முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பு ஆணையத்தின் அறிக்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமணையில் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை அதிர்ச்சி  கிளப்பிவிட்ட நிலையில் தற்போது   முக்கியமாக  தமிழ் இணைய இதழில் , மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி அளித்துள்ளதில் அவர் கூறியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம் அவரது வினா?வில் நமக்கும் உடன்பாடு உண்டு, நாம் சொல்ல நினைப்பதை அவர் கூறுகிறார் :- "டாக்டர் ரிச்சார்ட் பீலே என்பவர் தாஜ் ஹோட்டலில்





அந்தச் சமயத்தில் தங்கியிருந்தார். ரூபாய்.2987.81 பைசாவுக்கு ஒரு டிரிங்க்ஸ் குடிச்சிருக்கார். மறுநாள் ரூபாய்.1554.87 பைசாவுக்கு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.



இந்த விஷயத்தைத் தான், நான் முக்கியமானதாக பார்க்கிறேன். இதில் ஆறுமுகசாமி ஆணையம் தீவிரமாக இறங்கி விசாரித்திருந்தால், அவர் என்ன டிரிங்க்ஸ் அன்று சாப்பிட்டிருப்பார் என்று கண்டுபிடித்திருக்கலாம். மற்றபடி இந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டானது, குப்பையில் போட வேண்டிய ரிப்போர்ட்டு தான்.காரணம், இதன் முகாந்திரம் என்ன?       நோக்கம் என்பது முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மர்ம மரணத்தைக் கண்டுபிடிப்பது கிடையாது.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  எடப்பாடி கே.பழனிச்சாமி  இருவருக்கும் நடுவில் நடந்த சமரசத்தின் பாகமாக வந்த கமிஷன் இது. ஜெயலலிதாவின் மரணத்தில், எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு டவுட்டே கிடையாது. அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்களுக்கும் இது சம்பந்தமான எந்த டவுட்டும் இல்லை. ஒரு குறிப்பிட்ட பேருக்கு மட்டும் தான் டவுட் இருந்தது.. அப்படி அவர்களுக்கெல்லாம் மரணத்தில் சந்தேகம் இருந்திருக்கும் என்று சொன்னால், எய்ம்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பியாவிலிருந்தோ டாக்டர்களை வரவழைத்திருக்க மாட்டார்கள்.  அதனால், இந்த விஷயத்தில் கமிஷனே தேவையில்லை.இந்தக் கமிஷன் படி இரண்டு  ரிப்போர்ட்கள் எடுக்கப்படுகின்றன.

ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பு இருக்கக்கூடிய உடல்நிலை, ஆஸ்பத்திரிக்கு வந்தபிறகு அவரது உடல்நிலை பற்றி குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். ஆனால், இந்த அறிக்கையில் தேவையில்லாத விஷயங்களைதான் நிறையச் சொல்லியுள்ளார்கள். ஜெ.ராதாகிருஷ்ணன் கால்நடை டாக்டரா? இல்லையா? என்று அழுத்தமாக அதையே பேசக் காரணம் என்ன? உங்களுக்கென்ன அதில் அவ்வளவு பெரிய ஆனந்தம்?

ஜெ.ஜெயலலிதா மரணத்தில் எந்த விதமான மர்மமும் கிடையாது, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை நாம் கடந்து போக வேண்டியது தான்.

