முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோழச் சக்ரவர்த்தி அருண்மொழித் தேவரின் 1037 வது சதய நட்சத்திரப் பிறந்த நாள் விழா

இமயம் வென்று, ஈழம் கொண்டு, கலிங்கம் வீழ்த்திய, கடாரம் கொண்ட சோழச் சக்ரவர்த்தி அருண்மொழித் தேவரின் 1037 வது சதய நட்சத்திரப் பிறந்த நாள் விழாவில்



ஒவ்வொரு தமிழ்க் குடிகளும் அவரைத் தனது முப்பாட்டனாகவும் அவர்களெள்லாம் நேரடி வாரிசுகளாவும் முறுக்கேற்றி அவருக்கு புகழ் சேர்ப்பதில் தவறேதுமில்லை. ஆனால் , வரலாற்றில் மெய்த்தன்மை கண்டறியும் துறை ஒன்று




இந்தியாவில் உண்டு அதுவே க்ரோனாலஜி எனப்படும். அங்கு   பொய்யான தகவல் இல்லை  

தற்போது அதனை ஜாதியக் கண்ணோட்டத்தில் விமர்ச்சிக்க வேண்டிய அவசியமுமில்லை. இன்றைய தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் வந்தேறிகள் சூழ் உலகில் தொன்மைக்குடிகள் கொண்ட  சமூகத்தின் போர் வீரம் கொண்ட  அரசனை  அனைத்து தொன்மைக் குடிகளும் தமக்கேற்றார் போல வாழ்த்தட்டும் அவரது வீரத்தை போற்றட்டும்.




ஆனால் ன்றய ஆசியாவை அன்று வென்ற அவரது வீரமும் கல்வெட்டும் செப்பேடும் "மெய் கீர்த்தியும் இராச இராச சோழத் தேவர்" என்றே வரலாறு பறைச்சாற்றுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010- ஆம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்திய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கிறது. மாமன்னன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 1 நாள் மட்டும் பெரிய கோவில் வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடந்தது.


இந்த ஆண்டு சதய விழா இரண்டு  நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி சதய விழா நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.  விழாவிற்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தனது கருத்தாக :-



"நமது நாட்டை பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் பிறந்த நாள் சதய விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுவது மாமன்னன் ராஜராஜ சோழனுக்குத் தான் என்பது பெருமையானது.

ஒரு மன்னன், மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டால், காலத்தினால் யாராலும் மறக்க முடியாதென்பதற்கு ராஜராஜ சோழன் தான் சான்று. இதற்கு களக்காட்டூர் காடன் மைந்தன் கல்வெட்டு சாட்சி.



மேலும் கண்ணன் ஆரூரான் என்பவர், ராஜராஜ சோழனின் பணியாளர் ஒருவர் தான் வெட்டிய குளத்திற்கு ராஜராஜ சோழன் பெயரை வைத்துள்ளார். இத்தகையை அன்பை பெற்றவர். காலத்தினால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களைத் தந்தார்.

ஒரு மன்னன் போரில் படைக்கு பின்னிருந்து வழி நடத்தாமல், படைக்கு முன்னின்று வழி நடத்துவதில் சிறந்தவர் ராஜராஜன் என்பது கரந்தை செப்பேடுகள் தெரிவித்துள்ளது " எனக் கூறினார் .அதைத் தொடர்ந்து கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, திருமுறையின் திருநடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.



தொடக்க விழாவில் மத்திய தொல்லியல் துறை திருச்சிராப்பள்ளி மண்டல இயக்குனர் அருண்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூரிய நாராயணன், உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழாக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெருவுடையார்-பெரியநாயகிக்கு பேரபிஷேகம்


இன்று(வியாழக்கிழமை) தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குகினார். அதனைத் தொடர்ந்து மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் ராஜவீதிகளில் திருமுறை திருவீதி உலா நடக்கிறது.

தொடர்ந்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு ராஜராஜ சோழன், லோகமாதேவி ஐம்பொன் சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.



