முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் சமூகம் சார்ந்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி 83 வது பிறந்த நாள் விழா மதுரை வர்த்தக மையத்தில்

தமிழ் சமூகம் சார்ந்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பிறந்த நாள் விழா மதுரையில் நடந்தது.உலகெல்லாம் மிகபெரும் கல்விமானாக, ஞானவானாக வலம் வந்தார். அவருக்கென தனி இடமிருந்தது

துர்வாச முனிவர் போல யாருக்கும் அடங்காமல் நியாயத்தை மட்டுமே பேசிவந்தவரை  ஜனசங்கம் அடையாளம் கொடுத்து நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் ஆக்கியது, பின் ஜனதா கட்சியில் மொரார்ஜி தேசாய் மற்றும் சரன்சிங் உடனிருந்தார் 


பின்னர் ஜனதாவே அவரது வசமானது. 

அதன் பின் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இன்று மிகபெரும் சக்தி மிக்கவராக வலம் வருகிறார்

டாக்டர் சுவாமி நினைத்திருந்தால் அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேராசிரியராக அமர்ந்து இன்று கமலா ஹாரிஸை விட பெரிய வராகியிருக்கலாம்

முன்னால் பிரதமர் இந்திரா காந்திக்கு அடிபணிந்திருந்தால் இங்கு சோனியா காலத்தில் பிரதமாராகியிருக்கலாம்

அட ரிசர்வ் வங்கியின் நிரந்தர ஆளுநராகியிருக்கலாம், பாஜகவில் சிலருக்கு ஜால்ரா தட்டியிருந்தால் இந்நேரம் மாநில கவர்ணர், உள்துறை அமைச்சர் என  வரலாம்


ஆனால் டாக்டர் சுவாமி அப்படியல்ல, அவர் மனதில் பட்டதை மகேசனே முன் நின்றாலும் அஞ்சாமல் கூறும் சிங்கம்

அதனால் அரசியலுக்கு அவர் தேவையில்லை என்பது பலரின் முடிவு, அரசியல் அறத்துக்கு அது அப்பாற்பட்டது

ஆனால் டாக்டர் சுவாமி அறம் ஒன்றே தர்மம் என தனித்து நிற்பவர், அந்த அறமே இன்று அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது இன்றும் நரேந்திர மோடிக்கு எதிரான தலமை இல்லை எனும் நிலையில் டாக்டர் சுவாமி ஒருவர் தான் அவருக்கும் சில நேரம் குடைச்சல் தருகிறார்

அதுதான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, அதுதான் நாட்டுபற்று

டாக்டர் சுவாமியின் சாதனைகள் ஏராளமுண்டு. முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் பொருளாதாரத் திட்டத்தை எதிர்த்து நின்றது முதல் அவர் ஈழத்தில் தலையிட்டு புலிகளை வளர்த்தது வரை துணிச்சலாக எதிர்த்தவர் டாக்டர் சுவாமி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கெல்லாம் தேச ஒருமைபாட்டுக்கு குந்தகம் விளையுமோ அங்கெல்லாம் டாக்டர் சுவாமி முதல் ஆளாக இருப்பார்

அப்படியே இந்துக்களின் நலன் காக்கவும் அவர் முதல் ஆளாக நின்றார் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை வாங்கியது, மானசரோவர் செல்ல சீன அரசிடம் அனுமதி பெற்றதென ஏராளமுண்டு

திருப்பதி கோவிலுக்குள் தங்கக் கவசம் பொருத்தும் முயற்சியை அவர் தடுத்ததிலும் விஷயமிருந்தது

கீழ் விஷாரத்தில் கொடுமைப் படுத்தப் பட்ட இந்துக்களின் நிலைமையையும் உச்சநீதிமன்றம்  கொண்டு சென்று அவர்களுக்கு தனி பஞ்சாயத்து பெற்றது. அரசாங்கத்தின் பிடியிலிருந்து இந்துக் கோவில்களை மீட்க்க வழக்கு போட்டிருப்பது என்பதெல்லாம் குறிப்பிடத் தக்கவை திருப்பதி கோவில் சொத்துக்களை மத்திய தணிக்கை துறை ஆய்வு செய்ய உத்தரவு பெற்றவர்.

