கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை! தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகை உடல் மீட்பு
திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான கபிலன் மகள் தூரிகை. எழுத்தாளரான தூரிகை, சில வருடங்கள் முன்பு வரை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தவர்.
2020 ஆம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women) என்னும் டிஜிட்டல் இதழைத் துவங்கி, பெண்களுக்கான பத்திரிகையாக நடத்திவந்தார்.
இன்று சென்னை அரும்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் பிரேதமாக மீட்கப்பட்டது. அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. முதல்கட்டமாக அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர் விசாரணையை நடத்துகின்றனர். தற்போது உடல் சென்னை சாலிகிராமத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தூரிகை எழுத்தாளராக மட்டுமல்ல, ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியவர். அவரின் தற்கொலை திரைப்பட மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .இவர் ”பீயிங் வுமன் (Being Women Magazine ) எனும் இதழுடன், தி லேபிள் கீரா (the label keera)எனும் ஆடை வடிவமைப்பகமும் நடத்தி வந்தார்.தூரிகையின் வயது 27 .
அவரது தந்தை கவிஞர் கபிலன் நடிகர் விஜயின்‘ஆல் தோட்ட பூபதி‘ பாடலின் மூலம் பிரபலமானவர். தமி்ழ் திரைப்படத்தில் நிறையப் பாடல்கள் எழுதியவர். கமல்ஹாசனின் ‘தசாவதாரம்‘ திரைப்படத்தில் நடித்திருப்பார். மிஷ்கினின் நண்பரான கபிலன், ‘பிசாசு 2‘விலும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
கருத்துகள்