சதய விழாவையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவில் முழுவதும் எல்இடி வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை சிவகங்கை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சதய விழாவை யொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.   ராஜராஜ சோழச் சக்ரவர்த்தி அவரது காலத்திலுள்ள கல்வெட்டுகள்          சாவா மூவா பேராடுகள் குறித்த  ராஜராஜசோழன் செய்த அந்த ஏற்பாடு என்ன அன்று சைவ மதமில்லாத வைணவம் சமணம்,பௌத்த மதங்கள் இருந்த போதும் சைவ நெறி மட்டுமே ராஜராஜன் ஆட்சியில் சோழநாடு பின்பற்றியதை காணலாம்.  அந்த மக்களிடம் இருந்த ஆலயநலம், சமூகநலம், அரச வருமானம் என மூன்றையுமே சேர்த்து முடிவெடுத்த உன்னதமான அறிவும் ஞானமும் கொண்ட திட்டம்

அதாவது தஞ்சாவூர் கோவிலை கட்டிமுடித்த பின் அதற்கு அனுதினமும் விளக்கு ஏற்றும் அவசியமிருந்தது, இடைவிடாமல் அது எரிந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது விதி

இதனை அரசனே செய்யமுடியும் என்றாலும் நாடும், நாட்டு  மக்களும் வளமாக வாழ்ந்தால் தானே வரி வரும், அதனால் எல்லா திட்டங்களும் மக்கள் நலம் சார்ந்து தான் முடிவெடுக்கபடும்.



காவேரி பாசணம் கொட்டி கொடுத்த முப்போகம் விளையும் காலங்களிலும், நாகபட்டிணம் துறைமுகமும் இன்னும் பல துறைமுகங்களும் சுங்கவரியாக  அள்ளிக்  கொடுத்த காலத்திலும், இன்னும் கடல்கடந்த கலங்கள் கொடுத்த வரியிலும் சோழதேசம் செழித்து மின்னிய. தென்றாலும் அகதிகளாக வருவோர், வறுமையுற்றோர் என சிலர் இருக்கத்தான் செய்தார்கள், அதற்கு பல உணவு சத்திரமும் தங்கும்  சாவடிகளும் உண்டு, 

அவர்களையும் வாழவைப்பது மன்னன் கடமை அல்லவா? இதனால் வகுத்த திட்டம்



90 ஆடுகள் அல்லது பேராடு என்பது மாடு அதில் ஆடுகளில் புருவை (பெண்)   ஆடுகளும் மற்றும் (ஆண்) கடா ஆடுகளும் அடங்கிய மந்தை ஒன்று குடியானவர்களுக்கு வழங்கபடும், அவன் அனுதினமும் ஒரு ஆழாக்கு நெய் கோவில் விளக்குக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது தான் நிபந்தனை

அக்காலத்தில் மாட்டு பசு நெய் போல ஆட்டுப் பாலின் நெய்க்கும் பெரும் வரவேற்பு இருந்தது, ஆடுகள் வெறும் மாமிசத்துக்கு மட்டும் வளர்க்கப்படவில்லை

இதனால் வறுமையுற்றோர் அல்லது முதல் இல்லாதவர்கள் அரசரிடம் சென்று 90 அல்லது 94 ஆடுகள் கொண்ட மந்தை அல்லது, 45 மாடுகள் அடங்கிய மந்தையினை பெற்றுக்கொள்ளலாம்

இவை கொடுக்கும் குட்டிகள், பால் இதர விஷயமெல்லாம் குடியானவனுக்கே சொந்தம், அவன் அனுதினமும் ஒரு ஆழாக்கு நெய் ஆலயத்தில் கொடுத்தால் போதும்

அவன் பண்ணை அல்லது பட்டி பெருகப் பெருக அவன் நெய் மட்டும் கொடுத்தால் போதும், அதுவும் ஒரு ஆழாக்கு

இப்படி அவன் மந்தை பெருகிவிட்ட பின் அரசன் எப்பொழுது கேட்டாலும் அவன் அந்த 96 ஆடுகளையும் அல்லது 45 மாடுகளையும் திரும்பக் கொடுக்க வேண்டும், அரசன் கொடுத்த பொழுது என்ன வயதோ என்ன பருவமோ அதே பருவத்தில் அதே எண்ணிக்கையில் கொடுக்க வேண்டும்

இதனால் எப்பொழுதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடும் மாடும் அரசனிடம் தயாராக இருக்கும், இவை எப்பொழுது கேட்டாலும் அதே பருவத்தில் கிடைப்பதால் அவை சாவுமில்லாத மூப்புமில்லா ஆடுகளாக கருதபட்டன‌அதுவே சாவா மூவா பெருஆடு ஆகும்.

