ்நகர் ஒரு நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளதுடன் சௌராஷ்டிராவின் கலாச்சார தலைநகரமாக அதன் முத்திரையை பதித்துள்ளது"

"கடந்த இரண்டு தசாப்தங்களில், குஜராத்தின் கடற்கரையை இந்தியாவின் செழுமைக்கான நுழைவாயிலாக மாற்ற நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன"

"பவ்நகர் துறைமுகம் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது"

" உலகின் மிகப் பழமையான துறைமுகமான லோதல் கடல்சார் அருங்காட்சியகத்தின் கட்டுமானம் அந்த இடத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கும்"

விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மீனவர்களுக்கு 

ரூ.5200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பவ்நகரில் அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை அர்ப்பணித்து வைத்தார்.  உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினல் மற்றும் பிரவுன்ஃபீல்ட் துறைமுகத்திற்கு பவ்நகரில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல அறிவியல் மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் போது, சௌனி யோஜ்னா இணைப்பு 2, 25 மெகாவாட் பாலிதானா சூரிய சக்தி பிவி திட்டம், ஏபிபிஎல் கொள்கலன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்; சௌனி யோஹ்னா இணைப்பு 2 இன் தொகுப்பு 9, சோர்வட்லா மண்டல நீர் வழங்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் இந்த நிகழ்விற்கு பெருமளவான மக்கள் வருகை தந்தமைக்காக நன்றி தெரிவித்தார். ஒருபுறம், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், பவ்நகர் 300 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 300 ஆண்டுகால இந்தப் பயணத்தில், பவ்நகர் நிலையான வளர்ச்சியை அடைந்து, சௌராஷ்டிராவின் கலாச்சார தலைநகராக முத்திரை பதித்துள்ளது. பவ்நகரின் இந்த வளர்ச்சிப் பயணம் இன்று தொடங்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களின் மூலம் புதிய வேகத்தைப் பெறும். சூரத்-வதோதரா-அகமதாபாத் போன்ற ராஜ்கோட்-ஜாம்நகர்-பவ்நகர் பகுதிகள் விரைவில் அதே ஒளியைப் பெறும் என்று உறுதியாக நம்புவதாக அவர் கூறினார். தொழில், விவசாயம் மற்றும் வணிகத்தில் பவ்நகருக்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது என்று கூறிய அவர்,  இந்த திசையில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இன்றைய நிகழ்வு ஒரு நிதர்சன உதாரணம் என்றார்.

பவ்நகர் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மாவட்டம் என்றும், நாட்டிலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்டது குஜராத் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆனால் சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில் கரையோர அபிவிருத்தியில் கவனம் செலுத்தப்படாததால், இந்த பரந்த கடற்கரை மக்களுக்கு ஒரு வகையான பெரிய சவாலாக மாறியது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் பணிகளை எடுத்துரைத்த பிரதமர், கடந்த இரண்டு தசாப்தங்களில், குஜராத்தின் கடற்கரையை இந்தியாவின் செழுமைக்கான நுழைவாயிலாக மாற்ற அரசாங்கம் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். "குஜராத்தில் பல துறைமுகங்களை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம், பல துறைமுகங்களை நவீனமயமாக்கியுள்ளோம்", வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன" என்று பிரதமர் மேலும் கூறினார். நாட்டிலேயே எல்என்ஜி முனையத்தைப் பெற்ற முதல் மாநிலம் குஜராத் என்றும், இன்று குஜராத்தில் மூன்று எல்என்ஜி முனையங்கள் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கடலோர சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய  பிரதமர், கடலோரத் தொழில்கள் மற்றும் இந்தத் தொழில்களுக்கான ஆற்றல் வலையமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு முக்கியப் பங்காற்றியுள்ளது என்று குறிப்பிட்டார். மீனவர் சமூகத்தின் நலனுக்காக மீன்பிடி துறைமுகங்கள் கட்டப்பட்டு மீன் பதப்படுத்துதல் ஊக்குவிக்கப்பட்டது. இப்பகுதியில் சதுப்புநிலக் காடுகளும் உருவாக்கப்பட்டன. கடலோரப் பகுதியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து குஜராத்தில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அப்போதைய மத்திய அரசு கூறியதாகவும் திரு மோடி கருத்து தெரிவித்தார். மீன் வளர்ப்பை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். குஜராத் கடலோரப் பகுதி நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிப்பதோடு, இன்று லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு ஊடகமாக மாறியுள்ளது என்றார் அவர். "இன்று, குஜராத்தின் கடற்கரையானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒத்ததாக உருவாகி வருகிறது" என்று கூறிய  அவர், "சௌராஷ்டிராவை ஆற்றல் மையமாக மாற்ற முயற்சித்துள்ளோம். இன்று, நாட்டின் எரிசக்தித் தேவைகள் எதுவாக இருந்தாலும், இந்தப் பகுதி அதன் முக்கிய மையமாக மாறி வருகிறது என்றார்.

