முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி 100 வயதில் காலமானார்

100 வயதான நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம்


அஹமதாபாத்திலுள்ள UN மேத்தா நெஞ்சக நோய் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் முதுமை காரணமாக  ஹீராபென் மரணமடைந்துள்ளார். 100 வயதான தன்  தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கினர். தொடர்ந்து நேற்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.



அவருக்கு என்ன பிரச்சனைகள் இருந்ததென்பது குறித்தோ எத்தகைய சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வருகிறதென்பது குறித்தோ மருத்துவமனை சார்பில் வெளியில்  தெரிவிக்கப்படாத நிலையில் மருத்துவர்கள்  தீவிர சிகிச்சையில் அவரது உடல்நிலை சீராக இருந்த நிலையில், பல


தலைவர்கள் நலம்பெற வேண்டினர், இன்று அதிகாலை 3.39 மணிக்கு, சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.



அவரது மறைவுக்கு பிரதமர் நறேந்திர மோடி தனது தாயார் மறைவு குறித்து  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு இறைவனின் காலடியை சேர்ந்துள்ளதாக அவர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அர்ப்பணிப்பான வாழ்க்கையை தன் தாயாரிடம் உணர்ந்ததாக மோடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் தனது தாயாருக்கு அஞ்சலி
நூற்றாண்டு கண்ட தனது தாயின் ஆன்மா இறைவனின் பாதங்களில் அமைதி அடைந்துள்ளது என்றார் பிரதமர் திரு.நரேந்திர மோடி.

திருமதி ஹீராபென் இன்று காலமானதையடுத்து கடவுளின் திருமூர்த்தி ஸ்வரூபமாகிய அவருடைய இறையம்சம் கொண்ட வாழ்க்கைப் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியாகவும், முக்கியத் தத்துவங்களுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.



தனது நூற்றாண்டு பிறந்தநாளில் ஞானத்தோடு செயல்பட வேண்டுமென்றும், பரிசுத்த வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறிய அறிவுரைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“மேன்மை பொருந்திய நூற்றாண்டு கண்ட ஆன்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாறுகிறது. இறையம்சம் கொண்ட அவர் வாழ்க்கைப் பயணம், தன்னலமற்ற கர்மயோகி செயல்பாடுகள் மற்றும் முக்கியத் தத்துவங்களுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்தார்.

அவரது நூற்றாண்டு பிறந்தநாளில் அவரை நான் சந்தித்தபோது, ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார். அதாவது அறிவாற்றலுடன் பணிபுரிய வேண்டுமென்றும், தூய்மையான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்”.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் அமித் ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள திரு அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மதிப்பிற்குரிய ஹீரா பா அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு மனிதரின் வாழ்வில் முதல் நண்பரும் ஆசிரியரும் தாய்தான், ஒருவரின் தாயை இழந்த வலி சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரிய வலியாகும் என்று கூறியுள்ளார்.


தனது குடும்பத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக ஹீரா பா எதிர்கொண்ட போராட்டங்கள் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை.  அவரது தியாகம் நிறைந்த துறவு வாழ்க்கை என்றும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும். இந்தத் துயரமான நேரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  நாடு துணைநிற்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகள் பிரதமருக்காக  உள்ளன. ஓம் சாந்தி என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு, மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரு தர்மேந்திர பிரதான், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாயைப் போல் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். துறவு மனப்பான்மையுடனும், கர்மயோகியாகவும் வாழ்ந்த பிரதமரின் தாயார் ஹீராபென்னுக்கு  அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ள அவர்,  இது துக்கமான நேரம் என்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நாடே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த