முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கால்பந்து வீராங்கனை மரணத்தில் சட்டத்தின் பிடியில் சிக்காத மருத்துவர்கள்

இளம் கால்பந்து வீராங்கனைக்கு தவறான  சிகிச்சையளித்த நிலையில் மரணமடைந்த  விவகாரத்தில் தலைமறைவான அரசு மருத்துவர்களைத் தீவிரமாக தேடிவருவதாக  தனிப்படை கருத்து  தெரிவிக்க  கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 2 அரசு மருத்துவர்களை, தனிப்படை காவல்துறை  தீவிரமாக தேடி வருகின்றனர் என்ற தகவலிருந்த போதும். நீதிமன்றம் மருத்துவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா (வயது 17), பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கால் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலி குறையாததால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கால் அகற்றப்பட்ட நிலையில், அவர் நவம்பர் 15-ஆம் தேதி உயிரிழந்தார்.


பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைபாடே அதற்குக் காரணமென மருத்துவக் கல்வி இயக்குநர் அறிக்கையளித்ததன் அடிப்படையில், மருத்துவர்கள் பால்ராம்சங்கர், சோமசுந்தர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், இரண்டு மருத்துவர்கள் மீதும் பெரவள்ளூர் காவல் நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்தனர்.


இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இரண்டு  மருத்துவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை.  விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘‘இந்த வழக்கில் காவல்துறை  விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். டாக்டர்களை கைது செய்வதற்கு தடை விதிக்க முடியாது’’ என உத்தரவிட்டார்.




முன்ஜாமீன் வழங்கப்படாததால், மருத்துவர்கள் உட்பட அறுவை சிகிச்சையின் போது உடனிருந்த மருத்துவ உதவியாளர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இரண்டு  அரசு மருத்துவர்களும் தலைமறைவாக உள்ளனர். கொளத்தூர் காவல்துறை துணைக் காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து, அவர்களை தீவிரமாக தேடிவருவதாகக்  கூறப்படுகிறது.

 இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மருத்துவக் குழுவிடம், பிரியா உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு வினாக்களை எழுப்பி காவல்துறை கடிதம் அனுப்பினர். அது தொடர்பான அறிக்கையை காவல் துறையிடம் அந்தக் குழு அளித்துள்ளது. ‘‘அதில் சில சந்தேகங்கள் உள்ளன. அதுபற்றி மருத்துவக் குழுவினரிடம் மீண்டும் சில தகவல் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவிக்கும் விளக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என காவல்துறையினர்  தெரிவித்தனர்.  கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டுமென தமிழ்நாடு  முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கடிதம் வாயிலாக  வலியுறுத்தியது.




தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் 'உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்தத் துறை மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை காவல்துறையினர் பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304- A பிரிவின் படி வழக்கு தொடர வேண்டும். அப்படி 304-A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. உயர் நீதிமன்றமும்,  உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் மருத்துவர்களைக் கொலைக் குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடையக் கூறி இருப்பது நாட்டிலுள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.

இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. நோயாளியின் காலை, சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லி ஜென்சில் மட்டுமே வரும். காவல்  நடவடிக்கை அதிகப்படியானது மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304-A பிரிவு மாற்றப்பட வேண்டும்.

அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின்  நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம்".      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது.அரசு மருத்துவர்களுக்கு ஐந்து சங்கங்கள் உள்ளன! காரணம், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் செந்திலின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பிரிந்து சென்றதால் உருவானவையே அவை யாவும்! இவர் அடிப்படையில் அதிகார மையத்தின் ஒரு புரோக்கர்  என்ற கருத்து நிலவுகிறது ! ”இவர் மருத்துவப் பணியே செய்வதில்லை. மருத்துவர் சங்கத் தலைவர், மெடிக்கல் கவுன்சில் தலைவர் என்ற சுதந்திரத்தில்  எல்லாவற்றிலும் பணம் பார்ப்பது ஒன்றே வேலையாக வாழ்பவர்” என்பது சுகாதாரத் துறையில் அனைவருக்குமே தெரிந்த உண்மையாக உள்ளது என்பது மக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

”கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் எடுபிடியாகவே இருந்து அனைத்து ஊழல்களுக்கும் அவருக்கு வழிகாட்டியாக இருந்து  கமிஷன் பார்த்தவர் தான் இந்த செந்தில்” என்கிறார்கள்! இவரைப் பற்றி அறிந்த பலர் அந்த வகையில் தான் ஆட்சி மாற்றம் நடந்ததும் இவர் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. ஆனால், சோதனைக்குப் பிறகு விஜயபாஸ்கரைப் போலவே இப்போது பலரையும் சரிகட்டி விட்டார். இவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தமிழ் நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கும் தலைவராக உள்ளார். அந்த வகையில் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு பெரிய தவறுகள் செய்தாலும், நோயாளிகளுக்கு எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும், அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு எல்லா புகார்களையும் நீர்த்துப் போக வைத்து விடுகிறார். இது பற்றி இன்னும்  எழுதலாம்! அந்த அளவில் 


இப்படிப்பட்ட டாக்டர் செந்தில் மீண்டும் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பதால் டாக்டர்கள் ஓட்டுக்களை அறுவடை செய்யும் விதமாக, ஏதோ மருத்துவர்களின் பாதுகாவலனாகத் தன்னை காட்டிக் கொண்டு அரசியல்வாதிகள் வட்டத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையில் இந்த அறிக்கையானது சம்பந்தப்பட்ட இரு மருத்துவர்கள் மீதுள்ள மக்களின் கோபத்தை ஒட்டுமொத்த அரசு மருத்துவர்கள் மீதும் மடை மாற்றுவது போலத் தான் உள்ளது. அரசு மருத்துவர்களில் மிகப் பெரும்பாலோர் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர் என்பதை மக்கள் அறிந்தே உள்ளனர். நடைபெற்ற சம்பவத்திற்கு சட்டப்படியும், தார்மீக அடிப்படையிலும் உரிய தண்டனையை ஏற்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவதே இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு வழி வகுக்கும். ”டாக்டர்கள் என்ன செய்தாலும், சங்கம் காப்பாற்றிவிடும்” என்றால், மக்களுக்கு பாதுகாப்பு தான் என்ன? ஒரு துயர நேரத்திலும் இந்த மாதிரி பேசுவது மக்களின் பெரும் கோபம் ஒட்டு மொத்த டாக்டர்களிடம் திரும்பவே வழிவகுக்கும்! சட்டத்தின் முன்   டாக்டர்களும் சமமானவர்களே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த