முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

197 மாவட்டங்களில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள்

பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள் நாட்டின் 197 மாவட்டங்களில் டிசம்பர் 12-ல் நடத்தப்படுகிறது                                  197 மாவட்டங்களை உள்ளடக்கியதாக 25 மாநிலங்களில் இந்த தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள் நடைபெறும்

இந்த முகாம்களில் பங்கேற்று இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன

திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் முகாம்களை (PMNAM) டிசம்பர் 12, 2022 அன்று நடத்தவுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 197 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.


பல உள்ளூர் நிறுவனங்கள் இந்தப் பழகுநர் முகாம்களில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சியை வழங்கி, அவர்கள் தங்களது வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்கும் வாய்ப்பை இந்த நிறுவனங்கள் வழங்கும். இந்த முகாம்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பங்கேற்கும் நிறுவனங்கள் ஒரே தளத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற விரும்பும் பயிற்சியாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறவுள்ளன. அத்துடன் விண்ணப்பதாரர்களை உடனடியாக அந்த இடத்திலேயே தேர்வு செய்து, தங்களது நிறுவனத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பை அவர்களுக்கு அந்த நிறுவனங்கள் வழங்கும்.

இந்த முகாம்களில் பங்கேற்க விரும்பும் தனிநபர் பயிற்சியாளர்கள், https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு அதன் மூலம் இந்த முகாம்களில் பங்கேற்கப் பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன் அருகில் இந்த முகாம் நடைபெறும் இடத்தையும் கண்டறியலாம். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது பட்டதாரிகள் இந்த தொழில் பழகுநர் பயிற்சி முகாம்களில் பங்கேற்று நிறுவனங்களில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தின் மூன்று நகல்கள், அனைத்து மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்களின் மூன்று நகல்கள், புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் போன்றவை) மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சம்பந்தப்பட்ட முகாம்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஏற்கெனவே பதிவுசெய்தவர்கள், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த முகாம்களின் மூலம், விண்ணப்பதாரர்கள் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCVET) அங்கீகாரம் பெற்ற சான்றிதழைப் பெறுவார்கள். பயிற்சிக்குப் பிறகு அவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்படும்.

பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம் குறித்து திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு. அதுல் குமார் திவாரி கூறுகையில், “இன்றைய இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி வாய்ப்புகளின் அடிப்படையில் இந்தியா பெரும்பாலும் மற்ற வளர்ந்த பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடப்படுகிறது. இதில் உள்ள இடைவெளியைக் குறைக்க, பயிற்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். கடினமாக உழைக்கவும், நமது பொருளாதாரத்திற்கு பங்களிக்கவும், நமது நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க உதவவும் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து கடந்த மாத பயிற்சி முகாம்களின் போது எங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், நிறுவனங்கள், அதிக பயிற்சியாளர்களை பணி அமர்த்துவதை ஊக்குவிப்பதாகும். அதே நேரத்தில் திறன் மிக்க நபர்களைக் கண்டறியவும், பயிற்சி மற்றும் நடைமுறை அனுபவத்தின் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்தவும் நிறுவன உரிமையாளர்களுக்கு உதவுவதும் இந்த பயிற்சியின் நோக்கமாகும். தொழிற்பயிற்சியிலிருந்து உயர்கல்வி வரை நம்பகமான வாய்ப்புகளை உருவாக்குவது ஒரு புறம் இருக்க, கல்விச் சூழலில் தொழிற்பயிற்சியை இணைப்பது முக்கியமானது. தொடர் முயற்சிகளின் மூலம், 2022-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை 10 லட்சமாகவும், 2026-ம் ஆண்டுக்குள் 60 லட்சமாகவும் உயர்த்துவதே எங்கள் இலக்கு.” என்று தெரிவித்தார்.

இந்தத் தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன, இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் புதிய திறன்களைப் பெறுவதுடன் அரசு நிர்ணயித்த அளவின்படி மாதாந்திர உதவித்தொகையையும் பெறுகிறார்கள். தொழிற்பயிற்சியானது திறன் மேம்பாட்டின் நிலையான மாதிரியாகக் கருதப்படுவதுடன் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பெரிய ஊக்கத்தைப் பெறுகிறது.

தொழிற்பயிற்சி பயிற்சி மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது, மேலும் இந்த பணியை நிறைவேற்ற, நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்க பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் முகாம் (PMNAM) ஒரு முக்கியத் தளமாக பயன்படுத்தப்படுகிறது. பங்கேற்கும் நிறுவனங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு இது விழிப்புணர்வை அளிக்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த