முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் சமூகம் சார்ந்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி 83 வது பிறந்த நாள் விழா மதுரை வர்த்தக மையத்தில்

தமிழ் சமூகம் சார்ந்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பிறந்த நாள் விழா மதுரையில் நடந்தது.உலகெல்லாம் மிகபெரும் கல்விமானாக, ஞானவானாக வலம் வந்தார். அவருக்கென தனி இடமிருந்தது

துர்வாச முனிவர் போல யாருக்கும் அடங்காமல் நியாயத்தை மட்டுமே பேசிவந்தவரை  ஜனசங்கம் அடையாளம் கொடுத்து நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் ஆக்கியது, பின் ஜனதா கட்சியில் மொரார்ஜி தேசாய் மற்றும் சரன்சிங் உடனிருந்தார் 


பின்னர் ஜனதாவே அவரது வசமானது. 

அதன் பின் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இன்று மிகபெரும் சக்தி மிக்கவராக வலம் வருகிறார்

டாக்டர் சுவாமி நினைத்திருந்தால் அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேராசிரியராக அமர்ந்து இன்று கமலா ஹாரிஸை விட பெரிய வராகியிருக்கலாம்

முன்னால் பிரதமர் இந்திரா காந்திக்கு அடிபணிந்திருந்தால் இங்கு சோனியா காலத்தில் பிரதமாராகியிருக்கலாம்

அட ரிசர்வ் வங்கியின் நிரந்தர ஆளுநராகியிருக்கலாம், பாஜகவில் சிலருக்கு ஜால்ரா தட்டியிருந்தால் இந்நேரம் மாநில கவர்ணர், உள்துறை அமைச்சர் என  வரலாம்


ஆனால் டாக்டர் சுவாமி அப்படியல்ல, அவர் மனதில் பட்டதை மகேசனே முன் நின்றாலும் அஞ்சாமல் கூறும் சிங்கம்

அதனால் அரசியலுக்கு அவர் தேவையில்லை என்பது பலரின் முடிவு, அரசியல் அறத்துக்கு அது அப்பாற்பட்டது

ஆனால் டாக்டர் சுவாமி அறம் ஒன்றே தர்மம் என தனித்து நிற்பவர், அந்த அறமே இன்று அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது இன்றும் நரேந்திர மோடிக்கு எதிரான தலமை இல்லை எனும் நிலையில் டாக்டர் சுவாமி ஒருவர் தான் அவருக்கும் சில நேரம் குடைச்சல் தருகிறார்

அதுதான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, அதுதான் நாட்டுபற்று

டாக்டர் சுவாமியின் சாதனைகள் ஏராளமுண்டு. முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் பொருளாதாரத் திட்டத்தை எதிர்த்து நின்றது முதல் அவர் ஈழத்தில் தலையிட்டு புலிகளை வளர்த்தது வரை துணிச்சலாக எதிர்த்தவர் டாக்டர் சுவாமி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கெல்லாம் தேச ஒருமைபாட்டுக்கு குந்தகம் விளையுமோ அங்கெல்லாம் டாக்டர் சுவாமி முதல் ஆளாக இருப்பார்

அப்படியே இந்துக்களின் நலன் காக்கவும் அவர் முதல் ஆளாக நின்றார் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை வாங்கியது, மானசரோவர் செல்ல சீன அரசிடம் அனுமதி பெற்றதென ஏராளமுண்டு

திருப்பதி கோவிலுக்குள் தங்கக் கவசம் பொருத்தும் முயற்சியை அவர் தடுத்ததிலும் விஷயமிருந்தது

கீழ் விஷாரத்தில் கொடுமைப் படுத்தப் பட்ட இந்துக்களின் நிலைமையையும் உச்சநீதிமன்றம்  கொண்டு சென்று அவர்களுக்கு தனி பஞ்சாயத்து பெற்றது. அரசாங்கத்தின் பிடியிலிருந்து இந்துக் கோவில்களை மீட்க்க வழக்கு போட்டிருப்பது என்பதெல்லாம் குறிப்பிடத் தக்கவை திருப்பதி கோவில் சொத்துக்களை மத்திய தணிக்கை துறை ஆய்வு செய்ய உத்தரவு பெற்றவர்.