இன்று 3 வயது ஆட்டைக் கொடுத்து 10 வருடம் கழித்துக் கேட்டாலும் அது 3 வயது ஆடாகவே வரும்

இதனால் அவை சாவே இல்லாத மூப்பே இல்லாத ஆட்டுமந்தையாயின, இவை "சாவா மூவா பேராடுகள்" என்றாயின‌

"நந்தாவிளக் கொன்றினுக்கு வைத்த சாவாமூவாப்பேராடு தொண் ணூறு" என்பது கல்வெட்டு வரி, இப்படி விளக்கு எரிக்க சாவா மூவா பேராடுகள் வழங்கபட்டன என்பதை சொல்லும் சாட்சியான வரி

இப்படி "சாவா மூவா பசுக்கள்" எனும் கூட்டமும் உண்டு

இதனால் என்னென்ன நன்மைகள் நடந்தன என்றால் முதலில் ஒரு குடும்பமே பிழைக்க வழி செய்யபட்டது, இரண்டாவது கோவிலில் விளக்கு தடையின்றி எரிந்தது, மூன்றாவது மந்தைகள் பெருகி அவை கொடுக்கும் வருமானம் அரச வரி, மக்கள் தேவை என எல்லா தரப்புக்கும் பயன்பட்டது

அந்த ஆடுகளும் மாடுகளும் இன்னொருவனுக்கு கொடுக்கும் படி எப்பொழுதும் சாகாத மூவாத தன்மையுடன் இருந்தன‌

இன்று உலகில் எத்தனை பொருளாதாரத் திட்டம் , வட்டி, நிதி என வந்தாலும் இம்மாதிரியான திட்டங்களின் அருகில் கூட எந்த நாடும் வரமுடியாது

இவை சோழ அரசாங்கம்  எவ்வளவு ஞானமாக ஆண்டார்கள், எல்லா விஷயத்தையும் எப்படி ஞானமாக அணுகி எல்லோரையும் வாழவைத்தார்கள் என்பதற்கு சான்று

இதுபற்றிய கல்வெட்டு இன்றும் அங்கு உண்டு

"ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி பர்மற்கு யாண்டு – -ஆவது நாள் தேவதானந் திருத்துருத்தி மகாதேவர்க்குச் சோழப் பெருமானடிகள் போகியார் நங்கைசாத்தப் பெருமானார் நொந்தா விளக்கனுக்கு வைத்த பொன்(ங). இப்பொன் முப்பத்தின் கழஞ்சுங் கொண்டு இரவும் பகலும் முட்டாமே ஒரு நொந்தா விளக்கு சந்திராதித்த வல் ஏரிப்போமானோந் திருத்துருத்தி சபையோம் இது பன்மாயேசுஸ்வர ரக்ஷை" என கல்வெட்டு சொல்கின்றது

மக்களின் ஞானமும் பக்தியும் சமூக வாழ்வும் எப்படி ஆலயங்களோடு பின்னி பிணைந்திருந்தன, அதுவும் ராஜராஜசோழன் அதை எவ்வளவு ஞானமாக நடத்திக் கொண்டிருந்தான் என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள்

இங்கு சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரமாகட்டும், வள்ளுவர் எழுதிய ஆட்சிக்குரிய வழிகளாகட்டும் எல்லாமே நீதி தர்மம், எல்லாமே மக்களிடம் சார்ந்த. அரசனுக்கு  இருந்த ஆழ்ந்த நிர்வாக அறிவின் சாயலே

அரசாங்கம்  ஆழ்ந்த நிர்வாக ஞானமே இப்படி புலவர்களாலும் ஞானியராலும் வடித்து வைக்கபட்டது, ராஜராஜசோழன் அந்த சோழ  ஆட்சியின் பெரும் வடிவம் என்பதால் அதையே தன் அரசில் செயல்படுத்தியும் காட்டினான் அந்தப் புலிக்கொடி வேந்தன் அவரது மெய்கீர்த்தி கூறும் கல்வெட்டில் :-

"திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்

காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி

வேங்கை நாடுங் கங்க பாடியும்

தடிகை பாடியும் நுளம்ப பாடியும்

குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்

முரட்டெழிற் சிங்களர் ஈழமண்டலமும்

இரட்ட பாடி யேழரை யிலக்கமும்

முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந்

தெண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்

னெழில்வள ரூழியு ளெலலா யாண்டுந்

தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்

தேசுகொள் கோராசகேசரி வர்மரான

உடையார் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு. " என்பதாகும் .

ஐப்பசி சதயம் - 3 நவம்பர் 2022 வியாழக்கிழமை இராஜராஜனின் 1037ஆவது பிறந்தநாள் மட்டுமில்லை. கி.பி.985 அவர் ஆட்சிக்கு வந்த ஆண்டு. இன்று அவரது பிறந்தநாள் மட்டுமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்