முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலவர் ஒட்டக்கூத்தர் உருவாக்கிய கூத்தனூர் சரஸ்வதி ஆலயம்

கலைவாணி சரஸ்வதி தேவிக்குப்


புகழ்பெற்ற ஸ்தலம் கூத்தனூர் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் அருகிலுள்ள சரஸ்வதி கோவில்         


   "வாணியைச் சரண்புகுந்தேன். ;        அருள்வாக்களிப்பாளெனத் திடமிகுந்தேன்;  பேணிய பெருந்தவத்தாள்,-                    நிலம் பெயரளவும்  பெயர் பெயரா தாள்,     பூணியல் மார்பகத்தாள்-ஐவர்  பூவை;              திரௌபதி புகழ்க் கதையை மாணியல் தமிழ்ப்பாட்டால் - நான்வகுத்திடக் கலைமகள்  வாழ்த்துகவே! "எனப் பாரதியின் வார்த்தையில் வணங்கி....


புலவர் ஒட்டக்கூத்தர் மன்னர்கள் விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகியோரது  அவைப் புலவராகவும், பிரதானி அமைச்சராகவும் பணியாற்றியவவருக்குப் பல பட்டங்கள்  கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. சோழநாட்டின் பாணர் கூட்டம் வாழ்ந்த  கூத்தனூரில் பூந்தோட்டம். கிராமத்தில் கலைகளுக்கு அதிபதியன சரஸ்வதி தேவி அம்மன் திருத்தலம் புராண காலத்தில் அம்பாள்புரி என்றும், பூந்தோட்டம் எனவும் அழைக்கப்பட்டு  பிற்காலத்தில் இந்த ஊரை இரண்டாம் ராஜராஜ சோழன் தன் அவைப் புலவர் ஒட்டக்கூத்தருக்கு தர்மாசனம் செய்த இனாம் வழங்கியதால் அவரது பெயருடன் கூத்தனூர் ஆகும் சரஸ்வதிக்கான தனிக் கோயில் இங்கு மட்டுமே உண்டு. கருவறையில், சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரை மலரில் பத்மாசனத்தில் வீற்றிருக்க. வலமேல்கரத்தில் அட்சமாலை ஏந்தி, வல கீழ்க்கரத்தில் சின்முத்திரை காட்டி, இடது மேல்கரத்தில் அமிர்த கலசம் ஏந்தி, இடது கீழ்க்கரத்தில் புத்தகமும் கொண்டு எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் அம்மன்.

புருஷோத்தம பாரதிக்கு விஜயதசமியில் அம்பிகையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுவதன். காரணமாக விஜயதசமி நாளில் பல ஊர்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இக் கோவிலுக்கு அழைத்து வந்து வித்தியாப்பியாசம் செய்த பிறகு பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட்ட ஸ்தலமிது. அவர் கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் அமைத்து, காவிரி நீரால் சரஸ்வதி தேவிக்கு அபிஷேகம் செய்து பூஜித்தார். அவருடைய பூஜையில் மனம் மகிழ்ந்த சரஸ்வதி தேவி, ஒட்டக்கூத்தருக்குத் தன் வாய் தாம்பூலத்தை வழங்கியதன் பயனாக ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறம் பெற்று, மூன்று சோழப் பேரரசர்களின் அரசவைப் புலவராக விளங்கியவர்.


சரஸ்வதி கோயிலில் வசந்த நவராத்திரியும், சாரதா நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி விழா 12 நாள்களும், பின்னர் பத்து நாள்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற. விழா நாள்களில் சரஸ்வதி தேவி சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் எனக் காட்சி தருகிறார்  சரஸ்வதி பூஜையன்று நியமத்துடன் விரதமிருந்து, பக்தர்கள் தரிசனம் செய்யலாம் .   புலவர் ஒட்டக்கூத்தர் மூன்று சோழப் பேரரசின் மன்னர்களுக்கும் அவைப் புலவரான நிலையில் , கலிங்கத்துப்பரணி என்ற நூல் இயற்றியுள்ளார் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கத்துப் போரில் வெற்றி குறித்துப் பாடப்பட்டதாகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாக


அனந்தவர்மன் என்னும் வட கலிங்க (தற்போது ஒடிசா)மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் பொது ஆண்டு . 1112-ல் போரில் வென்ற செய்தியே கலிங்கத்துப் பரணி இரண்டு வகை முதல் வகை புலவர் செயங்கொண்டார் இயற்றியது. தீபங்குடியைச் சேர்ந்த அருகர். இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரென அறியலாம்.  புலவர் ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் தென்கலிங்க மன்னன் கலிங்க வீமனை வென்ற திறத்தைப் பாடுகிறது. இந் நூலைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஒட்டக்கூத்தர் பாடிய பரணியின் பாடல் என அறிஞர்கள் கருதும் 

