முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

197 மாவட்டங்களில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள்

பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள் நாட்டின் 197 மாவட்டங்களில் டிசம்பர் 12-ல் நடத்தப்படுகிறது                                  197 மாவட்டங்களை உள்ளடக்கியதாக 25 மாநிலங்களில் இந்த தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள் நடைபெறும்

இந்த முகாம்களில் பங்கேற்று இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன

திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் முகாம்களை (PMNAM) டிசம்பர் 12, 2022 அன்று நடத்தவுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 197 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.


பல உள்ளூர் நிறுவனங்கள் இந்தப் பழகுநர் முகாம்களில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சியை வழங்கி, அவர்கள் தங்களது வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்கும் வாய்ப்பை இந்த நிறுவனங்கள் வழங்கும். இந்த முகாம்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பங்கேற்கும் நிறுவனங்கள் ஒரே தளத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற விரும்பும் பயிற்சியாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறவுள்ளன. அத்துடன் விண்ணப்பதாரர்களை உடனடியாக அந்த இடத்திலேயே தேர்வு செய்து, தங்களது நிறுவனத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பை அவர்களுக்கு அந்த நிறுவனங்கள் வழங்கும்.

இந்த முகாம்களில் பங்கேற்க விரும்பும் தனிநபர் பயிற்சியாளர்கள், https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு அதன் மூலம் இந்த முகாம்களில் பங்கேற்கப் பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன் அருகில் இந்த முகாம் நடைபெறும் இடத்தையும் கண்டறியலாம். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது பட்டதாரிகள் இந்த தொழில் பழகுநர் பயிற்சி முகாம்களில் பங்கேற்று நிறுவனங்களில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தின் மூன்று நகல்கள், அனைத்து மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்களின் மூன்று நகல்கள், புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் போன்றவை) மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சம்பந்தப்பட்ட முகாம்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஏற்கெனவே பதிவுசெய்தவர்கள், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த முகாம்களின் மூலம், விண்ணப்பதாரர்கள் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCVET) அங்கீகாரம் பெற்ற சான்றிதழைப் பெறுவார்கள். பயிற்சிக்குப் பிறகு அவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்படும்.

பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம் குறித்து திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு. அதுல் குமார் திவாரி கூறுகையில், “இன்றைய இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி வாய்ப்புகளின் அடிப்படையில் இந்தியா பெரும்பாலும் மற்ற வளர்ந்த பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடப்படுகிறது. இதில் உள்ள இடைவெளியைக் குறைக்க, பயிற்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். கடினமாக உழைக்கவும், நமது பொருளாதாரத்திற்கு பங்களிக்கவும், நமது நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க உதவவும் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து கடந்த மாத பயிற்சி முகாம்களின் போது எங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், நிறுவனங்கள், அதிக பயிற்சியாளர்களை பணி அமர்த்துவதை ஊக்குவிப்பதாகும். அதே நேரத்தில் திறன் மிக்க நபர்களைக் கண்டறியவும், பயிற்சி மற்றும் நடைமுறை அனுபவத்தின் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்தவும் நிறுவன உரிமையாளர்களுக்கு உதவுவதும் இந்த பயிற்சியின் நோக்கமாகும். தொழிற்பயிற்சியிலிருந்து உயர்கல்வி வரை நம்பகமான வாய்ப்புகளை உருவாக்குவது ஒரு புறம் இருக்க, கல்விச் சூழலில் தொழிற்பயிற்சியை இணைப்பது முக்கியமானது. தொடர் முயற்சிகளின் மூலம், 2022-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை 10 லட்சமாகவும், 2026-ம் ஆண்டுக்குள் 60 லட்சமாகவும் உயர்த்துவதே எங்கள் இலக்கு.” என்று தெரிவித்தார்.

இந்தத் தொழில் பழகுநர் பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன, இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் புதிய திறன்களைப் பெறுவதுடன் அரசு நிர்ணயித்த அளவின்படி மாதாந்திர உதவித்தொகையையும் பெறுகிறார்கள். தொழிற்பயிற்சியானது திறன் மேம்பாட்டின் நிலையான மாதிரியாகக் கருதப்படுவதுடன் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பெரிய ஊக்கத்தைப் பெறுகிறது.

தொழிற்பயிற்சி பயிற்சி மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது, மேலும் இந்த பணியை நிறைவேற்ற, நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்க பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் முகாம் (PMNAM) ஒரு முக்கியத் தளமாக பயன்படுத்தப்படுகிறது. பங்கேற்கும் நிறுவனங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு இது விழிப்புணர்வை அளிக்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...