முல்லையாறும் பேரியாறும் சேறுமிடம் அந்த அணையில் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி 1997–ஆம் ஆண்டு டாக்டர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.



அந்த வழக்கு 9 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அணையில் 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதே தீர்ப்புதான் இன்றும் 142 அடியாக உயர்த்த தடையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தர்மம் எப்பொழுதும் அதர்மத்துக்கு எதிராய் ஒரு சக்தியினை நிறுத்தி அதை காத்தும் நிற்கும், அப்படி தமிழகத்தின் கட்சிகளின் அராஜகங்களை தனி மனிதனாக எதிர் கொண்டு நின்று வென்றவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி

எல்லோரும் வாய்பேச அஞ்சிய காலத்தில் ஈழ விடுதலை புலிகளை கிழித்தவர் அவர்தான், ராஜிவ்காந்தி பற்றி புலிகள் வெளியிட்ட அறிக்கையினை உன்னிப்பாக கண்டவர், அக்கொலை நடந்ததும் இதைச் செய்தது புலிகள் என தெளிவாகச் சொன்னார்


புலிகள் இந்தியாவினை நம்பி இருக்க வேண்டியவர்கள் என அவர்களை கணக்கில் எடுக்கா விசாரணை குழு பின் புலிகள் தான் குற்றவாளி என கடைசியாகக் கண்டறிந்தது

இந்த அதீதமான முன்னெச்செரிக்கைதான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி

முன்னால் முதலமைச்சரின் மகன் முக அழகிரியினை மதுரையில் முதலில் எதிர் கொண்டவரும் அவரே, ஜெயலலிதாவின் ரவுடிகள் கூட்டத்தால் சந்திரலேகா மேல் அமிலம் ஊற்றபட்ட காலங்கலில் உயிர் ஆபத்தினை சந்தித்தவரும் அவரே

கலைஞர் மு.கருணாநிதி திமுகவின் சார்பில் அதிமுக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவினை பலவீனபடுத்த சில வலுவில்லா வழக்குகளை தொடுத்திருந்ந்தார், அதிமுக பலம் குறையவேண்டுமே அன்றி அழிய கூடாது எனும் அரசியலதில் இருந்தது

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வலுவான வழக்கே பின் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தண்டனை ஆனது, இல்லையேல் இன்று சசிகலா முதல்வராக வீற்றிருப்பார்


2000 ஆம் ஆண்டுக்குப் பின் டெல்லியில் மிகபெரும் ஊழலை செய்த திமுகவினை கேட்க யாருமன்று இருந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் எனும் மிகபெரிய முறைகேட்டினை டாக்டர் சுவாமி தான் வெளிக் கொண்டு வந்தார்

தமிழகம் என்றல்ல கர்நாடாகவிலும் 1988 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ராமகிருஷ்ணஹெக்டெ ஆட்சியில் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பதாக டாக்டர் சுவாமி தொடர்ந்த வழக்கில் ராமகிருஷ்ண ஹெக்டே ராஜினாமா செய்தார்

இன்றும் காங்கிரஸின் தூக்கத்தை கெடுக்கும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் வழக்கினை வெளிக் கொண்டு வந்தவரும் அவர்தான்

அலகாபாத் நீதிமன்றம் இராமர் கோவில் கட்ட தீர்ப்பு வழங்கியிருந்தது, அதை விரைவுபடுத்த உயர்நீதி மன்றம் சென்றவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தான், அந்த வழக்குத்தான் வெற்றியாய் முடிந்தது


ஒரு மனிதன் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் எதிராக ஒரே நேரத்தில் இயங்கமுடியுமென்றால் அவனிடம் 100 சதவீதம் உண்மை இருக்க வேண்டும், அது டாக்டர் சுவாமிக்கு உண்டு