பேஷண்ட் ஜெ.ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கும் சாட்சியங்கள் சொன்ன நேரத்துக்கும் வித்தியாசம் உள்ளதாக எப்படி சொல்கிறார்கள்? ஒரு முதல்வர் இறந்ததை, 30 மணி நேரம் மறைத்து வைத்திருக்க முடியுமா? ஒருநபர் இறந்துவிட்டார் அல்லது இறக்கவில்லை என்பதை யார் முடிவு செய்வது? நீதிபதியா முடிவு செய்வார்? டாக்டர் தானே முடிவு செய்ய வேண்டும்.  ஒரு முதல்வரோ, அமைச்சரோ, ஒரு முக்கியப் பிரமுகரோ அட்மிட் ஆகிறார் என்றால், அவர் இறந்துவிடக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவாவது ஆறுமுகசாமி கமிஷனுக்கு இருக்கிறதா? ஆஞ்சியோ செய்ய வேண்டுமா? வேண்டாமா? அதை பேஷண்ட் தாங்குவார்களா? இல்லையா? என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்?சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்வது முதல் எதுவானாலும், சட்டப்பூர்வமாக சசிகலா நடராஜனால். எதிலுமே முடிவெடுக்க முடியாது. அது தொடர்பாக கையெழுத்தும் போட முடியாது. எம்ஜிஆரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றபோது, ஹண்டேவிடம் சிறப்பு அதிகாரம் தரப்பட்டு, எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனித்துக் கொள்வது முதல் கையெழுத்து போடுவது வரை அத்தனையும் அன்று கேபினெட்டில் பேசி முடிவு செய்தார்கள். வி.என்.ஜானகியம்மையார் கூடவே இருந்தாலும்கூட, முடிவெடுத்தது என்னவோ கேபினட்தான். ஆனால், கேபினெட் எடுத்த முடிவுக்கு ஜானகியம்மா ஒப்புக் கொண்டார். அந்த மாதிரி இந்த விஷயத்தில் ஏதாவது நடந்ததா?ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, எனக்கு தெரிந்து ஆறு முறை கேபினெட் வந்து போயுள்ளார்கள். அப்போதுகூட சிகிச்சை உட்பட இந்த விவகாரத்தில் யார் முடிவெடுப்பது என்பது தீர்மானமாகவில்லை.. சிகிச்சை தொடர்பாக சசிகலா நடராஜன்  முடிவெடுக்கட்டும் என்று கேபினெட்டே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? எனவே, இங்கு வந்து போன அனைத்து அமைச்சர்களுக்கும் இதில் பொறுப்புள்ளது. காரணம் ஆறு முறை கூடியிருக்கிறார்கள், அப்பறம் எப்படி டாக்டர் விஜயபாஸ்கர் மட்டும் பொறுப்பில் வருகிறார்? ஆறுமுகசாமி ஆணையம் தானே இதையெல்லாம் கேட்டிருக்க வேண்டும்.. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இராம்மோகன்ராவ் என்ற அதிகாரியை இதில் சேர்த்து விட்டுள்ளார். மாநில முதல்வர் தொடர்பாக, அதிகாரி தான் முடிவெடுப்பாரா? மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்கு சட்ட விதிகள் நிறைய உள்ளன. ஒரு சட்டரீதியான விஷயங்களைக்கூட அளிக்காத அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்து, ஏன் ஆறுமுகசாமி கேள்வி எழுப்பவில்லை? அப்படி என்ன உள்நோக்கம்? ஏனென்றால் ஓ.பன்னீர் செல்வத்தால் தானே இவருக்கு இந்த வேலையே கிடைத்திருக்கிறது. கமிஷன் நியமனத்துக்காக நாலரை கோடி ரூபாய் செலவு செய்தவரைப் பார்த்து கேள்வி எழுப்ப முடியாத கூச்சம் இருந்திருக்கும்.யாரை ஓங்கி அடிக்க முடியாதோ அவர்களை பலிஆடு ஆக்கிவிடுவது தான் கமிஷனின் வேலை. ராதாகிருஷ்ணன், ராம்மோகன்ராவ், அப்போலா மூன்று  டாக்டர்கள், அதிகார பலம் இல்லாத சசிகலா, விஜயபாஸ்கர் இப்படி கோர்த்து விட்டுள்ளார். இன்னைக்கு அதிகாரத்தில் உள்ள யாரையாவது பார்த்து கமிஷனில் சேர்த்துள்ளார்களா? அதிகாரத்தில் உள்ளவர்களை ஏதாவது கேள்வி கேட்டிருக்கிறார்களா? ஏன், அன்னைக்கு டெல்லியில் இருந்து அமித்ஷா வந்து போகலையா? மோடி வந்து போனாரே? அமைச்சர்கள் வந்து போனார்களே? வெங்கய்யா நாயுடு இங்கேயே தான் டென்ட் போட்டு உட்கார்ந்துட்டு இருந்தாரு. யாரையுமே இவங்க எதையுமே விசாரிக்கவில்லை.யார் மீதெல்லாம் காழ்ப்புணர்ச்சி உள்ளதோ, அவர்கள் மீதெல்லாம் ஆறுமுகசாமி புழுதி வாரி இறைத்துள்ளார்.. அப்பல்லோ மருத்துவமனை மீது இவருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உண்டு. அப்போலா மருத்துவமனை டாக்டர்களை அடிக்கடி விசாரணை என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பாராம்.. ராதாகிருஷ்ணன் மீதும் தனிப்பட்ட பகை இருக்கிறது. அதையெல்லாம் இங்கே பேச முடியாது.. ஏன் இந்த விவகாரத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி பெயர் வரமாட்டேங்குது? ஏன் ஓ.பன்னீர்செல்வம்  பெயர் இதில் வரவில்லை? எனவே, என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா.மரணத்தில் மர்மம் கிடையாது.. இது வேஸ்ட் கமிஷன். இதை நாம் கடந்து போக வேண்டும்..திமுக இதில் நிச்சயம் அரசியல் நோக்கம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்.. அதை தவறு என்று சொல்லவில்லை.. மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதியில் சொன்னார்.. சட்டசபையில் ஆறுமுகசாமியை கிட்டத்தட்ட சப்போர்ட் செய்வது போலதான் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படி அறிக்கையை தாக்கல் செய்து, இன்னொரு வாக்குறுதியையும் நிறைவேற்றிவிட்டோம் என்று அரசியல் செய்துவிட்டார்கள். வேறெதும் இதில் இல்லை" என்றார். மற்றும் உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே, இந்த கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப்பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், 24 மணி நேரமும், குறிப்பிட்ட முக்கிய பிரமுகர் அருகில் நிழல் போல இருந்து, அவரை பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பில் உள்ள முக்கியப் பிரமுகருக்கு, அவர் வசிக்கும் இடத்திற்கு உள்ளேயும்; வெளியேயும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்பதால், வசிக்கும் இடத்துக்கு உள்ளேயும் வெளியேயும், இந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருப்பர்.அந்த வகையில் பார்க்கும்போது, ஜெயலலிதாவை அப்பல்லோவில் சேர்க்க முடிவெடுத்து, ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். ஆனால், அந்தத் தகவல் கறுப்பு பூனைப் படையினருக்கு சொல்லப்பட்டிருந்தால், ஆம்புலன்சுடன், அவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக 75 நாட்களும், கூடவே இருந்து பாதுகாப்பளித்திருக்க வேண்டும்.நேசனல் செக்யூரிட்டி கார்டு ஆக்ட் 1986 ல் உள்ள பிரிவுகள் 15, 18 ,43 என்ன சொல்கிறது தெரியுமா? உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள முக்கியப் பிரமுகரின் பாதுகாப்பில் உள்ள படையின,ர் 24 மணி நேரமும் கண்ணை இமைகாப்பது போல, அவரைப் பாதுகாக்க வேண்டும். தங்கள் பாதுகாப்புப் பணியில் இருந்து தவறினாலோ, அல்லது வெளியில் உள்ள சட்ட விரோதமான கும்பலின் பேச்சைக் கேட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடாமல் விலகியிருந்தாலோ, அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டால், மரண தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது.

