முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பிரியா காதல் திருமணம் குறித்து நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை நகரைச் சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பண்முகத் திறமை கொண்டவர் ஜெ.மொஹிதீன் அப்துல் காதர் என்ற ராஜ்கிரண்.


இவருக்கு ஜீனத் பிரியா என்ற வளர்ப்பு மகளும் நையினாமுகமது என்ற மகனும் உண்டு ஜீனத் பிரியா என்பவர் நடிகர் சண்முகராஜாா வின் உடன் பிறந்த தம்பி

சின்னத்திரை நடிகரான முனீஷ்ராஜாவை காதலித்து சுயமாகத் திருமணம் செய்து கொண்டார். முனீஷ்ராஜா நாதஸ்வரம் என்ற சின்னத்திரை நாடகத்திலும் , இன்னும் சில நாடகங்களிலும் நடித்தவர். முகநூல் மூலம் பழகி  இருவரும் சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள இருவரும் காத்திருந்தனர் என்றும் .     

ஆனால் இவர்களது காதலுக்கு நடிகர் ராஜ் கிரண் குடும்பத்தில் எதிர்ப்புக் கிளம்பியதாகவும் அதனால் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது திருமணம் குறித்து இருவரும் வெளியிட்டுள்ள காணொளி காட்சியில் விளக்கமளித்துள்ளனர்.


அதில் இருவரும் காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும் முறைப்படி பத்திரிகை அடித்து உங்களை அழைக்கலாமென்று இருந்தோம். ஆனால் அதற்குள் செய்திகளில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. கூடிய விரைவில் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம். இதுவரை எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் அதையடுத்து   நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் ஓரு விளக்கத்தை அளித்துள்ளார்.                                   
 என் "மகளை", ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. 

என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் என்ற நைனார் முஹம்மது என்றஒரே ஒரு மகனைத்தவிர,வேறு பிள்ளைகள் கிடையாது.


இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா.அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை "வளர்ப்பு மகள்" என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன்.


முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.  இந்த விசயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில்,  அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது, எனக்குத்தெரிய வந்தது. அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை.

எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக விசாரித்துத் தெரிந்து கொண்ட நான்,என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப்பெண் சொல்லியிருந்தார். அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று

என் மனைவி, அந்தப்பெண்ணிடம் அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, " சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்" என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தோம். இந்தச் சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான,"லட்சுமி பார்வதியை" பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன,


இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை.  இந்த நிலையில் தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போல், பொய் பொய்யாக  பேசிக்கொண்டு திரிகிறது, இந்தப்பெண். இந்த விசயத்தில் நான்  கோபப்பட்டபோது கூட, என்னை சமாதானப்படுத்தி, அந்தப்பெண்ணுக்காக பரிந்து பேசி  இன்று வரை அந்தப் பெண்ணுக்குஉறுதுணையாக நிற்பது, என் மனைவி மட்டும் தான். பெண்பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது... 

என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான்,  சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன். 

ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்...

இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப்பயன்படுத்தி  இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால், அதனால் ஏற்படும் எந்தப்பிரச்சினைக்கும் நான் பொறுப்பல்ல, என்பது தான். இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப் பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சீரியல் நடிகர், தன் குள்ளநரித்தனங்களால், என் வளர்ப்புப் பெண்ணிற்கு கணவனாகிக் கொள்ளக்கூடும். ஆனால், எந்தக்காலத்திலும்  எனக்கு மருமகனாக முடியாது.  இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும். எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அவரது உண்மையான பெற்றோர்கள் யார் என்று கூறியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கலாம் என்பதே இங்கு பொது நீதி ! அதை இனிவரும் காலங்களில் பார்க்கலாம் , அதுவரை இந்தப் பாடல் தான் இனிமை.!                                      "மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்

நால்வகைப் பேய்களும் நாட்டியமாடுதடா,

மனிதனென்னும் போர்வையிலிருக்குது

பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா,

அட யாரும் திருந்தலையே

இதுக்காக வருந்தலையே,

நீயும் நானும் ஒன்னு இது

நெசந்தான் மனசுல என்னு

பொய்யையும் புரட்டையும் கொன்னு

இந்த பூமிய புதுசா பன்னு!.