விழா வர்த்தக மையத்தில் நடக்கும் பிறந்த நாளில் ஆலோசனை சொல்லும் ராஜகுருவாகவும் அவரே விளங்குகின்றார்

மாரிதாஸ் மேல் திமுக வழக்குகளை தொடுப்பதை கண்ட டாக்டர் சுவாமி, மாரிதாஸுக்கு ஆதரவாக ஒரே ஒரு டிவிட் போட்டதில் திமுக மகா அமைதி

ஆம், சுவாமியின் பலம் அவர்களுக்கு தெரியும். அதுதான் டாக்டர் சுவாமி

இன்று 83 வயதை கடக்கும் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி , இன்னும் நீண்ட ஆயுளுடன் தேசத்துக்கு மகத்தான தொண்டுகளை செய்ய வேண்டும் என பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் வாழ்த்துகிறது.

டாக்டர் சுவாமியிடம் ஒவ்வொரு இந்திய மாணவனும் கற்றுகொள்ள வேண்டிய விஷயம் நிறைய உண்டு

அவரின் கல்வி, தைரியம், நாட்டுபற்று, பதவிக்கு ஆசைபடா தன்மை, பணபற்று இல்லாமை மகா முக்கியமாக அவரின் ஒழுக்கம்

இன்றுவரை தனிபட்ட ஊழலோ இல்லை இதர விவகாரங்களிலோ சிக்காத மிகபெரிய கண்ணியவான் அவர், அதனை அவரின் எதிரிகளும் மறுக்க முடியாது

எவ்வளவு எதிர்ப்புகள்? எவ்வளவு மிரட்டல்கள்? எவ்வளவு ஆபத்தான சவால்கள்?

டாக்டர் சுவாமி அதை எப்படிக் கடந்தார்? உண்மையினை பேசுவோர் மதுரையிலும் சென்னையிலும் இன்னும் பல இடங்களில் வெட்டியும் , சுட்டும் கொல்லபடும் நாட்டில், வெடி குண்டிலோ விஷ உணவிலோ கொல்லபடும் நாட்டில் டாக்டர் சுவாமி இதுகாலமும் எப்படித் தப்பி வந்தார்?

தர்மம் அவரை காத்து வருகின்றது, அவர் காத்த உண்மைகள் சத்தியமாய் அவரை காத்து நிற்கின்றன.

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் வாழ்வும் தொண்டும் ஒவ்வொரு பள்ளியிலும் போதிக்க வேண்டிய பாடம்

சமயநூல்கள் உண்மையினை சொல்லும் என்பது போல, டாக்டர் சுவாமியின் வார்த்தைகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மை என்பதுதான் அவரின் பலம், மிகபெரும் பலம்

நாட்டுக்காய் வாழும் ஒரு தவமுனியின் அந்த வார்த்தைகள் எக்காலமும் உண்மை ஒன்றே சுமந்து வந்தன,வருகின்றன இன்னும் வரும்

ஒரு காலம் வரும், அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மிகபடித்த அறிவாளி, மிகபெரிய கல்விமான் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைபடாமல், வளமான வாழ்க்கைக்கும் சுகமான வாழ்க்கைக்கும் ஆசைபடாமல் , உயிரை பணயம் வைத்து உண்மை பேசினான் என்றால் அப்பொழுது டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியினைத்தான் தேசம் கைகாட்டும் காமராஜர், கலாம் போலவே தமிழரின் மிகபெரும் அடையாளம்  டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை 

சுப்பிரமணியனை மிஞ்சிய காக்கும் காக்கும் தெய்வமில்லை என பொருள்

அப்படி தேசத்தின் மிகபெரிய காவல்காரனுக்கு , ராஜ குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பெரு மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றது தேசம்

வாழ்க நீ எம்மான்.. இந்நாடு பயனுற வாழ்வதற்கே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...