முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.) எஃப்.சி.ஆர்.ஏ பதிவு கால அவகாசம் நீட்டித்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.) எஃப்.சி.ஆர்.ஏ பதிவு கால அவகாசம் நீட்டித்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.


கல்கத்தாவில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி எனும் தொண்டு நிறுவனத்தின் புதுப்பிப்பு விண்ணப்பத்தை கடந்து டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி உள்துறை அமைச்சகம் ஏற்க மறுத்த சில நாட்கள கழித்து இந்த அறிவிப்பு வெளியானது. வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) படி தொண்டு நிறுவனங் (என்.ஜி.ஓ.)களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி, 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 31 ஆம் தேதி, 2022 ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நேற்று நீட்டித்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே புதுப்பிப்பதற்கான நீட்டிப்பு வழங்கப்பட்டது.

“மத்திய அரசு பொது நலன் கருதி, எஃப்.சி.ஆர்.ஏ பதிவுச் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்தை மார்ச் 31, 2022 வரை அல்லது புதுப்பித்தல் விண்ணப்பத்தின் முடிவு தேதி வரை அல்லது எந்த தேதி முன்னதாக வருகிறதோ அந்த தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது” என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

சில பாதகமான தகவல்களின் படி அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனத்தின் புதுப்பித்தலை ஏற்க மறுத்ததாக உள்துறை அமைச்சகம் கூறியது. தொண்டு நிறுவனத்தின் பதிவு அக்டோபர் 31 ஆம் தேதி காலாவதியானதால் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தது. உள்துறை அமைச்சகம் புதுப்பிப்பதற்கு மறுத்ததைத் தொடர்ந்து, இந்தத் தொண்டு நிறுவனம் அதன் அனைத்து மையங்களுக்கும் தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பங்களிப்பு வங்கிக் கணக்குகளை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது.1962 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட 25 ஆண்டிற்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972- ஆம் ஆண்டில், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான பன்டித ஜவகர்லால் நேரு விருது, 1980-ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட இந்திய உயர்விருதுகளை அடுத்த பத்தாண்டுகளில் பெற்றார்.,  அவரது வரலாறு இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அன்னை தெரசாவைப் பற்றிய எல்லா இந்தியாரும் உயர்வாகப் பார்க்கவில்லை. கல்கத்தாவில் பிறந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது விமர்சகரான அரூப் ச்சேட்டர்ஜி அவர் வாழ்ந்த காலத்தில் கல்கத்தாவின் முக்கிய அங்கமாக இருக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். அன்னை தெரேசா தனது சொந்த ஊரான கல்கத்தாவின் புகழைக் குலைத்து விட்டதாகக் அவர் குறை கூறியுள்ளார். அவரது தன்னலமற்ற சேவை செய்யும் சக்தியையும், தைரியத்தையும் புகழ்ந்தபோதிலும், பொது கூட்டங்களில் அவர் கருக்கலைப்பை எதிர்ப்பதையும், அதை அரசியல் நோக்கமில்லாததாகக் காட்டிக்கொள்வதையும் குறை கூறியுள்ளார்.அன்னை தெரேசா, ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி, 1910 - ஆம் ஆண்டு பிறந்தார் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, 1997 ஆம் ஆண்டு காலமானார்), அல்பேனியா நாட்டில் பிறந்த பூர்வீகம் கொண்டு இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. 1950 ஆம் ஆண்டு, இந்தியா வந்துகொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். ஆனால் இவர் கிருஸ்தவ மதம் சார்ந்தே தொண்டு செய்தார்.

இந்த நிலையில். எஃப்.சி.ஆர்.ஏ திருத்தம் மோசமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதால், தொற்றுநோய்க்கு மத்தியில் எதுவும் செய்ய முடியவில்லை என்று பல்வேறு நீதிமன்றங்களில் பல தொண்டு நிறுவனங்கள் வழக்கு மனுக்களைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது எவ்வாறாயினும், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) மட்டுமே புதுப்பித்தலில் அங்கீகரிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

அமைச்சகத்தின் அறிக்கை வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) விதிகள், 2011-ன் விதி 12 ன் படி பதிவுச் சான்றிதழ் காலாவதியாகும் முன் நிறுவனங்கள் எஃப்.சி.ஆர்.ஏ தளத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.எனவே, அனைத்து எஃப்.சி.ஆர்.ஏ பதிவு செய்யப்பட்ட  தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களும், பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டால், புதுப்பித்தல் விண்ணப்பத்தை மறுத்த தேதியில் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகிவிட்டதாகக் கருதப்படும். வெளிநாட்டு பங்களிப்பைப் பெறவோ அல்லது பெறப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பைப் பயன்படுத்தவோ சங்கம் தகுதி பெறாது” என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பில் கூறியுள்ளது.

எஃப்.சி.ஆர்.ஏ திருத்தமானது வெளிநாட்டு உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) புது டெல்லி கிளையில் கணக்கு தொடங்குவதை கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், வெளிநாட்டவரின் அமைச்சுப் பிரிவின் காரணமாக, தேவையான அனுமதிகளை வழங்குவதில் உள்துறை அமைச்சகத்தின் தாமதத்தால் செயல்முறை தடைபட்டது. “இந்த காரணத்தால்தான் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கணக்கைத் தொடங்கிய இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் தாமதமாகின்றன” என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த