முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் துணைத் தலைவர் ,பிரதமர் வாழ்த்து

தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;


 “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான  நல்வாழ்த்துக்களையத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி மகிழ்ச்சியின் பண்டிகை. தீபாவளி நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் லட்சுமி தேவியை வணங்கி, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ பிரார்த்தனை செய்கிறார்கள்.

தீபாவளி பண்டிகை பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகும். தீபாவளியின் ஒளி நம் அகம் மற்றும் புற அறியாமை இருளை அகற்றும் ஞானத்தைக் குறிக்கிறது.

ஒரு தீபத்தைப் போல நம் வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும். பின்தங்கியவர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களின் மனதில் ஆழமாக வளரட்டும், மேலும் நாம் அனைவரும் நமது உதயம் மற்றும் லாபம் என்னும் பாரம்பரியத்தைத் தொடர்வோம்" .தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவர்  திரு ஜக்தீப் தன்கர், தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“தீபத் திருநாளான தீபாவளி திருநாளில் நம் நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் எனது அன்பான, மகிழ்ச்சிகரமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடப்படும் தீபாவளி, பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, சீதையம்மா மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கிறது.  மேலும் தீமையை ஒழிப்பதற்காக அவர் முனிவர்களிடமிருந்து அறிவைப் பெற்று, காடுகளின் வாழும் பொது மக்களை ஒன்றிணைத்தார்.

நமது இலட்சியமிக்க, கருணை உள்ளம் கொண்ட  ஆளுகையான  ராமராஜ்ஜியத்தின் வருகையையும் தீபாவளி குறிக்கிறது.

ஸ்ரீராமரின் நல்லொழுக்க வாழ்க்கை முறையானது,  நமது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

லட்சிய மன்னன், கீழ்ப்படிதலுள்ள மகன், வெல்ல முடியாத போர்வீரன், நேர்மையான வாழ்க்கை என அவரால் கட்டமைக்கப்பட்ட ‘மர்யதாஸ்’ அவரை ‘புருஷோத்தம’ ராமனாக, தலைமுறை, தலைமுறையாக மனிதகுலத்தால் பின்பற்றப்படும் முன்மாதிரியாக  மாற்றினார்.

தீபாவளி என்பது செல்வச் செழிப்பின் தெய்வமான  லட்சுமி தேவி மற்றும் ஞானம், நல்லதொரு எதிர்காலத்தை அருளும் அதிர்ஷ்டத்தின் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான சந்தர்ப்பமாகும்.

இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் ஞானம், இறையச்சம், செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும்.தீபாவளிப் பண்டிகையையொட்டிப் பிரதமர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்


தீபாவளிப் பண்டிகையையொட்டிப்  பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தீபஒளித் திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டுவரட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

ட்விட்டர்  செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:


"அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்பது ஒளி மற்றும் ஒளிக்கதிர்களுடன்  தொடர்புடையது. இந்தப் புனிதமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் ஓர் அற்புதமான தீபாவளியைக் கொண்டாடுவீர்கள் என்று நான்  நம்புகிறேன்

விளக்கு ஒளியின் ஆளுமையும், பிரகாசமும் நம் நாட்டில் நம்பிக்கை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தட்டும். மக்களுக்கு பிரதமர் தன்தேரஸ் வாழ்த்து


தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்துடன் தந்தேரஸின் நெருங்கிய தொடர்பை விளக்கியுள்ள பிரதமர், இந்தியாவின் மருந்துகள் மற்றும் யோகாவில் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருப்பதை அங்கீகரித்து, இந்தத் துறைகளில் பணியாற்றுபவர்களின் பாரம்பரிய முயற்சிகளைப் பாராட்டினார். உலகளாவிய ஆயுஷ் உச்சி மாநாட்டில் தாம் ஆற்றிய  உரையையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;


“தந்தேராஸின் மங்களகரமான சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்கள். நமது தேசத்தின் மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவார்கள். செல்வத்தை உருவாக்கும் உணர்வு நம் சமூகத்தில் மலரட்டும்’’.

“தந்தேரஸ் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.அண்மைக்காலத்தில், இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள் மற்றும் யோகா உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தத் துறைகளில் பணியாற்றுபவர்களை நான் பாராட்டுகிறேன். சமீபத்திய உலகளாவிய ஆயுஷ் உச்சி மாநாட்டில் எனது உரையைப் பகிர்ந்து கொள்கிறேன்’’. தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் வாழ்த்து

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மங்களகரமான இந்த தீபாவளி பண்டிகை மக்கள் உள்ளங்களில் உள்ள துன்பங்களை அகற்றி, அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளியால் மகிழ்ச்சி பரவ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். இந்த பொன்னான நன்நாளில் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி கூற்றுபடி நம் உள்ளூர் உழைப்பாளிகளால் உருவாக்கிய விளக்குகள், புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பொருட்களை வாங்க மகிழ்ச்சியாக கொண்டாடி நாடு முழுவதும் அமைதியையும் மகிழ்ச்சியையும் பரப்புவோம்.

உலகெங்கும் வாழும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் வாழ்த்து

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மங்களகரமான இந்த தீபாவளி பண்டிகை மக்கள் உள்ளங்களில் உள்ள துன்பங்களை அகற்றி, அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளியால் மகிழ்ச்சி பரவ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். இந்த பொன்னான நன்நாளில் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி கூற்றுபடி நம் உள்ளூர் உழைப்பாளிகளால் உருவாக்கிய விளக்குகள், புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பொருட்களை வாங்க மகிழ்ச்சியாக கொண்டாடி நாடு முழுவதும் அமைதியையும் மகிழ்ச்சியையும் பரப்புவோம்.

உலகெங்கும் வாழும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த