அப்படிப் பார்க்கும் போது எழுத்துப்பூர்வமான உத்தரவு வராமல், ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கறுப்புப் பூனைப் படை அஜாக்கிரதையாக இருந்தது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நிச்சயம் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய நிலை  வரும்

இந்தியாவில் வழங்கப்பட்டு வரும், இசட் பிளஸ் பாதுகாப்பின் பின்னணி குறித்து சடட நிபுணர்கள் சிலர் கூறியதாவது:

1986 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கான சட்டம் உருவாக்கப்பட்ட போதிலும், இது மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட்டது 1989 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த வி.பி.சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் முப்தி முகம்மது சயீது மகளான, தற்போதைய காஷ்மீர் முதல்வர் மெகபூபாவை. தீவிரவாதிகள் பணயக் கைதியாகக் கடத்திச் சென்றனர். அதன் பின்னர் தான் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பு கருதி, என்.எஸ்.ஜி., பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனால் பொது வாழ்க்கையில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள், அச்சுறுத்தல் ஏதும் இல்லாமல், தைரியமாக செயல்படும் வகையிலேயே, இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்படிதான், இந்த பாதுகாப்பு ஜெ.ஜெயலலிதாவுக்கும் வழங்கப்பட்டது. ஜெ.ஜெயலலிதா அப்பல்லோவிலிருந்த நாட்களில் இந்தப்பூனைகள் ஒதுங்கிக் கொண்டனர்.. 

