முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தி நடைபோடும் காங்கிரஸ் ராகுல்காந்தியின் யாத்திரை

அரசியல் தாக்கங்களை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் யாத்திரை




ஏற்படுத்துமென்றாலும், தமிழக மக்களிடம் தற்போது ராகுல் காந்திக்கான இமேஜ் உயர்ந்து கொண்டுள்ளது. அன்று பிரியாணி செய்யும் அறந்தாங்கி அருகிலுள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்து வில்லேஜ் குக்கிங் சேனல் சமையல் குழுவினருடன் இளைஞர்களுடன் ஏற்கனவே வந்து சேர்ந்து சமையல் செய்த நிலையில், நேற்று முன்தினம் அந்தக் குழுவினரையும் சந்தித்து பேசினார். அந்தக் குழுவிலிருந்த ஒரு வயதான தாத்தாவை, கையில் பிடித்தவாறு உற்சாகமாகப் பேசிய ராகுல்காந்தி நீண்ட தூரம் நடந்து சென்றது மிகுந்த கவனத்தை ஈர்த்தார். 



காங்கிரஸ் தொண்டர்கள், ராகுல்காந்திக்கு இளநீர் வெட்டித் தந்து அன்பை வெளிப்படுத்தினார்கள்.. அதற்கடுத்து திடீரென ஒரு தேனீர் கடையில் நுழைந்த ராகுல்காந்தி. தோட்டியோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் உள்ள தேனீர் கடையில் டீ குடித்தார். அப்போது அங்கிருந்த லீலா என்ற பெண்மணி, இஞ்சி  டீ தயாரித்துத் தந்தார்.


அந்த டீயை ராகுல் காந்தி குடிப்பதை, அவருக்கு பின்னால் நின்று ரசித்து பார்த்தார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகிறது.




பிறகு, ஊராட்சிகளின் செயல்பாடுகளை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். அப்போது தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.டி. மகேந்திரன், ராகுல்காந்தி காலில் விழுந்து ஆசி பெற முயன்றதை பார்த்ததும் பதறிப்போய் தடுத்த ராகுல்காந்தி, "இப்படியெல்லாம் யாரும் காலில் விழக் கூடாது. யாரையும் பெரிய ஆள் என்று பஞ்சாயத்து தலைவர் நினைத்தால், அதிகாரம் எப்படி உங்கள் கைக்கு வந்து சேரும்?"





என்று வினா எழுப்பினார் இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை, பெரும் தலைவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவியுள்ளது இதுபோன்ற யாத்திரைகள் தான். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தண்டி யாத்திரை முதல் லால் கிஷன் அத்வானியின் ரத யாத்திரை வரை இந்தியா ஏராளமான யாத்திரைகளைக் கண்டுள்ளது  இந்த நாடு.. ஏன், நமது தமிழகத்தல் இந்தி திணிப்பு முதல் வைகோவின் பாதயாத்திரை வரை, அழியாத தடங்களை பதித்துச் சென்றுள்ளதன் மூலம் மக்களுடன் நேரடியாக நெருங்கிச் சந்திப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், அதிர்வுகள் அதிகம்.. அந்தவகையில், ராகுலுக்கு இந்த யாத்திரை கைகொடுக்கும் என்கிறார்கள்.






அரசியலில் பார்வையாளர்கள் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் பக்கம் கவனத்தை ஈர்க்க இத்தகைய பெரிய அளவிலான நடைபயணங்கள் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக நடைபயணத்தின் முதல்பகுதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.   இது வரை இரண்டாம்  நாள் நடைபயணத்தில் அவரோடு சற்றேக்குறைய் 30,000 பேர் உடன் நடந்தார்கள்..தமிழகம் அவர் மீது காட்டிய மகத்தான அன்பிற்கும்,ஆதரவிற்கும் அது உதாரணமாக அமைந்தது.





அதில் கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ,வட்டாரத் தலைவர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள், அனைத்து மாவட்ட ,வட்டாரதலைவர்கள் ,மாநில நிர்வாகிகள்,இளைஞர்,மகளிர்  காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வந்து பின்னர் சென்றனர்.

சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு தெண்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் IPS, கன்னியாகுமரி எஸ்.பி .ஹரி கிரண் பிரசாத் IPS,தேனி எஸ் பி பிரவீண் டோங்கரே IPS,பாதுகாப்பு பிரிவு  எஸ்.பி . சுவாமி நாதன் IPS ஆகியோர் எந்த அசம்பாவிதம் இல்லாமல் நடக்க காரணமாக இருந்தது 

நாடு  நெருக்கடியான காலகட்டத்தில் தவிக்கும் போது, ஒன்றிணைந்து செயல்படுவதின் அவசியத்தை காங் கட்சி தற்போது உணர்ந்து நடைபோடத் துவங்கிய நிலையில் ராகுல்காந்தியைச் சந்தித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்த விவசாய சங்க நிர்வாகிகளும் அடங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...