முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவனந்தபுரத்தில் 30 வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் 30 வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

2015 முதல் ரூ. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்திற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த 56 திட்டங்களுக்கு ரூ.2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற 30வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளின் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், லட்சத்தீவுகளின் நிர்வாகிகள், தென் மண்டல கவுன்சில் மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், மத்திய உள்துறைச் செயலர், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தமது தொடக்க உரையில், இயற்கை அழகின் உறைவிடமான கேரள மாநிலத்தின்  மக்களுக்கு 'ஓணம்' வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஓணம் கேரளாவின் முக்கிய பண்டிகை மட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரத்தின் முக்கியப் பண்டிகை என்றும் அவர் குறிப்பிட்டார்

இந்த ஆண்டு விடுதலையின் அமிர்தப்பெருவிழா ஆண்டாகக் கொண்டாடப்படுவதால், நாட்டின் வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது என்றும் திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'இல்லந்தோறும் மூவண்ணக்கொடி' பிரச்சாரத்தில், நாட்டு மக்கள் தங்கள் மாநில உறவுகள், ஜாதி, மதம் போன்றவற்றைக் கடந்து உயர்ந்து, தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை மற்றும் தேசபக்திக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள் என்றும் அவர் கூறினார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடிய அனைத்து மாநிலங்களுக்கும் திரு ஷா நன்றி தெரிவித்தார். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த எட்டு ஆண்டுகளில் மண்டல கவுன்சில்களின் தன்மை மாறியுள்ளது என்றும், கூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 2014ஆம் ஆண்டுக்கு முன், மண்டல சபைகள் ஒரு வருடத்தில் சராசரியாக இரண்டு கூட்டங்களை நடத்தியது, இந்த அரசாங்கம் 2.7 ஆக அதிகரித்துள்ளது. சராசரியாக, நிலைக்குழுக்கள் 1.4 அமர்வுகளைக் கொண்டிருந்தன, இந்த அரசாங்கமும் கிட்டத்தட்ட இரு மடங்காக அதாவது, 2.75 ஆக அதிகரித்துள்ளது. 2006 முதல் 2013 வரை, மண்டல கவுன்சில் கூட்டங்களில் 104 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன, 2014 முதல் 2022 வரை, 555 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, இதில் 64 சதவீத பிரச்சனைகள் பரஸ்பர ஒப்புதலுடன் தீர்க்கப்பட்டன. 9 கடலோர மாநிலங்களில் 4 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 4 ஆகியவை தெற்கு மண்டல கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன, அதாவது மொத்தம் 7,500 கிமீ நீளமுள்ள கடற்கரையில், சுமார் 4,800 கிமீ இந்த மாநிலங்களின் கீழ் வருகிறது. இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் 7 பெரிய துறைமுகங்கள் இந்தப் பகுதியில் இருப்பதாக  திரு ஷா கூறினார். இதன் மூலம், இப்போது இந்தியாவில் உள்ள மொத்தமுள்ள 3,461 மீனவக் கிராமங்களில், 1,763 மீனவக் கிராமங்கள் இந்த மண்டலத்தில் உள்ளன, மேலும் கடல்சார் பொருட்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

தென்னிந்தியாவின் மீது பிரதமருக்கு சிறப்புப் பற்று உள்ளது, அதனால்தான் 2014-ல் பிரதமரான பிறகு, சாகர்மாலா திட்டத்துடன் இணைந்து கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக முக்கியத் துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைத் தொடங்கினார். இவற்றில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான 108 திட்டங்கள்  முடிக்கப்பட்டுள்ளன. 1,32,000 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கடலோர மாநிலங்களுக்கு சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.2,00,000 கோடி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு 7,737 கோடி ரூபாய் செலவில் நீலப் புரட்சிக்காக பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனா செயல்படுத்தப்படுகிறது. 2015 முதல்  ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 56 திட்டங்களுக்கு மாநிலங்களில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற தென் மண்டல கவுன்சிலின் 30வது கூட்டத்தில் 26 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, 9 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது, 17 பிரச்னைகள் கூடுதல் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டது, இதில் ஆந்திரா மறுசீரமைப்பு தொடர்பான 9 பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.  ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே நிலுவையில் உள்ள பிரச்சனைகளை அந்த மாநிலங்கள் தங்களுக்குள் தீர்த்து கொள்ளுமாறு திரு ஷா வலியுறுத்தினார், இது அம்மாநில மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நன்மை பயக்கும், அதோடு முழு தென் பிராந்தியத்தின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். கவுன்சிலின் அனைத்து உறுப்பு மாநிலங்களும் நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதன் நிலைக்குழுவின் 12வது கூட்டத்தில், மொத்தம் 89 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாகவும், இதில் 63 பிரச்சனைகள் பரஸ்பர ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டதாகவும் கூறிய திரு அமித் ஷா, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றார்.

பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மத்திய, மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை சுமுகமாகத் தீர்த்து வைப்பது, மாநிலங்களுக்கு இடையே பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனைக்காக  ஒரு மன்றத்தை உருவாக்குவது ஆகியவை மண்டல கவுன்சில் கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் கூறினார். பொதுவான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு ஒத்துழைப்பு அமைப்பை அமைத்தல். நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி டீம் இந்தியா என்ற கருத்தை முன் வைத்துள்ளார் என்றும், அனைத்து மாநிலங்களும் இணைந்து டீம் இந்தியாவை உருவாக்குவதாகவும் திரு ஷா கூறினார்


உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை மிகக் கண்டிப்புடன் ஒடுக்க முயற்சித்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். 12 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்களுக்கு கியூஆர் கோட் பிவிசி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் திரு ஷா தெரிவித்தார். இதன் மூலம் கடலோர மாநில மீனவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது மட்டுமின்றி கடலோர பாதுகாப்பும் பலப்படுத்தப்படும். தடய அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்கான கொள்கை தயாரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனால் தண்டனை விகிதம் அதிகரிக்கும். ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு வங்கிக் கிளை வேண்டும் என்பதே மோடி அரசின் இலக்காகும். இதற்காக தென் மண்டல கவுன்சில் உறுப்பு நாடுகள் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஐந்து கிலோமீட்டருக்குள் வங்கி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார். வங்கிகள் கிளைகளை திறக்க வேண்டும். இது அரசின் திட்டங்களின் பலன்களை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க உதவும் என்று திரு அமித் ஷா கூறினார். தக்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...