தற்சார்பு இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கும், மாநிலத்தில் நூற்றுக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பவ்நகர் துறைமுகம் பெரும் பங்கு வகிக்கும் என்று பிரதமர் கோடிட்டுக் காட்டினார். "சேமிப்பு, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் தொடர்பான வணிக விரிவாக்கம் இருக்கும்" என்று திரு மோடி மேலும் கூறினார். அலங் கப்பல் உடைக்கும் தளத்தின் பாரம்பரியத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையின் மிகப்பெரிய பயனாளி பவ்நகர் என்று கூறினார். பழுதடைந்த இரும்பிலிருந்து கொள்கலன்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

லோதல் நமது பாரம்பரியத்தின் முக்கியமான மையம் என்று குறிப்பிட்ட பிரதமர், இது உலகின் மிகப் பழமையான துறைமுகம் என்றும், லோதல் கடல்சார் அருங்காட்சியகத்தின் கட்டுமானம் அந்த இடத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கும் என்றும் கூறினார். முழு உலகத்தின் சுற்றுலா வரைபடத்தில் கொண்டு வருவதற்கான பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். "லோதாலுடன், வேலவதார் தேசிய பூங்காவில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா சுற்றும் பாவ்நகருக்கு, குறிப்பாக சிறு வணிகங்களுக்கு பயனளிக்கும்" என்று பிரதமர் மேலும் கூறினார். விழிப்புணர்வின்மையால் அப்பகுதி மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தை திரு மோடி நினைவு கூர்ந்தார். குஜராத் முதல்வராக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த அவர், மீனவர்களுக்கு பல பொத்தான்கள் கொண்ட சிறப்பு சிவப்பு கூடை வழங்கப்பட்டது. அவசர காலங்களில், உதவி அல்லது உதவிக்காக கடலோர காவல்படை அலுவலகத்தை வரவழைக்க மீனவர் பொத்தானை அழுத்த வேண்டும். மீனவர்களின் படகுகளின் நிலையை மேம்படுத்த மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார். "விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மீனவர்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டன" என்று திரு மோடி கூறினார்.

ராஜ்கோட்டில் தொடங்கப்பட்ட சௌனி யோஜ்னா நடைமுறைக்கு பிறகு கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். சில பகுதிகளில் ஆரம்ப மெத்தனம் இருந்தபோதிலும், திட்டத்தின் இடைவிடாத முன்னேற்றத்தை வலியுறுத்திய பிரதமர், "இன்று, சௌனி யோஜ்னா நர்மதாவை விண்கல் வேகத்தில் செல்ல வேண்டிய அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறது" என்றார். இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் நர்மதா நதியின் நீரை பவ்நகர் மற்றும் அம்ரேலியின் பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். அம்ரேலி மாவட்டத்தின் ராஜுலா மற்றும் கம்பா தாலுகாக்களுடன், பவ்நகரின் கரியாதார், ஜெசர் மற்றும் மஹுவ தாலுகாக்களின் பல கிராமங்களின் விவசாயிகளுக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். "பவ்நகர், கிர் சோம்நாத், அம்ரேலி, பொடாட், ஜூனாகத், ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் டஜன் கணக்கான நகரங்களைச் சென்றடைவதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் மேலும் கூறினார்.

