முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டு. 216 பிரதிநிதிகளுடன் ரயில்பயணம தொடங்கியது

காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தொகுப்பான 216 பிரதிநிதிகளுடன் ரயில்பயணம் இன்று தொடங்குகிறது


• ஒருமாத கால காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு 13 ரயில்கள் இயக்கப்படும்

• இந்த ரயில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2592 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள்

• இந்தப் பிரதிநிதிகள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து தங்களின் பயணத்தை தொடங்குவார்கள்


• இந்த ரயில்கள் செல்லும் வழியில் 21 ரயில்நிலையங்களில் நிற்கும்

ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வின் போது தமிழ்நாட்டிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் காசிக்கு இந்திய ரயில்வே மொத்தம் 13 ரயில்களை இயக்கவுள்ளன. முதலாவது ரயில் 216 பிரதிநிதிகளுடன் இன்று தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயிலில் 35 பிரதிநிதிகள் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சிராப்பள்ளியில் இருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரில் இருந்தும்  செல்வார்கள். தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, இந்த பிரதிநிதிகளுடன் சென்னை எழும்பூரில் நாளை (17.11.2022) கலந்துரையாடிய பின், கொடியசைத்து அனுப்பி வைப்பார். இந்த நிகழ்வில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பார்.


இந்த ரயில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2592 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள். இந்த பிரதிநிதிகள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து தங்களின் பயணத்தை தொடங்குவார்கள். இந்த ரயில்கள் செல்லும் வழியில் 21 ரயில்நிலையங்களில் நிற்கும். ஒவ்வொரு ரயிலிலும் 216 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள்.

“சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா”வின் ஒரு பகுதியாக மத்திய அரசின் முன்முயற்சியாக காசி தமிழ் சங்கமம் - 2022 அமைந்துள்ளது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை கொண்டாடுவதாக இது இருக்கும். மேலும் அழகிய தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் இது கொண்டாடும்.


காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழக பிஎச்யு நிகழ்வின் ஒரு பகுதியாக காசி, தமிழ்நாடு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு இரண்டு தொன்மையான இந்திய கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மையுடன், நிபுணர்கள்/ அறிஞர்களிடையே  கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெறும். இரண்டு ஞானம் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை நெருக்கமாக கொண்டு வருவது நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தில் புரிதலை உருவாக்குவது  இரு பிராந்தியங்களுக்கு இடையே மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது என்பவை இதன் பரந்த நோக்கமாகும்.


தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகளின் பன்னிரண்டு குழுக்கள் - துணைத் தலைப்பின் கீழ், பன்னிரண்டு குழுக்களின் சுருக்கமான விளக்கம்

இந்நிகழ்ச்சியில் 12 குழுக்கள் இருக்கும். ஒவ்வொரு குழுவிலும், ஒரே மாதிரியான 216 பேர் இருப்பார்கள், அதாவது 200 பிரதிநிதிகள் மற்றும் 16 வசதியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரே மாதிரியான குழுவாக 3 ரயில் பெட்டிகளில் பயணிப்பர்.

தமிழ்நாட்டிலிருந்து, முதலாவது குழு, நவம்பர் 16ஆம் தேதி புதன்கிழமை இரவு 23:55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும், கடைசி குழு, அதாவது 12-வது குழு, டிசம்பர் 20ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 08:10 மணிக்கு சென்னையை வந்தடையும் .



காசி தமிழ் சங்கமம் 17 நவம்பர் முதல் 16 டிசம்பர் 2022 வரை நடைபெறும்.

ராமேஸ்வரம் , கோயம்புத்தூர் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து முறையே 3 குழுக்கள் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் . இருப்பினும், திரும்பும் பயணத்தில், தளவாட காரணங்களால் சென்னை வரை சேவைகள் இருக்கும்.

ஒவ்வொரு குழுவிற்கும் 8 நாட்கள் திட்டம் :The 8-days program for every : 2 நாட்கள் முதல் பயணம் (ரயிலில்), 2 நாட்கள் காசியில், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியை பார்வையிட 2 நாட்கள் (பேருந்தில்) மற்றும் 2 நாட்கள் காசியிலிருந்து தமிழ்நாடு திரும்பும் பயணம் (ரயிலில்)

