முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனித உரிமைகள் நீதிமன்றம் அறிவோம்

மனித உரிமைகள் நீதிமன்றம்  அறிவோம்

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்  பிரிவு 30-ன்படி மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள்  ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.  மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றங்கள் மனித உரிமை நீதிமன்றங்களாகவும் செயல்படுகிறது.

மனித உரிமை மீறல்களில் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாம்.

வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், தனி மனித கௌரவம் மற்றும் ஊழல் காரணமாக பொய் வழக்கு போடும் காரணமாக அது குறித்த மனித உரிமைகள் பாதுகாக்க  மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 2(D) தெரிவிக்கிறது. இவற்றை தவிர மற்றவை தொடர்பான புகார்களை மனித உரிமை நீதிமன்றத்தில்  புகார் கொடுக்கக் கூடாது.

தேசிய, மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பானது பரிந்துரைகள் மட்டுமே. இவ்வாறான பரிந்துரைகள் பல நடைமுறைப் படுத்தப்படாமல் இதுவரை நிலுவையிலுள்ளன. பல சமயங்களில் மாநில ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிகள் காலியாகவே விடப்படுகிறது. ஆனால் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கு தவறிழைத்தவர்களுக்கு   நிரூபனமானால் தண்டனை வழங்கும் அதிகாரமுண்டு.

மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் நேரடியாகப் புகார் தாக்கல் செய்ய இயலாது. மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர் தமது புகாரை தாமாகவோ  அல்லது அவர் நியமிக்கும் வழக்கறிஞர் மூலமாகவோ  தனி புகாராக (private Complaint) ஆகத் தயாரிக்க வேண்டும்.

இந்த புகாரானது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தையும், குற்றவியல் விசாரணை முறை சட்ட  பிரிவு 200  ஆகியவற்றையும் இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டும்.

குற்றம் நிகழ்ந்த இடம் உள்ள பகுதிக்கு ஆள்வரையுள்ள (jurisdiction) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Judicial Magistrate Court) தாக்கல் செய்ய வேண்டும்.

புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 202-ன்படி விசாரணை செய்து புகாரில் அடிப்படை முகாந்திரம்   (Prima facie ) உள்ளதென முடிவு செய்தால் எதிரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி புகாரின் நகலை வழங்கி கேள்வி கேட்டு பதில் பெற்ற பின்பு விசாரணைக்கு மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்.

மனித உரிமைகள் நீதிமன்றம் அந்த வழக்கினை அமர்வு நீதிமன்ற வழக்குகள் போல விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.

மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில்  பிரிவு 31-ன்படி  அரசு குற்றஞ்சாட்டுனர்கள்   பாதிக்கப்பட்ட நபருக்கு வழக்கு நடத்துவார்கள். 

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில்  மாவட்ட மனித உரிமை  நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -167 மட்டுமே 

பொது மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் மாவட்ட மனித உரிமை  நீதிமன்றங்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட போலி மனித உரிமைகள் அமைப்புக்களின் தவறான வழிகாட்டுதல்களும் அதன் பெயரிலுள்ள அடிப்படை பயம் தான் காரணமாகும். 

சிறைத் தண்டனை  வழங்க அதிகாரம் இல்லாத மனித  உரிமைகள் ஆணையத்தை எளிதாக அணுகும் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களைப் பயன்படுத்தி  மனித உரிமைகள் மீறல்கள் குறித்த குற்றம் இழைத்தவர்களை சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வையுங்கள் என்பதே பல நேர்மையான ஊழல் தடுப்பு நபர்கள் கூறும் அறிவுரையாகும்  ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் குறித்தே சரியான புரிதல் இல்லாமல் இருக்கும் மக்கள் தான் இந்த நீதிமன்றம் குறித்து உண்மை நிலை தெரியாமல் உள்ளனர், ஆனால் சிலர் தவறுகள் செய்து தப்பிக்க சில இரக்கப்பட்ட நபர் சரி ஒரு முறை மன்னிப்போம், மீண்டும் தேவையில்லாமல் மனித உரிமைகள் மீறப்பட்டால் பார்க்கலாம் என்பதே மனித உரிமை மீறல்கள் செய்த நபர்களின் அதிர்ஷ்டம் எனலாம். தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளருக்கு  ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது 

மனித உரிமை ஆணையம் வழங்கிய உத்தரவு

சீர்காழியில் போராட்டத் தில் ஈடுபட்ட வழக்கறிஞரைத் தாக்கிய காவல்துறை ஆய்வாளருக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் விதித்தும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது குறித்து விபரம் வருமாறு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 2017 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளரான வக்கீல் வேலு குபேந்திரன் என்பவரை அப்போது பணியில் இருந்த சீர்காழி காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலு துரத்திச் சென்று தாக்கிக் கைது செய்தார். இந்த காட்சி அப்போது சமூக வலைதளங்களில் பரவியது. அது குறித்து

சென்னை மனித உரிமை ஆணையத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:- பொதுவெளியில் வழக்குரைஞர் வேலுகுபேந்திரன் மீதான தாக்குதல் நடத்தப்பட் டது மனித உரிமைக்கெதிரானது. அவர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலுவுக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அந்தத் தொகையினை

தமிழ்நாடு அரசு, வழக்குரைஞர் வேலு குபேந்திரனுக்கு கொடுத்து விட்டு காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலுவின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆணைய நீதிபதி உத்தரவில்  குறிப்பிட்டுள்ளார். காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலு தற்போது பொறையாறு காவல் நிலையத்தில் பணியில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.