முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிப்பு

குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிப்பு

குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளில் டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.




இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    முதற்கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை நவம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினமே வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.  முதற்கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நவம்பர் 14 ஆம் தேதி கடைசி நாளாகும்.  இரண்டாவது கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி நிறைவடைகிறது.   முதற்கட்ட தேர்தலில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களை நவம்பர் 15 ஆம் தேதி பரிசீலிக்கப்படுகிறது.  வேட்பு மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 17 ஆம் தேதி கடைசி நாளாகும்.




இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.  வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள நவம்பர் 21 ஆம் தேதி கடைசி நாளாகும்.  தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் நிறைவடையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

4.91 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  இந்த தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது மேலும் .குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என 2 கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக அம்மாநில தேர்தலை நடத்துவது அவசியம்.

குஜராத்தில் கிட்டதட்ட கால் நூற்றாண்டாக பாஜ ஆட்சியில் உள்ளது. கடந்த தேர்தலின்போது மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜ 99 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 77 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. அதனால் தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் பாஜ- காங்கிரஸ் இடையேதான் போட்டி இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்ம சொப்பனமாக ஆம் ஆத்மி கட்சியும் இணைந்துள்ள நிலையில் .

இன்று மதியம் 12 மணிக்கு குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி ஆகாஷ் பவனில் உள்ள ரங் பவான் அரங்கத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடையே தேர்தல் ஆணையர் பேசியதாவது:

குஜராத் சட்டமன்ற தேர்தலில் புதிதாக 4.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 51,782 வாக்குச்சாவடிகளில் 4.90 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்தில் அமைக்கப்படும். 80 வயதானவர்கள், 40 சதவீதம் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 கட்டமாக குஜராத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ம் தேதியும் தொடங்குகிறது. வேட்புமனு திரும்ப பெற முதல்கட்டத்திற்கு நவ. 17 மற்றும் 2ம் கட்டத்திற்கு நவ. 21ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...