குழுவின் பெயர்கள் பின்வருமாறு-

மாணவர்கள்

ஆசிரியர்கள்

இலக்கியம்

கலாச்சாரம்

தொழில் வல்லுநர்கள்

தொழில்முனைவோர்

வணிக

கைவினைஞர்கள்

பாரம்பரியம்

ஆன்மீக

கிராமப்புறம்

கோவில்

குழு வாரியான விவரங்கள்


மாணவர்கள் : மாணவர்கள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரி/நிறுவனத்தில் பி.எச்.டி / எம்.ஃபில் /யுஜி/பிஜி/புரொபஷனல்/டிப்ளமோ படிப்புகளை பயின்று கொண்டிருக்க வேண்டும். அவர்களின் படிப்பு கலை/அறிவியல்/ மொழி/ பொறியியல்/ மருத்துவம்/ மேலாண்மை / சட்டம்/ கணக்குகள் போன்றவற்றில் இருக்கலாம். திரும்பும் மாணவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்கள் : ஆசிரியர்கள் / பேராசிரியர்கள் பல்கலைக்கழகம் / கல்லூரி / பள்ளி/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். மற்றும் தொடக்க நிலை / இரண்டாம் / மேல் நிலை பள்ளிக்கல்வி அளித்தல் அல்லது கல்லூரி மட்டத்தில் கலை / அறிவியல் / பொறியியல்/ மருத்துவம் / மேலாண்மை / சட்டம்/ கணக்குகள் துறையில் கல்வியை வழங்குதல். ஆசிரியர்கள் அல்லது விரிவுரையாளர்களுக்கு / இலக்கியம் / ஆராய்ச்சி / சமூக பணி / ஆன்மீக சொற்பொழிவு / விளையாட்டு/ போன்றவற்றோடு “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற கருத்தை ஊக்குவித்தல் போன்ற ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இலக்கியம்: வெவ்வேறு பணித் துறையில் ஈடுபட்டுள்ள பணிபுரியும் அல்லது தன்னிச்சை எழுத்தாளர் இந்தக் குழுவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர் இலக்கியப் படைப்பின் ஒரு பகுதி, புனைகதையாக இருக்கலாம் / வரலாறு / மொழி / ஆராய்ச்சி / அறிவியல் /கலை முதலியன மற்றும் ஒரு எழுத்தாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் தமிழ், இந்தி ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் பரிந்துரைக்கப்பட்ட 22 மொழிகளில் எழுதுபவராக இருக்கலாம்.

கலாச்சாரம் : கலாச்சாரத்தை மேம்படுத்தும் துறையில் ஈடுபட்டுள்ள, பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்ற தனிநபர் இந்தக் குழுவின் கீழ் வருவர். பண்பாட்டுப் பணி என்பது மொழி வளர்ச்சி / பாரம்பரிய கலாச்சார மேம்பாடு / சமயம் / ஆன்மீகம் / இசை / நடனம் / நாடகம் / மக்கள் போன்றவை .

தொழில் வல்லுநர்கள் : பணிபுரியும் / சுயதொழில் செய்பவர்கள் / சொந்தத்தொழில் உரிமையாளர்கள் இந்த குழுவின் கீழ் வருவார்கள். . கணக்குகள் / சட்டம் / மேலாண்மை / மருத்துவம் (சித்தா / ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவம் / தகவல் தொழில் நுட்பம்/ ஊடகம்/மேலாண்மை/ பொறியியல் /ஆலோசகர் / கட்டிடக்கலை / நுண்கலை போன்றவையாக இருக்கலாம்

தொழில்முனைவோர் : இந்தக் குழுவின் கீழ் உள்ள தொழில்முனைவோர், தொடக்க / சிறிய அளவிலான / நடுத்தர அளவிலான / பெரிய அளவிலான நிறுவனங்களின் உரிமையாளர் / உரிமையாளர் என பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆலோசனை/உற்பத்தி/தகவல் தொழில் நுட்பம் /மார்க்கெட்டிங் / விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கலாம்.

வணிகம் : கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சிறிய வகை - (முறையான மற்றும் முறைசாரா) குடும்ப வணிகம் / சில்லறை வணிகம் / மொத்த வணிகம் / போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர் இந்தக் குழுவின் கீழ் வருவர். அது சுயவுரிமை / கூட்டாண்மையாக இருக்கலாம். மளிகை / பால் பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்கள் / ஹோட்டல் மற்றும் கேட்டரிங் / உணவகம் / புத்தக கடை / உணவு பொருட்கள் / தீவனம் மற்றும் கால்நடை தீவனம் / சமையல் எண்ணெய் / கால்நடை பராமரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கலாம்

கைவினைஞர்கள் : மர கைவினை / உலோக கைவினை / ஆடை வேலை / ஆபரணங்கள் / பொம்மைகள் / கைவினைப்பொருட்கள் / கல் வேலை / கொத்து / போன்றவற்றில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் மற்றும் கைவினை நபர்கள் இந்த குழுவின் கீழ் உள்ளனர். அவர்கள் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது கூட்டுறவு / சுய உதவிக் குழுவில் ஈடுபட்டவர்களாகவோ இருக்கலாம்.

பாரம்பரியம் : தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் / பாரம்பரிய கலை கலைஞர்கள் / சுற்றுச்சூழல் பாதுகாவலர் / யோகா போதகர் அல்லது ஆசிரியர் / ஆயுர்வேத / சித்த மருத்துவர்கள் இந்த குழுவின் கீழ் உள்ளனர். அவர்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு மாற்றுவதன் மூலம் மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம் : : ஆன்மீகப் பிரசங்கம் / ஆன்மீக புத்தக வெளியீடு / ஆன்மீக எழுத்து / ஆன்மீக சொற்பொழிவு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்தக் குழுவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புறம் :விவசாயிகள் / விவசாயிகள் / கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நபர்கள் / பண்ணை தொழிலாளர்கள் / தோட்டக்கலை / தோட்டத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள் இந்த குழுவின் கீழ் உள்ளனர்.

கோவில் : கோவில் பூசாரிகள் / கிராம பூஜாரிகள் / கோயில் சமையல்காரர்கள் / கோயில் கட்டிடக் கலைஞர்கள் / கோயில் மரக் கலை நிபுணர்கள் / சிற்பம் / ஷில்பா சாஸ்திர வல்லுநர்கள் / ஆகம பயிற்சியாளர்கள் / ஆகம ஆசிரியர் / கோயில் நிர்வாகிகள் / தர்மகர்த்தா ( அறங்காவலர் ) / கோயில் பணியாளர் / வேத மந்திரங்கள் (ஓதுவார்கள் / பிரபந்தக்காரர்கள் / அத்யாபகர்கள் ) / வாத்தியக்காரர்கள் ( வாத்தியகாரர்கள் ) / கோயில் பணிகளில் ஈடுபடும் கோசாலை பணியாளர்கள் இந்த குழுவின் கீழ் உள்ளனர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த