முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஆறு நபர்களை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்

இராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஆறு நபர்களை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் 


 “தமிழ்நாடு அரசின் தீர்மானங்களை ஆளுநர் காலதாமதம்  செய்யக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஆதாரம் பேரறிவாளன் என்ற நபர் விடுதலையைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை வரவேற்கும் காங்கிரஸ் கட்சியை உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர பல அரசியல்‌ கட்சிகளில். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றத்தில் . தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றத்தின்  நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ள தீர்ப்பின் முழுவிவரம்:-



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று  சிறையிலிருந்த குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்புப் படி 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எற்கனவே பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம்  பார்க்க வேண்டும் .



அதில் முக்கிய அம்சங்கள்:

 30 ஆண்டுகளாக சிறையிலுள்ள தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு கடந்த மே மாதம் 18 ஆம் தேதி தீர்ப்பு வந்தது.

பிரிவு 161கீழ் மாநில ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த அவரை கட்டுப்படுத்துவதுடன் அவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டவர் தான்  என உறுதியாகிறது.



 பிரிவு 161 ன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தாமை அல்லது அதிகாரத்தை பயன்படுத்துவதில் காரணம் சொல்லப்படாத தாமதத்தை செய்யும் பொழுது அது நீதித்துறையின் மறு ஆய்வுக்கு உட்பட்டது. குறிப்பாக ஒரு கைதியை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவையின் பரிந்துரைகளின் மீது ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் செய்தால் அது நீதித்துறையின் ஆய்வுக்குள் முழுமையாக வந்துவிடும்.

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசின் பரிந்துரையை இரண்டரை ஆண்டுகள் காலமாக தாமதம் செய்து எந்த அரசியலமைப்பு ஆதாரமுமில்லாமல் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது.

ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்திற்கான கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடியவர் தான்.

160 ஆவது பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் மீது இரண்டரை ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது

பேரறிவாளன் நீண்ட நாள் சிறைவாசத்தில் சிறையில் அவரது நன்னடத்தை பரோலின் பொழுது அவரது நன்னடத்தை அவரது மருத்துவப் பதிவுகளில் இருந்து அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய் அவர் பெற்ற கல்வித் தகுதிகள் மற்றும் அவரது மனு நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக் கூடிய விஷயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அவரை உச்ச நீதிமன்றம் விடுவிக்கிறது.

அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் எங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன் இதுவரை பெற்ற தண்டனை முழுமையாக அனுபவித்ததாகக் கருதி அவரை விடுதலை செய்த நிலையில்.

தமிழ்நாடு அமைச்சரவை அந்த 7 பேர் விடுதலை சம்பந்தமாக எடுத்த முடிவு பல்வேறு சட்ட விதிகளுக்கு உட்பட்டது அதன் மீது

ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.

இவ்வாறு பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் தான் தற்போது நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.31 வருடமாக அவர்கள்  தண்டனை அனுபவித்து உள்ளனர்,அதன் காரணமாக அவர்கள் நடத்திய சட்டப்    போராட்டத்திற்குப் பிறகு விடுதலை ஆன உள்ளேன்! இது நீதிக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாகத் தான் இது சாத்தியமானதாக விடுதலை ஆன நளினி கூறியது. காலஞ்சென்ற முதல்வர்  ஜெயலலிதா உள்ளிட்ட பலரைக் குறிக்கும். 


”ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் 12 பேர் பிடிபடாமலேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர்களோடு தொடர்பில் இருந்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள் தான் இந்த ஏழு நபர்கள்  ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்றது” என்ற குரல்கள் கடந்த பத்தாண்டுகளாகவே மேலேழுந்து வலுப் பெற்றன! காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற ஆதிதிராவிட சமூகத்தில் கம்யூனிஸ்ட் சார்ந்த  பெண் இந்த எழுவரை விடுதலை செய்யக் கோரி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழ்நாட்டில் ”இவர்களை விடுதலை செய்ய வேண்டும்”என பல அமைப்புகள் களம் கண்டனர்.

அது குறித்து வேலூரையடுத்த பிரம்மபுரத்தில் பரோலில் வெளியில் வந்து தங்கி இருந்த நளினியை சில பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு அவரிடம் வாழ்த்துக்களைக் கூறியவர்களிடம் பேசிய போது நளினி 

’’உண்மைக்கு ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்!’’ - எனத் தெரிவித்தார் அதுபோல இவர்கள் மாநில அரசின் தீர்மாணம் மற்றும் உச்சநீதிமன்றம் மூலம் விடுதலை சாத்தியமானது...அதைப்போல. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது காவல்துறை உள்ளிட்ட பலர் மரணமும் கொடுமையான செயல் தானே  வரலாறு இந்தப் பாதகமான செயல் செய்த யாரையும் விடாது. சட்டம் இவர்களுக்கு விடுதலை வழங்கியது.தேசம் ஒரு நல்ல தலைவரை இழந்த காயம் பலருக்கு இன்னும் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்