முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேரடிப் பலன் பரிமாற்றம் அரசின் மிகப்பெரிய சாதனை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பெருமிதம்

நேரடிப் பலன் பரிமாற்றம் அரசின் மிகப்பெரிய சாதனை, இடைத்தரகர்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்தது:


முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு

பிரதமரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தொகுப்பான சப்கா சாத் சப்கா விகாஸ் சப்கா விஸ்வாஸ் என்னும் புத்தகத்தை, கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இணைந்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, வெளியீட்டுப் பிரிவு இயக்குநரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இன்று வெளியிட்டார். இந்த புத்தகம் மே 2019 முதல் மே 2020 வரை பல்வேறு தலைப்புகளில் பிரதமர் ஆற்றிய 86 உரைகளின் தொகுப்பாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர், தேசம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் பற்றிய புரிதலை விரிவுபடுத்துவதற்கு இந்த புத்தகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக உள்ளது என்றார். தற்போதைய அரசு அனைவரும் நலம் காண வேண்டும் என்ற பொருள்படும் ‘சர்வே ஜன சுகினோ பவந்து’ என்ற பரந்த தத்துவத்தின் கீழ் செயல்படுவதாக அவர் கூறினார். முன்னரும் நல்ல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், ஆனால் தற்போதைய பிரதமர் மட்டுமே முன்னோடியாக இருந்து அனைத்து திட்டங்களுக்கும் காலக்கெடுவுடன் இலக்குகளை நிர்ணயித்து, கண்காணித்து உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார். மகத்தான தகவல் தொடர்புத் திறனைக் கொண்டுள்ள பிரதமர் மோடியால் நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக இணைக்க முடியும் என்று திரு நாயுடு கூறினார்.


கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகளைத் திறக்கும் தொலைநோக்குப் பார்வை எட்ட முடியாததாகத் தோன்றினாலும், பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ், அந்த இலக்கை மிக விரைவாக எட்டியதை திரு நாயுடு நினைவு கூர்ந்தார். நேரடிப் பலன் பரிமாற்றத்தை அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாகக் கருதும் திரு நாயுடு, இடைத்தரகர்களின் பிணைப்பிலிருந்து மக்களை விடுவித்து, நலத்திட்ட  நடவடிக்கைகளின் இறுதிப் புள்ளியை உறுதி செய்வதாகக் கூறினார். முன்னர் அரசு அல்லது அரசியல் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டபோது, இலக்கை அடைவது மக்களின் ஈடுபாட்டைப் பொறுத்தது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொண்டார். தூய்மை இந்தியா மக்கள் இயக்கமாக பிரதமரால் உறுதி  செய்யப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.


கேரள மாநில ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், புத்தகத்தில் ஒரு பொதுவான தொடர்பு நூல் இயங்குகிறது என்றும், அதுவே ஒதுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பிரதமரின் அக்கறை என்றும் கூறியுள்ளார். கழிவறைகள் மற்றும் தண்ணீர் இணைப்பு கிடைப்பது போன்ற இரட்டைப் பிரச்சினைகளுக்கு அரசுத் தலையீடு மிக நீண்ட காலமாகத் தேவைப்பட்டது, ஆனால் பல அரசுகள் வந்து சென்றாலும், இப்போதைய அரசுதான் இந்தப் பணியை ஆரம்பம் முதலே போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்தது என்றார் அவர்.

முத்தலாக் குறித்து பேசிய அவர், பல நூற்றாண்டுகளாக தழைத்தோங்கி வரும் இந்த தீமையை ஒழிப்பது சிறிய சாதனையல்ல. இது ஏமாற்றமளிக்கும் வகையில், திருமணமான முஸ்லீம் பெண்கள் தொடர்ந்து விவாகரத்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகினர். அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது மிகப் பெரிய தோல்வியாகக் கருதிய இதனை வெற்றியாக பிரதமர் மோடி மாற்றிக்காட்டினார். பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் பெண்களின் விடுதலையாளராக நினைவுகூரப்படுவார் என அவர் தெரிவித்தார். அனைத்து முரண்பாடுகளையும் எதிர்ப்பையும் தைரியமாகச் சமாளித்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக பிரதமருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

புத்தகத்தைப் பற்றி பேசிய மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இந்தப் புத்தகம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் 86 உரைகளை 10 அத்தியாயங்களில் தொகுத்துள்ளது என்றும், சிக்கலான சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய அவரது ஆழமான புரிதலையும் அவரது தெளிவான பார்வையையும் விளக்குவதாகவும் குறிப்பிட்டார். எதிர்கால வரலாற்றாசிரியர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

இந்த உரைகளில், சிக்கலான தேசிய பிரச்சினைகளில் அவரது எண்ணங்களையும் அவரது தலைமையையும் ஒருவர் காணலாம், இதன் விளைவாக இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக நிற்கிறது. இடைத்தரகர்கள் இல்லாத, கடைசி மைல் டெலிவரிக்கு சேவை செய்வதிலும் உறுதி செய்வதிலும் அவரது ஆர்வத்துடன் இந்தச் செயல்கள் தான், மக்கள் அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.