முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதயநிதி அமைச்சரானார் சில அமைச்சர்கள் இலாக்காவில் மாற்றம் அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாடு அமைச்சராக சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்றப் பேரவை உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.


சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் 2019-ஆம் ஆண்டு முதல் தீவிரமான அரசியலில் ஈடுபட்ட நிலையில் திரைப்படத்  துறையிலிருந்து அரசியலுக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின்.திமுக இளைஞரணி செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் திராவிட மாடல் அமைச்சரவையில் இடம் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்






ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்






பதவியேற்கும் அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்        முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை 2021 ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகள் கடந்து  அமைச்சரவை விரிவாக்கம் நடந்ததன் அடிப்படையில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் மு.க ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டது.





அத்துடன் பல்வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையின்படி நான்கு  அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பணி ஐ.பெரியசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை, பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




அமைச்சர் காந்திக்கு பூதானம் மற்றும் கிராம தானம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   


புதிதாய் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையுடன் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்போர் எண்ணிக்கை  35 ஆக உள்ளது.அமைச்சரவை விரிவாக்கத்துடன்  சில மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்த சிவ.வீ.மெய்யநாதன், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கவனிப்பார். சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை துறையை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.ஆர்.பெரியகருப்பன் கவனித்த வறுமை ஒழிப்பு இலாக்காவும் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.  அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதன்படி ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறையும் ,கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் , வனத்துறை அமைச்சரான  இராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறைக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராகவும் முத்துச்சாமியிடம் இருந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை, பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆர்.காந்தி வசமிருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆர்.காந்திக்கு பூதானம் மற்றும் கிராம தானம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துறை வாரியான தரவரிசை சீனியாரிட்டி (Inter-se-seniority) அடிப்படையில் குழு புகைப்பட நிகழ்வு நடைபெற்றது. ஆளுநர் - முதல்வருடன் அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது துறைவாரியான முக்கியத்துவத்தின் அடிப்படையில் அமரவைக்கப்படுவார்கள்.  குழு புகைப்படத்திற்காக புரோட்டோகால் படி அமைச்சர்களை, அதிகாரிகளே அமரவைத்தனர். அந்த அடிப்படையிலேயே, அமைச்சரவை தரவரிசை சீனியாரிட்டியில் 10வது இடம் பிடித்த உதயநிதி ஸ்டாலின், முதல் முறை அமைச்சரானதுமே, குழு புகைப்படத்தில் முன்வரிசையில் அமர்ந்தார்.அமைச்சரவை சீனியாரிட்டியில் 16வது இடமுள்ள கீதா ஜீவன், பதவியேற்பு நிகழ்வுக்கு வராத காரணம்  சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் காரணமாக  வராமல் தூத்துக்குடியிலிருந்தார் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.தரவரிசை சீனியாரிட்டி பட்டியலில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 23 வதிடத்திலும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு 26 வதிடத்திலும் உள்ளனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி 30 வதிடத்தில் உள்ளார். 35 அமைச்சர்கள் உள்ள இந்தப் பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடைசியில் உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...