முல்லையாறும் பேரியாறும் சேறுமிடம் அந்த அணையில் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி 1997–ஆம் ஆண்டு டாக்டர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.



அந்த வழக்கு 9 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அணையில் 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதே தீர்ப்புதான் இன்றும் 142 அடியாக உயர்த்த தடையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தர்மம் எப்பொழுதும் அதர்மத்துக்கு எதிராய் ஒரு சக்தியினை நிறுத்தி அதை காத்தும் நிற்கும், அப்படி தமிழகத்தின் கட்சிகளின் அராஜகங்களை தனி மனிதனாக எதிர் கொண்டு நின்று வென்றவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி

எல்லோரும் வாய்பேச அஞ்சிய காலத்தில் ஈழ விடுதலை புலிகளை கிழித்தவர் அவர்தான், ராஜிவ்காந்தி பற்றி புலிகள் வெளியிட்ட அறிக்கையினை உன்னிப்பாக கண்டவர், அக்கொலை நடந்ததும் இதைச் செய்தது புலிகள் என தெளிவாகச் சொன்னார்


புலிகள் இந்தியாவினை நம்பி இருக்க வேண்டியவர்கள் என அவர்களை கணக்கில் எடுக்கா விசாரணை குழு பின் புலிகள் தான் குற்றவாளி என கடைசியாகக் கண்டறிந்தது

இந்த அதீதமான முன்னெச்செரிக்கைதான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி

முன்னால் முதலமைச்சரின் மகன் முக அழகிரியினை மதுரையில் முதலில் எதிர் கொண்டவரும் அவரே, ஜெயலலிதாவின் ரவுடிகள் கூட்டத்தால் சந்திரலேகா மேல் அமிலம் ஊற்றபட்ட காலங்கலில் உயிர் ஆபத்தினை சந்தித்தவரும் அவரே

கலைஞர் மு.கருணாநிதி திமுகவின் சார்பில் அதிமுக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவினை பலவீனபடுத்த சில வலுவில்லா வழக்குகளை தொடுத்திருந்ந்தார், அதிமுக பலம் குறையவேண்டுமே அன்றி அழிய கூடாது எனும் அரசியலதில் இருந்தது

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வலுவான வழக்கே பின் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தண்டனை ஆனது, இல்லையேல் இன்று சசிகலா முதல்வராக வீற்றிருப்பார்


2000 ஆம் ஆண்டுக்குப் பின் டெல்லியில் மிகபெரும் ஊழலை செய்த திமுகவினை கேட்க யாருமன்று இருந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் எனும் மிகபெரிய முறைகேட்டினை டாக்டர் சுவாமி தான் வெளிக் கொண்டு வந்தார்

தமிழகம் என்றல்ல கர்நாடாகவிலும் 1988 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ராமகிருஷ்ணஹெக்டெ ஆட்சியில் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பதாக டாக்டர் சுவாமி தொடர்ந்த வழக்கில் ராமகிருஷ்ண ஹெக்டே ராஜினாமா செய்தார்

இன்றும் காங்கிரஸின் தூக்கத்தை கெடுக்கும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் வழக்கினை வெளிக் கொண்டு வந்தவரும் அவர்தான்

அலகாபாத் நீதிமன்றம் இராமர் கோவில் கட்ட தீர்ப்பு வழங்கியிருந்தது, அதை விரைவுபடுத்த உயர்நீதி மன்றம் சென்றவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தான், அந்த வழக்குத்தான் வெற்றியாய் முடிந்தது


ஒரு மனிதன் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் எதிராக ஒரே நேரத்தில் இயங்கமுடியுமென்றால் அவனிடம் 100 சதவீதம் உண்மை இருக்க வேண்டும், அது டாக்டர் சுவாமிக்கு உண்டு