"மோடி முன்தலையை வைப்பரே மூடி

குலைந்த குஞ்சியை முடிப்பரே

ஆடி நின்று புதுத் திலதம்

அம் முகத்தில் அமைப்பரே 

அடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ

அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ

கொடுத்த சிரம் கொற்றவையைத் துதிக்குமாலோ

குரையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ 

மண்ணின் ஆள் அற அறுத்த தங்கள் தலை

வைத்த பீடிகை வலங்கொள

விண்ணின் ஆகிய தன் யாகசாலை தொறும்

மீளவும் சிலர் மிறைப்பரே "

பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய வகை. போரிலிருந்து மீண்ட தலைமகன் பால் புலவியுற்ற தலைமகளது ஊடலைத் தீர்க்க புலவர்கள் வாயிலாவதும், புலவியாற்றிய பின்னர், தலைவன் சென்ற காட்டின் கொடுமையையும் தலைவனின் வீரத்தையும், அக்காட்டிலுள்ள பேய்கள் காளிக்குச் சொல்லுவதையும், காளி பேய்களுக்கு உரைப்பதையும் எடுத்துச் சொல்லும் வடிவுடன் பரணி நூலானது அமையும். பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு( இரத்தமும் இறைச்சியும் கலந்த உணவு) அட்டு ( சமைத்து) உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்துப் போரில் வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக் கூறுவது. காளிக்குக் கூளிகள் கூறுவதாக அமைவதாகும்.புலவர் ஒட்டக்கூத்தர் முதலியார் "செருத்தம் தரித்துக் கலிங்கர் ஓட, தென்தமிழ்த் தெய்வப் பரணி கொண்டு வருத்தம் தவிர்த்து உலகு ஆண்ட பிரான், மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே - ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணி", (தாழிசை 276)"


வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் செயங்கொண்டான் விருத்தம் என்னும் ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக்கூத்தன் கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் வசைபாடக் காளமேகம் பண்பாக வுயர்சந்தம் படிக்காச லாதொருவர் பகரொணாதே" என்று அவர் புகழ் பாடும் வரிகளாகும். மன்னர் குலோத்துங்க சோழனின் மனைவி பாண்டிய நாட்டின் ராஜகுமாரி. அவளது ஆசிரியர் நளவெண்பா  பாடிய புகழேந்திப்புலவர். அவர் மஹாராணி விருந்தினராகச் சோழ நாட்டில் தங்கியிருந்தபோது புலவர் ஒட்டக்கூத்தரால் புகழேந்திப்புலவர் சிறை வைக்கப்பட்டார். அதில் கோபம் கொண்ட அரசி, மன்னன் குலோத்துங்கன் அந்தப்புரம் வரும் சமயம் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அந்த காலத்தில் மகாராணிகள் கோபம் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப்புலவரை அனுப்பி சமாதானம் செய்வது வழக்கம். அதன்படி குலோத்துங்க சோழன் தன் அவைக்களப்புலவரும், குருவுமான ஒட்டக்கூத்தரை சமாதானம் செய்விக்க வேண்டிய நிலையில்  இராணியின் அந்தப்புரத்திற்கு அனுப்பினார். புலவரும் ராணியின் அறைக்கு முன்னால் நின்று கொண்டு பாடல்கள் மூலம் சமாதானப்படுத்த முயன்றார். ஒட்டக்கூத்தரின் பாடலைக் கேட்ட இராணி மேலும் கோபமுற்று கதவை தாழிட்டு கொண்டாள். ஆதலாலேயே ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத்தாழ்ப்பாள் என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது.

புகழேந்திப்புலவர் சிறையிலிருப்பது தான் இராணியின் கோபத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்த மன்னர்  புலவரை உடனே விடுதலை செய்தார்.ஈசல் பிடிப்பதெல்லாம் வேட்டையில் சேராது என்பது மாதிரி, களத்திற்காணும் எல்லா வெற்றிகளுமே பரணிக்குப் பாடுபொருளாகாது. எவனொருவன் பகைவரின் ஆயிரம் யானைகளை வெட்டிச் சாய்த்து வெற்றி கொள்கிறானோ அவன் மீது மட்டுமே பரணி பாடப்படும். “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மான்னவனுக்கு வகுப்பது பரணி” என்பது இலக்கண விளக்கப் பாட்டியல்.

ஆயின், கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் இதில் யார்? முதலாம் குலோத்துங்க சோழனா? கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் என்பது வரலாற்று வழக்கு. ஆணையிட்டவன் குலோத்துங்கனாயினும் களத்திலே ஆயிரம் யானை வென்றவன் படைகொண்டு சென்ற கருணாகரத் தொண்டைமான். ஆதலின் நாட்டுடைத் தலைவன் குலோத்துங்கனாகிறான்; பாட்டுடைத் தலைவன் கருணாகரனாகிறான்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த