முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனித உரிமைகள் நீதிமன்றம் அறிவோம்

மனித உரிமைகள் நீதிமன்றம்  அறிவோம்

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்  பிரிவு 30-ன்படி மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள்  ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.  மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றங்கள் மனித உரிமை நீதிமன்றங்களாகவும் செயல்படுகிறது.

மனித உரிமை மீறல்களில் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாம்.

வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், தனி மனித கௌரவம் மற்றும் ஊழல் காரணமாக பொய் வழக்கு போடும் காரணமாக அது குறித்த மனித உரிமைகள் பாதுகாக்க  மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 2(D) தெரிவிக்கிறது. இவற்றை தவிர மற்றவை தொடர்பான புகார்களை மனித உரிமை நீதிமன்றத்தில்  புகார் கொடுக்கக் கூடாது.

தேசிய, மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பானது பரிந்துரைகள் மட்டுமே. இவ்வாறான பரிந்துரைகள் பல நடைமுறைப் படுத்தப்படாமல் இதுவரை நிலுவையிலுள்ளன. பல சமயங்களில் மாநில ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிகள் காலியாகவே விடப்படுகிறது. ஆனால் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கு தவறிழைத்தவர்களுக்கு   நிரூபனமானால் தண்டனை வழங்கும் அதிகாரமுண்டு.

மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் நேரடியாகப் புகார் தாக்கல் செய்ய இயலாது. மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர் தமது புகாரை தாமாகவோ  அல்லது அவர் நியமிக்கும் வழக்கறிஞர் மூலமாகவோ  தனி புகாராக (private Complaint) ஆகத் தயாரிக்க வேண்டும்.

இந்த புகாரானது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தையும், குற்றவியல் விசாரணை முறை சட்ட  பிரிவு 200  ஆகியவற்றையும் இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டும்.

குற்றம் நிகழ்ந்த இடம் உள்ள பகுதிக்கு ஆள்வரையுள்ள (jurisdiction) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Judicial Magistrate Court) தாக்கல் செய்ய வேண்டும்.

புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 202-ன்படி விசாரணை செய்து புகாரில் அடிப்படை முகாந்திரம்   (Prima facie ) உள்ளதென முடிவு செய்தால் எதிரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி புகாரின் நகலை வழங்கி கேள்வி கேட்டு பதில் பெற்ற பின்பு விசாரணைக்கு மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்.

மனித உரிமைகள் நீதிமன்றம் அந்த வழக்கினை அமர்வு நீதிமன்ற வழக்குகள் போல விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.

மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில்  பிரிவு 31-ன்படி  அரசு குற்றஞ்சாட்டுனர்கள்   பாதிக்கப்பட்ட நபருக்கு வழக்கு நடத்துவார்கள். 

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில்  மாவட்ட மனித உரிமை  நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -167 மட்டுமே 

பொது மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் மாவட்ட மனித உரிமை  நீதிமன்றங்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட போலி மனித உரிமைகள் அமைப்புக்களின் தவறான வழிகாட்டுதல்களும் அதன் பெயரிலுள்ள அடிப்படை பயம் தான் காரணமாகும். 

சிறைத் தண்டனை  வழங்க அதிகாரம் இல்லாத மனித  உரிமைகள் ஆணையத்தை எளிதாக அணுகும் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களைப் பயன்படுத்தி  மனித உரிமைகள் மீறல்கள் குறித்த குற்றம் இழைத்தவர்களை சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வையுங்கள் என்பதே பல நேர்மையான ஊழல் தடுப்பு நபர்கள் கூறும் அறிவுரையாகும்  ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் குறித்தே சரியான புரிதல் இல்லாமல் இருக்கும் மக்கள் தான் இந்த நீதிமன்றம் குறித்து உண்மை நிலை தெரியாமல் உள்ளனர், ஆனால் சிலர் தவறுகள் செய்து தப்பிக்க சில இரக்கப்பட்ட நபர் சரி ஒரு முறை மன்னிப்போம், மீண்டும் தேவையில்லாமல் மனித உரிமைகள் மீறப்பட்டால் பார்க்கலாம் என்பதே மனித உரிமை மீறல்கள் செய்த நபர்களின் அதிர்ஷ்டம் எனலாம். தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளருக்கு  ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது 

மனித உரிமை ஆணையம் வழங்கிய உத்தரவு

சீர்காழியில் போராட்டத் தில் ஈடுபட்ட வழக்கறிஞரைத் தாக்கிய காவல்துறை ஆய்வாளருக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் விதித்தும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது குறித்து விபரம் வருமாறு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 2017 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளரான வக்கீல் வேலு குபேந்திரன் என்பவரை அப்போது பணியில் இருந்த சீர்காழி காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலு துரத்திச் சென்று தாக்கிக் கைது செய்தார். இந்த காட்சி அப்போது சமூக வலைதளங்களில் பரவியது. அது குறித்து

சென்னை மனித உரிமை ஆணையத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:- பொதுவெளியில் வழக்குரைஞர் வேலுகுபேந்திரன் மீதான தாக்குதல் நடத்தப்பட் டது மனித உரிமைக்கெதிரானது. அவர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலுவுக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அந்தத் தொகையினை

தமிழ்நாடு அரசு, வழக்குரைஞர் வேலு குபேந்திரனுக்கு கொடுத்து விட்டு காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலுவின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆணைய நீதிபதி உத்தரவில்  குறிப்பிட்டுள்ளார். காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலு தற்போது பொறையாறு காவல் நிலையத்தில் பணியில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...