சும்மா சொன்னத சொன்னத சொல்லவா

சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா

அட உன்னதா நம்புறன் நல்லவா!

உன்னால மாறுதல் வந்திடுமல்லவா?

உன் மதமா? என் மதமா? ஆண்டவன் எந்த மதம்

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம். கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்

வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா

கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது

பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா

இப்ப புதுசா கணக்கெழுது

இங்கு வரட்டும் நல்ல பொழுது

அடியே ஞானத்தங்கம் இங்கு

நானொரு ஞானச்சிங்கம்

இதைப் பார்த்தா பொய்களும் ஓடும்

இரண்டு போட்டா உலகமும் மாறும்

அட பத்திரம் பத்திரம் பத்திரம்

தீர்ப்பு நாள் பக்கத்தில்

பக்கத்தில் வருது

இது சத்தியம் சத்தியம் சத்தியம்

சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.

அட போங்கடா போங்கடா போங்கடா

பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா

கூட வாங்கடா வாங்கடா வாங்கடா

சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா

அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா

முஸ்லிமா இல்லை இந்துவா?

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்" என்று பாடல் நம் காதில் ஒலித்தது....(இன்கேமராவில் ஒரு ஃபிளாஷ் பேக்) சில காலங்களுக்கு முன்னர் நடிகர் ராஜ்கிரண் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பத்மஜோதி என்பவரை இரண்டாவதாக தா திருமணம் செய்தவர் இரண்டாம் மனைவி மகன் தான் தற்போது உள்ளவர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் தனது முதல் மனைவி தன்னை நிம்மதியாக வாழ விடாமல் மிரட்டி வருவதாகவும் புகார் கூறி அப்போது இக் கருத்தைத் தெரிவித்தார் அதில் எனக்கும், என் முதல் மனைவி செல்லம்மாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், எட்டு வருடங்களுக்கு முன்பு அவரை நான் விவாகரத்து செய்து விட்டேன்

இஸ்லாமிய முறைப்படி தலாக் சொல்லி விட்டேன். இதுபற்றி கீழக்கரை பெரிய குத்பா பள்ளிவாசல் ஜமாத் கமிட்டிக்கும், கீழக்கரை டவுன் ஹாஜிக்கும் முத்தலாக் கடிதம் அனுப்பி விட்டேன். என் முன்னாள் மனைவி கீழக்கரை என்.எம்.டி. தெருவை சேர்ந்த செல்லம்மா என்பவருடன் எந்த வகையிலும் என்னால் சேர்ந்து வாழ முடியாது என்பதை கடிதத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். திரைப்பட வினியோகம் செய்த நான் கடனிலும், கஷ்டத்திலுமிருந்த போது தான் இதெல்லாம் நடந்தது. அப்போது என் முன்னாள் மனைவி விவாகரத்தை ஏற்றுக்கொண்டு, அவரும் எனக்கு தலாக் சொல்லிவிட்டார். தவமாய் தவமிருந்து படத்துக்குப் பின்னர், சினிமாவில் நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, கடன்களை எல்லாம் அடைத்து வருகிறேன். என் மனைவி பத்மஜோதியுடனும், மகன் நைனார் முகமதுவுடனும், நிம்மதியாக வாழ்கிறேன். அதைப் பொறுக்க முடியாமல், எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடந்த எட்டு வருடங்களாக என் முன்னாள் மனைவி பலவகைகளில் எனக்குத் தொந்தரவு கொடுத்து வருகிறார். என்னைப்பற்றி வதந்திகளைப் பரப்பி வருகிறார். ஏறுமுகத்திலிருக்கும் என் இமேஜைக் கெடுக்க வேண்டும் என்பதே அவருடைய ஒரே நோக்கம். சமீபகாலமாக எனக்கு கடிதம் மூலமும், போன் மூலமும் மிரட்டல்கள் வருகின்றன. இதுபற்றி நான் சென்னை நந்தம்பாக்கம் போலீசிலும், கீழக்கரை போலீசிலும் புகார் செய்துள்ளேன்" என்று கூறியிருத்த நிலையில் ராஜ்கிரண்.  வாழ்வில் வளர்ப்பு மகள் விஷயத்தில் இரண்டாவது பிரச்சினை என்பது இங்கு நினைவு கூர்வதால் இன்னும் சில   உண்மைகள் வெளிவரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.