ஜெ.ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை சந்தேகப்படத் தோன்றுகிறது என்ற தகவல்   மத்திய அரசையே கைகட்டி வேடிக்கை பார்க்க வைக்குமளவுக்கு சசிகலா சர்வவல்லமை உடையவராக இருந்தாரா என்ற வினா?  எழுகிறது 

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமித்து ஜெ.ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தார்.. அது ஜெ.வின் ஒப்புதலோடு தான் நடக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அப்போதயஆளுநர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்,  

ஜெ.ஜெயலலிதா மரணத்தில் சந்தேகப்பட வேண்டியது சசிகலாவை மட்டும்தானா..நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை மொத்தம் 608 பக்கங்கள்

ஜெ.ஜெயலலிதாவுக்கு கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு கோரப்பட்டு, அதன்படி அளிக்கப்பட்டு வந்தது.அன்றிலிருந்து ஜெயலலிதா இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும் வரையிலும் எஸ்.ஜி யைப் பொறுத்தவரை ஒரு வி.வி.ஐ.பி அவரது வீட்டில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்துவிட்டு, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பி வரும்வரை சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு இவர்களின் பொறுப்பில்தான் இருக்கும்.

ஒவ்வொரு வி.வி.ஐ.பி-க்கும் தனிப்பட்ட மெய்க்காவலர்கள்,  பாதுகாவலர்கள் தவிர, மாநில அரசு அளிக்கும் கமாண்டோ பாதுகாப்பும் இருக்கும். அவர்களுக்கும் அடுத்த உயர் பாதுகாப்புதான் என்.எஸ்.ஜி.

ஒரு வி.வி.ஐ.பி வீட்டில் இருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக, இவர்கள் தயாராக இருப்பார்கள். அதுவரை வி.வி.ஐ.பி-யின் தனிப் பாதுகாவலர்கள் மற்றும் மாநிலப் பாதுகாப்புப் படை வசம் உள்ள வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு என்.எஸ்.ஜி-யிடம் ஒப்படைக்கப்படும். மீண்டும் இருப்பிடத்திற்கு வந்த பிறகு உள்ளுர் பாதுகாப்பு மற்றும் மெய்க்காவலர்களிடம் வி.வி.ஐ.பி-யை ஒப்படைத்து விட்டு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்ற பிறகே, என்.எஸ்.ஜி அங்கிருந்து நகரும்.

ஒருவேளை அந்த வி.வி.ஐ.பி வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்கிறார் என்றால், அவரோடு மெய்க்காவலர்கள் தவிர, ஒரு தலைமை என்.எஸ்.ஜி ரேஞ்சரும் உடனிருப்பார். வி.வி.ஐ.பி-யின் உயிரைப் பாதுகாக்க, இவர்களுக்கு எந்த சட்ட விதிமுறைகளும் தடையாக இருக்காது. அதே சமயம், முதல்வர் அலுவலகம், சட்டசபை ஆகியவற்றினுள் இவர்கள் வி.வி.ஐ.பி-க்களுடன் செல்ல மாட்டார்கள். ஏனெனில் சட்டசபை என்பது மக்கள் பிரதிநிதிகள் அரங்கம் என்பதால் அங்கு சபைக்காவலர்களைத் தவிர, வேறு எவரும் நுழையக்கூடாது.லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் சமீன் சர்மா ஆகியோரை ஆணையம் ஏன் விசாரிக்கவில்லை? அவர்களிடம் விசாரிக்க வேண்டாம் என தடுத்தது யார்? அவர்களிடம் விசாரித்து இருந்தால், ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என கூறியிருப்பர். அவர்களை இந்த ஆணையம் திட்டமிட்டே விசாரிக்காமல் விட்டுள்ளது.டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஐஜி என 9 காவல்துறை  உயரதிகாரிகளிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. அதில் சதித்திட்டம் குறித்து யாருமே ஒன்றும் கூறவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,