முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காரைக்குடியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பொதுக்கூட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த நபர்களின் எண்ணிக்கை தான் அதிகம்

பல்வேறு கட்டங்களாக பாரதீய ஜனதா கட்சியின்


மாநில மாவட்ட பிரதான நிர்வாகிகளுடன்,

அக் கட்சியை பலப்படுத்துவது குறித்தும், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்த அகில இந்திய தலைவரான ஜே.பி நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார் அப்போது மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் பாஜகவின் தலைவர் அண்ணாமலை தலைமையிலான நபர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். தவில் நாதஸ்வரம்,



முழங்க மற்றும் வழி நெடுகிலும் மலர் தூவி ஜே.பி.நட்டாவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.பின்னர் விமான நிலையம் அருகில் தனியார் ஹோட்டலில் பல்வேறு துறைகளின்  பிரபலங்கறளைச் சந்தித்துப் பேசினார் மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு புறப்பட்ட நட்டா மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம் மகாலில் நடைபெறும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டும், பிரதான நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனையும் நடத்தினார். பாஜக மகளிர் நிர்வாகிகளுடனும் தனியாக ஆலோசனை நடத்தினார்.இரவு என்.ஜி.ஓ காலனி விளையாட்டுத் திடலில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கிப் பேசினார்  பொதுக்கூட்டம் முடிந்து இரவில் காநாடுகாத்தான் ராஜா செட்டிநாடு இல்லத்தில் தங்கினார்.



அப்போதும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்று தெரிகிறது.காரைக்குடியில் நடைபெற்ற பாஜக  பொதுக்கூட்டத்தில் நட்டா உரையாற்றிய போது எதிர்பார்த்த கூட்டம் இல்லை மேலும் உள்ளூர் முகங்கள் அரிதாகவே இருந்தது வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நபர்கள் மட்டுமே காணப்பட்டனர் ஏராளமான சேர்கள் காலியாகக் கிடந்த நிலையில் புகைப்படக் கலைஞர் கண்களில் பதிவாகி இருக்கிறது.


ஜூலை மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார் அன்றிலிருந்தே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சியின் தலைவர்கள் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் அடிக்கடி தென்னிந்தியாவுக்கு வருகின்றனர்.  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. குறுகிய கால இடைவெளியில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை தமிழ்நாடுக்கு வந்து சென்றார். இதேபோல் கேரளா,




தெலுங்கானாவுக்கு அமித்ஷா அண்மையில் தான் சென்றார்.இந்த நிலையில் பாஜக வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வந்தார். சிவகங்கை மாவட்டத்தில் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார் . காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் தமிழர்கள் பாரம்பரிய உடைகளில் வேட்டி, துண்டு போட்டு   கலந்துகொண்டார். விழாவில்

பாரத் மாதா கி ஜே, வெற்றி வேல், வீரவேல் என முழக்கமிட்டவர் பின்னர் தனது உரையைத் தொடங்கினார். 'இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கையிலும், இங்கு எழுப்பப்படும் கரகோசத்தை காணும்போதும் ஒரு தெளிவான உண்மை எனக்கு தெரிகிறது. என் தொடர்ந்து பேசினார். அவருக்கு முன் பேசிய கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தற்போது திமுக என்ற இருள் சூழ்ந்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள்கள விற்பனை செய்யபபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.தேசிய தலைவர் காரைக்குடி வந்திருப்பது கட்சியை பலப்படுத்தி நம்மையெல்லாம் ஊக்குவித்து வளர்பதற்காகவே.


எட்டு முறை பதவியில் இருந்து மாவட்டத்திற்கு ஒன்றும் செய்யாத குடும்பத்திடம் இருந்து சிவகங்கையை காப்பாற்றி பாஜகவை கொண்டு வருவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அதனை நாம் முனைப்புடன் செய்ய வேண்டும்” என்று பேசினார்.கூட்டத்தில் அதிகம் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நபர்களின் எண்ணிக்கை அளவு அதிகம் சிவகங்கை மக்கள் இந்த நிகழ்வுகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை மறுநாள் காலையில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.இன்று 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து பிஜேபி தேசிய தலைவர் ஜே பி நட்டா மாநில,  மாவட்ட நிர்வாகிகளுடன் காரைக்குடியில் விவாதித்தார். 





பின்னர் திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில்  வழிபட்டார்.






அவரை பிச்சைக்குருக்கள் வரவேற்றார் தரிசனம் செய்ய அவருடன் எச்.ராஜா,அண்ணாமலை  மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.பாஜக வின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை தெற்கு மண்டலத் தலைவர் ராமலிங்கம் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் உணவுண்டு கலந்துரையாடினார்





.பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் அடக்குமுறையை எதிர்த்து வீரத்துடன் போராடி, உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் முடிசூடா மன்னர்கள் மருது சகோதரர்களுக்கு, அவர்கள் நினைவிடத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் மரியாதை செலுத்தினார்.



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தாயார் பிறந்த வீட்டில் இரவு தங்கினார் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அங்கு உடனிருந்த அணைவரும் முக்கியமான அக் கட்சியின் தலைவர்கள் மட்டுமே ராஜா சர் இல்லத்தில் ஆலோசனையின் போது உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...