விழா வர்த்தக மையத்தில் நடக்கும் பிறந்த நாளில் ஆலோசனை சொல்லும் ராஜகுருவாகவும் அவரே விளங்குகின்றார்

மாரிதாஸ் மேல் திமுக வழக்குகளை தொடுப்பதை கண்ட டாக்டர் சுவாமி, மாரிதாஸுக்கு ஆதரவாக ஒரே ஒரு டிவிட் போட்டதில் திமுக மகா அமைதி

ஆம், சுவாமியின் பலம் அவர்களுக்கு தெரியும். அதுதான் டாக்டர் சுவாமி

இன்று 83 வயதை கடக்கும் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி , இன்னும் நீண்ட ஆயுளுடன் தேசத்துக்கு மகத்தான தொண்டுகளை செய்ய வேண்டும் என பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் வாழ்த்துகிறது.

டாக்டர் சுவாமியிடம் ஒவ்வொரு இந்திய மாணவனும் கற்றுகொள்ள வேண்டிய விஷயம் நிறைய உண்டு

அவரின் கல்வி, தைரியம், நாட்டுபற்று, பதவிக்கு ஆசைபடா தன்மை, பணபற்று இல்லாமை மகா முக்கியமாக அவரின் ஒழுக்கம்

இன்றுவரை தனிபட்ட ஊழலோ இல்லை இதர விவகாரங்களிலோ சிக்காத மிகபெரிய கண்ணியவான் அவர், அதனை அவரின் எதிரிகளும் மறுக்க முடியாது

எவ்வளவு எதிர்ப்புகள்? எவ்வளவு மிரட்டல்கள்? எவ்வளவு ஆபத்தான சவால்கள்?

டாக்டர் சுவாமி அதை எப்படிக் கடந்தார்? உண்மையினை பேசுவோர் மதுரையிலும் சென்னையிலும் இன்னும் பல இடங்களில் வெட்டியும் , சுட்டும் கொல்லபடும் நாட்டில், வெடி குண்டிலோ விஷ உணவிலோ கொல்லபடும் நாட்டில் டாக்டர் சுவாமி இதுகாலமும் எப்படித் தப்பி வந்தார்?

தர்மம் அவரை காத்து வருகின்றது, அவர் காத்த உண்மைகள் சத்தியமாய் அவரை காத்து நிற்கின்றன.

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் வாழ்வும் தொண்டும் ஒவ்வொரு பள்ளியிலும் போதிக்க வேண்டிய பாடம்

சமயநூல்கள் உண்மையினை சொல்லும் என்பது போல, டாக்டர் சுவாமியின் வார்த்தைகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மை என்பதுதான் அவரின் பலம், மிகபெரும் பலம்

நாட்டுக்காய் வாழும் ஒரு தவமுனியின் அந்த வார்த்தைகள் எக்காலமும் உண்மை ஒன்றே சுமந்து வந்தன,வருகின்றன இன்னும் வரும்

ஒரு காலம் வரும், அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மிகபடித்த அறிவாளி, மிகபெரிய கல்விமான் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைபடாமல், வளமான வாழ்க்கைக்கும் சுகமான வாழ்க்கைக்கும் ஆசைபடாமல் , உயிரை பணயம் வைத்து உண்மை பேசினான் என்றால் அப்பொழுது டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியினைத்தான் தேசம் கைகாட்டும் காமராஜர், கலாம் போலவே தமிழரின் மிகபெரும் அடையாளம்  டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை 

சுப்பிரமணியனை மிஞ்சிய காக்கும் காக்கும் தெய்வமில்லை என பொருள்

அப்படி தேசத்தின் மிகபெரிய காவல்காரனுக்கு , ராஜ குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பெரு மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றது தேசம்

வாழ்க நீ எம்மான்.. இந்நாடு பயனுற வாழ்வதற்கே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த