பின்தங்கியவர்களுக்கு ஆதரவளிப்பது இரட்டை இயந்திர அரசாங்கத்தின் அர்ப்பணிப்பாகும். பரம ஏழைகள் வளங்களையும் கண்ணியத்தையும் பெறும்போது, அவர்கள் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் வறுமையை வெல்லுகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார், “குஜராத்தில் நாங்கள் அடிக்கடி கரிப் கல்யாண் மேளாக்களை நடத்துகிறோம். அத்தகைய ஒரு நிகழ்ச்சியின் போது, பவ் நகரில் உள்ள ஒரு சகோதரியிடம் நான் ஒரு முச்சக்கரவண்டியை ஒப்படைத்தேன். அப்போது அந்த சகோதரி என்னிடம் நான் முச்சக்கரவண்டி ஓட்டியதில்லை. எனவே மின்சார முச்சக்கரவண்டியை மட்டும் கொடுங்கள். இந்த நம்பிக்கையும், ஏழைகளின் கனவுகளும்தான் இன்றும் என் பலம். இந்த கனவுகள், ஏழைகளின் இந்த அபிலாஷைகள் எனக்கு தொடர்ந்து வேலை செய்வதற்கான ஆற்றலைத் தருகின்றன’’ என்று அவர் கூறினார்.

பவ்நகர் உடனான தனது நீண்ட தொடர்பை நினைவுகூர்ந்த பிரதமர், தனது பழைய கூட்டாளிகளை நினைவு கூர்ந்தார். பவானிசாகரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இன்றைய திட்டங்கள் உறுதுணையாக இருக்கும் என்று கூறிய அவர்,  மக்கள் தம்மீது கொண்டுள்ள  பாசத்திற்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு.பூபேந்திர படேல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி ஆர் பாட்டீல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

பவ்நகரில் ரூ. 5200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். உலகின் முதல் சிஎன்ஜி முனையத்திற்கும், பிரவுன்ஃபீல்ட் துறைமுகத்திற்கும் பவ்நகரில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த துறைமுகம் ரூ.4000 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. உலகின் நான்காவது பெரிய லாக் கேட் அமைப்புடன் கூடிய உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினலுக்கான அதிநவீன உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும். சிஎன்ஜி டெர்மினலுக்கு கூடுதலாக, இப்பகுதியில் வரவிருக்கும் பல்வேறு திட்டங்களின் எதிர்கால தேவைகள் மற்றும் கோரிக்கைகளையும் துறைமுகம் பூர்த்தி செய்யும். துறைமுகமானது அதி நவீன கொள்கலன் முனையம், பல்நோக்கு முனையம் மற்றும் தற்போதுள்ள சாலை மற்றும் இரயில்வே நெட்வொர்க்குடன் நேரடி இணைப்பைக்  கொண்டிருக்கும். இது சரக்குகளை கையாள்வதில் செலவை மிச்சப்படுத்துவதில் பொருளாதார நன்மைகளுக்கு வழிவகுக்கும், பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கும். மேலும், சிஎன்ஜி இறக்குமதி முனையம், சுத்தமான எரிசக்திக்கான வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் மாற்று ஆற்றல் மூலத்தை வழங்கும்.

பவ்நகரில் 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிராந்திய அறிவியல் மையத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த மையத்தில் கடல் கேலரி, ஆட்டோமொபைல் கேலரி, நோபல் பரிசு கேலரி - உடலியல் மற்றும் மருத்துவம், எலக்ட்ரோ-மெக்கானிக்ஸ் கேலரி மற்றும் உயிரியல் அறிவியல் கேலரி உள்ளிட்ட பல கருப்பொருள் அடிப்படையிலான காட்சியகங்கள் உள்ளன. அனிமேட்ரானிக் டைனோசர்கள், அறிவியல் தீம் அடிப்படையிலான பொம்மை ரயில்கள், இயற்கை ஆய்வுப் பயணங்கள், மோஷன் சிமுலேட்டர்கள், கையடக்க சூரிய ஆய்வகங்கள் போன்ற வெளிப்புற நிறுவல்கள் மூலம் குழந்தைகளுக்கான கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுக்கான ஆக்கபூர்வமான தளத்தையும் இந்த மையம் வழங்கும்.

நிகழ்ச்சியின் போது, சௌனி யோஜ்னா இணைப்பு 2, 25 மெகாவாட் பாலிதானா சூரிய சக்தி பிவி திட்டம், ஏபிபிஎல் கொள்கலன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்; சௌனி யோஹ்னா இணைப்பு 2 இன் தொகுப்பு 9, சோர்வட்லா மண்டல நீர் வழங்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த பரந்த அளவிலான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழா, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் பல மாதிரி இணைப்புகளை மேம்படுத்துவதற்குமான பிரதமரின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சாமானியர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் அவரது அரசு தொடர்ந்து கவனம் செலுத்துவதையும் இது காட்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு