முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசுப் பணி செய்ய லஞ்சம் பெற்ற பலர் பல மாவட்டத்தில் கைதும் விசாரணை முடிவில் தண்டனையும்

ரூபாய் எட்டாயிரம் லஞ்சம் வாங்கிய நன்னிலம் வருவாய் வட்டாட்சியர் கைது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வருவாய் வட்டாட்சியரையும்


ரூபாய். பத்தாயிரம் லஞ்சம் பெற்றதாக, ஜீப் ஓட்டுநரையும், பொறையாறில் ரூபாய்.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரையும் ஊழல் தடுப்பு  கண்காணிப்பு  மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம்வருவாய்  வட்டாட்சியராகப் பணியாற்றுபவர் லட்சுமிபிரபா(வயது49). இவர், நேற்று முன்தினம் மாலை பேரளம் பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து, அதிகப் பாரம்  இருப்பதாகக் கூறி லாரியை விட மறுத்ததுடன், அதை ஓட்டிவந்த லாரி ஓட்டுநர் மற்றும்  உரிமையாளர் குமாரிடம் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது. தன்னிடம் பணம் இல்லை என குமார் தெரிவித்ததால், லாரியின் சாவியை எடுத்துக்கொண்ட லட்சுமி பிரபா, மறுநாள் தன்னை சந்தித்து பணத்தைக் கொடுத்துவிட்டு, லாரி சாவியை பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.



லஞ்சம் பெற்றதாக நன்னிலம் வட்டாட்சியர் கைது: பொறையாறில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சிக்கினார்

திருவாரூரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நன்னிலம் வட்டாட்சியர், ஜீப் ஓட்டுநரையும், பொறையாறில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரையும் ஊழல் தடுப்புத் துறையினர்  கைது செய்தனர்.




திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வருவாய் வட்டாட்சியராகப் பணி செய்து  வருபவர் லட்சுமிபிரபா(வயது 49). இவர், நேற்று முன்தினம் மாலை பேரளம் பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து, அதிக எடை இருப்பதாகக் கூறி லாரியை விட மறுத்ததுடன், அதை ஓட்டிவந்த லாரி உரிமையாளர் குமாரிடம் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது. தன்னிடம் பணமில்லை என குமார் தெரிவித்ததால், லாரியின் சாவியை எடுத்துக் கொண்ட லட்சுமி பிரபா, மறுநாள் தன்னை சந்தித்து பணத்தைக் கொடுத்துவிட்டு, லாரி சாவியை பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் குமார் புகார் தெரிவித்தார். பின்னர், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுரைப்படி, நேற்று முற்பகல் 11 மணியளவில் லட்சுமிபிரபாவை குமார் தொடர்பு கொண்டு, பணத்தை எங்கு கொண்டு வந்து தரவேண்டும் எனக் கேட்டார். அதற்கு, தான் திருவாரூர் தபால் நிலையத்தில் இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை தரும்படியும் லட்சுமிபிரபா கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, திருவாரூர் தபால் நிலையத்துக்கு அரசு சாட்சியுடன்  சென்ற குமாரிடமிருந்து பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லட்சுமிபிரபா பெற்றுக் கொண்ட போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், லட்சுமி பிரபாவை கைது செய்தனர். மேலும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் ஓட்டுநர் லெனின்(வயது 35) என்பரையும் கைது செய்து,  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறை யாறு பார்வதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோ கரன்(வயது 57). தனது காலிமனைக்கு பட்டா மாறுதல் கேட்டு, தரங்கம்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வட்டாட்சியர் மற்றும் மயிலாடு துறை கோட்டாட்சியர் ஆகியோர் பட்டா மாறுதலுக்கான உத்தரவைப் பிறப்பித்தனர். அந்த உத்தரவு நகலை குமாருக்கு வழங்க, கோட் டாட்சியரின் நேர்முக உதவியாளர் மலர்விழி(வயது 57) ரூபாய்.20 ஆயிரம் லஞ்சமாககா கேட்டதாகக் தெரிகிறது.





