முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாத்திமா ஆட்கடத்தல் பற்றிய ஆவணப்படம் 53வது இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

பாத்திமா – ஆட்கடத்தல் பற்றிய சக்திவாய்ந்த ஆவணப்படம் 53வது இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது


கடத்தப்பட்ட பாலியல் தொழிலாளர்களை  மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்த சௌரப் காந்தி தத்தாவின் பாத்திமா என்ற ஆவணப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பில் திரையிடப்பட்டது.


9 வயதில் ஒரு பாலியல் தரகரை மணந்து, 12 வயதில் ஒரு குழந்தைக்கு தாயாகி ஒரு கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்த பாத்திமா காதுனின் வாழ்க்கையின் கதையை படம் விவரிக்கிறது. இப்போது பாத்திமா, இந்தோ-நேபாள எல்லைப் பகுதியில் உள்ள ஃபோர்பேஸ்கஞ்ச் என்ற சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கு கடத்தப்பட்ட சிறுமிகளை விடுவிக்க போராடுகிறார்.


"டேபிள் டாக்ஸ்" அமர்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் உரையாற்றுகையில், உணர்ச்சிவசப்பட்ட பாத்திமா காதுன் கண்ணீர் மல்க, இளம் வயதில் நெருங்கிய மற்றும் அன்பானவர்களால் துரோகத்துக்குள்ளானதை விவரித்தார்.


1871 கிரிமினல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக முத்திரை குத்தப்பட்ட அவரது நாடோடி சமூகத்தில் உள்ள தலைமுறைகளுக்கு இடையேயான பாலியியல் தொழில் மற்றும் சிறுமிகளை பாலியியல் தொழிலுக்குள் ஈடுபடுத்துவதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கான மன வலிமையைத் தான் எவ்வாறு பெற்றார் என்பதை அவர் விவரித்தார்.



இயக்குனர் சௌரப் காந்தி தத்தா ஊரடங்கினால் ஒன்றரை  வருடங்களை இழந்தது மற்றும் அதனால் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் பற்றி பேசினார். ஆனால் அவரது படம் இந்திய சர்வதேச திரைப்பட விழா போன்ற ஒரு மேடையில் திரையிடப்பட்டதில் மகிழ்ச்சியடைந்தார்.

"நான் ஒரு நடிகரை தேர்ந்தெடுக்கவில்லை, ஏனென்றால் அது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகமாக மாறும் - நான் செய்ய விரும்பிய ஆவணப்படமாக அல்ல", என்று சௌரப் கூறினார். நீதிமன்றங்கள் அல்லது காவல் நிலையங்களைப் போல் இல்லாமல், கேமராவின் முன் தனது போராட்டங்களை பகிர்வது எளிதல்ல. பாத்திமா தனது கதையை கேமராவில் விவரிக்க பெரும் தைரியத்தைக் காட்டியுள்ளார்” என்று அவர் மேலும் கூறினார். "அந்த உலகத்திற்கு எனது சாளரமாக இருந்ததற்காக பாத்திமாவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று சௌரப் கூறினார்




 ஆவணப்படம் பெயர்: பாத்திமா

இயக்குனர்: சௌரப் காந்தி தத்தா

காலம்: 59 நிமிடம்வாழ்க்கையின் கொள்கைகள் குறித்து பேசும் நேரம் இது, வெகு சிலரே இத்தகைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்: ‘‘மகாநந்தா’ இயக்குனர் அரிந்தம் சில்

“நாம் போராடுவது அனைத்தும் உண்மையான இந்திய மக்களுக்காகத்தான். நாட்டின் ஜனாதிபதி யார்? கொல்கத்தா அல்லது மும்பை எங்கே உள்ளது? என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இவர்கள்தான் இந்தியாவின் உண்மையான மக்கள்”. இந்த வார்த்தைகளை கூறிய எழுத்தாளர்-சமூக ஆர்வலர் மஹாஸ்வேதா தேவியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் திரைப்படம் ‘மகாநந்தா’. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பில் இந்தியன் பனோரமா - ஃபீச்சர் ஃபிலிம் பிரிவில் இடம்பெற்றுள்ள பெங்காலி திரைப்படம், விழாப் பிரதிநிதிகளுக்கு திரையிடப்பட்டது.




இன்று கோவாவில் நடைபெற்ற டேபிள் டாக்ஸ்/பத்திரிக்கையாளர் அமர்சில் விழாப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய இயக்குநர் அரிந்தம் சில், இந்தச் சிக்கலான காலத்தில் இந்த ஒரு விஷயத்தை நோக்கி பயணிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்கூறினார். “வாழ்க்கையின் கொள்கைகளைப் பற்றி பேச வேண்டிய நேரம் இது, ஏனெனில் இன்று மிகக் குறைவான மக்களே கொள்கைகளின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள். கொள்கைகளின் அடிப்படையில் வாழ்ந்த ஒரு சிலரில் மஹாஸ்வேதா தேவியும் ஒருவர். கொள்கைகளின்படி வாழ நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நேரம் இது என்று நான் உணர்கிறேன்.” என்று கூறினார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் பண்டிட் பிக்ரம் கோஸ், நேற்று சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். டேபிள் டாக்ஸ் அமர்வில் அரிந்தம் சில் உடன் இணைந்த கலைஞர், இந்தத் படம் இசை ரீதியாக ஒரு சவாலான வேலை என்று தெரிவித்தார். “படத்தில் தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. சோகம், மரணம், துக்கம் என அவர் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத அச்சுறுத்தல் ஆகும்.” என்று கூறினார்.  இந்த அச்சுறுத்தலை வெளிக்கொணர முற்றிலும் பழங்குடி இசை பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டுள்ளது, என்று இசையமைப்பாளர் விளக்குகிறார்.

30 வயது முதல் 75 வயது வரை உள்ள மகாஸ்வேதா தேவியாக நடித்த கதாநாயிகி கார்கி ராய்சௌத்ரி, பல செயற்கை தொழில்நுட்பம் மற்றும் ஒப்பனை மூலம் மகாஸ்வேதா தேவியாக தான் நடித்ததை மிகவும் ரசித்ததாக கூறினார்.இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘இண்டராக்சன்’ திரைப்படத்தின் ஆசிய பிரீமியர் காட்சி

ஆர்ட் ஆப் தி வோர்ல்ட் அண்மையில் தயாரித்த இன்டராக்சன் என்ற திரைப்படம் 12 குறும்படங்களின் தொகுப்பு ஆகும். இத்திரைப்படம் கோவாவில் நடக்கும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவிலேயே முதல் முறையாக (பிரீமியர் காட்சி ) திரையிடப்பட்டது.

இத்திரைப்படத்தில் பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட 12 சிறுகதைகள் உள்ளன. மொராக்கோ, இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், ஆர்மீனியா, சுவிட்சர்லாந்து, புர்கினா பாசோ, மெக்சிகோ, அமெரிக்கா, கிரீஸ் ,இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் இடம் பெற்றுள்ளன.

படத்தின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரூபேஷ் குமார், 12 திரைப்படங்கள் விலங்கு துஷ்பிரயோகம், வன அழிப்பு, பருவநிலை மீதான தீவிர தாக்கம், விலங்குகளின் வாழ்விட அழிவு, கடல் வாழ்க்கை மாசுபாடு போன்ற பல்வேறு தலைப்புகளை ஆராய்கின்றன என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மனபேந்து ராத் கூறுகையில், பருவநிலை மாற்றம் குறித்த ஒரே ஒரு தெளிவான செய்தியை அதிகபட்ச மக்களை சென்றடைவதே இந்த முயற்சி என்றார்.

12 சிறுகதைகளில்,  காடுகளையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க மனிதகுலத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.

படத்தின் தயாரிப்பு ஆலோசகர் புரோட்டிக் மஜூம்தார் கூறுகையில், தென்னிந்தியாவில் கேரளாவில் உள்ள வயநாடு காடுகளில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறு குழந்தைகளின் கண்களால் மனித-விலங்குகளின் தொடர்பு பற்றிய கதையை The Elephant in the Room விவரிக்கிறது. இந்த யானைகளுடன் வளரும் குழந்தைகள்,  ஒரு சிறப்புப் பிணைப்பை வளர்த்து, காடுகளையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்கும் போது மனித - காட்டு விலங்கு மோதலைத் தீர்ப்பது எப்படி என்று விளக்குகிறது.

ஆர்ட் ஆப் தி வோர்ல்டு  ஐக்கிய நாடுகளின் பொதுத் தகவல் துறையுடன்  தொடர்புடைய ஒரு அரசு சாரா அமைப்பாகும். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கான ஒரு தளத்தை வழங்குகிறது.சிக்கலான உறவுகளால் பின்னப்பட்டு, தங்க மயில் விருதுக்கு போட்டியிடும் கோல்ட் ஏஸ் மார்பிள் திரைப்படம்

பெரும்பாலும் உருவகப்படுத்துவதைப் போல வாழ்க்கை சிக்கலானதாக இருந்தால், சமூக விதிமுறைகளும் காயப்பட்ட உறவுகளும்  இணைந்து  கடுமையான புதை மணலாக வாழ்க்கையை மாற்றக்கூடும். தொடர் தோல்வியை சந்திக்கும் கலைஞர் அக்பர், அவரது தோழி மற்றும் தந்தை ஆகியோர் சம்பந்தப்பட்ட கோல்ட் ஏஸ் மார்பிள் (Cold as Marble) என்ற திரைப்படத்தின் வாயிலாக இந்த கசப்பான உணர்வு கோவாவில் நடைபெற்று வரும் 53- வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் கலந்து கொண்ட பிரதிநிதிகளைச் சென்றடைந்துள்ளது. அசர்பைஜான் நாட்டின் இயக்குநர் ஆசிஃப் ரஸ்தமோவ் இயக்கியுள்ள இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தங்க மயில் விருதுக்கு போட்டியிடுகிறது.

கோவாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பிரமுகர்களுடன் கலந்துரையாடுகையில், திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓக்டே நமசோவ் இந்த படம் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். பழமைவாத சமூகத்தில் உள்ள உறவுகளில் நிலவும் சிக்கல்களை இந்தத் திரைப்படம் எடுத்துரைக்க முயற்சித்துள்ளதாக அவர் தெரிவித்தார். திரைப்படத்தில் அக்பரின் தோழியாக நடித்துள்ள நடிகை நடுவன் அப்பாஸ்லியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...