இதுகுறித்து நாகபட்டிணம் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் மனோகரன் புகார் அளித்ததையடுத்து, ஊழல் தடுப்புத் துறையினரின் அறிவுரைப்படி, பொறையாறு சிவன் வடக்கு வீதியிலுள்ள மலர்விழியின் வீட்டுக்கு நேற்று அரசு சாட்சியுடன் சென்ற மனோகரன், அங்கு பினாப்தலின் இரசாயனபஹ பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மலர்விழியிடம் கொடுத்தார். அதை மலர்விழி வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர்  நந்தகோபால், ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா மற்றும் ஊழல் தடுப்புத் துறையினர். மலர்விழியை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.


மேலும், அவரது கைப்பையில் வைத்திருந்த கணக்கில் வராத ரூபாய் .30 ஆயிரம் பணம், பட்டா நகல்கள்  ஆகியவற்றையும் பறிமுதல் செய்த நிலையில் விசாரணை நடத்தினர். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம்  திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் காட்டூர் வின்நகரில்  உள்ளது. 

திருவெறும்பூர் வட்டம் காட்டூர் அருகில் பாப்பாக்குறிச்சியில் வசிக்கும் சுப்பிரமணியனின் மகன் அசோக்குமார். நிலங்கள் வாங்கி விற்பனை  செய்கிறார்.  பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்த நிலையில். பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் பாஸ்கரனை அணுகியுள்ளார்.


 அந்த நிலத்தை அரசு நில வழிகாட்டி  மதிப்பீட்டின் படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியுமென்று சார்பதிவாளர் கூறியுள்ளார். மேலும் விவசாய நிலமாக புஞ்சை என 47(A) படி  பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ரூபாய்.ஒரு லட்சம் லஞ்சமாகக் கொடுத்தால் தான் விவசாய புஞ்சை நிலமாக மாற்றம் செய்து ஸ்டாம்ப் டூட்டி குறைத்துப் பதிவு செய்ய முடியுமென்று தெரிவித்ததால்  லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் திருச்சிராப்பள்ளி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர்  மணிகண்டனிடம் புகாரளித்தார். அதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின்படி நேற்று அரசு சாட்சி முன்னிலையில் சார் பதிவாளர் பாஸ்கரனிடம், ரூ.ஒரு லட்சத்தை அசோக்குமார் கொடுத்த.

 பணத்தை பாஸ்கரன் பெற்ற போது, அவரை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறையினர் பிடித்துக் கைது செய்தனர். மேலும் அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்



சார் பதிவாளர் பாஸ்கரன் பணியிட மாறுதல் காரணமாக ஆறு  மாதங்களுக்கு முன்னர் திருவெறும்பூர் சார் பதிவாளராகப் பொறுப்பேற்ற நிலையில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததாகவும், அலுவலகத்தில் அவர் இருக்காமல், அவரது இருக்கையில் வேறு யாரையாவது அமர வைத்துவிட்டு வெளியே சென்றுவிடுவாரென்றும் புகார் இருந்துதாகத் தெரிவித்தனர்.

லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர் போல இலஞ்சம் பெறும் பலருக்கும் அலுவலகத்தில் அச்சம் நிலவுகிறது. மேலும் ரூபாய்.500 லஞ்சம் பெற்ற வழக்கில் உதகமண்டலம் வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய்.6 ஆயிரம் அபராதமுமஹ விதித்து உதகமண்டலம் ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றியவர் தாண்டவ நடராஜன். 2007-ஆம் ஆண்டு உதகமண்டலத்தைச் சேர்ந்த ஜான்பாஸ்கோ வாரிசுச் சான்றிதழுக்காக உதகமண்டலம் வட்டாட்சியர் அலுவலத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தைப் பெற்ற கிராம வருவாய் அலுவலர், அதைப் பரிந்துரை செய்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ளார். வருவாய் ஆய்வாளராக இருந்த தாண்டவ நடராஜன், ஜான்பாஸ்கோவிடம் சான்றிதழ் அளிக்க வேண்டுமானால் ரூபாய்.500 லஞ்சமாகத் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால், ஜான்பாஸ்கோ ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடரிடம் புகார் அளித்ததன் பேரில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஜான்பாஸ்கோவிடம் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய பணத்தை வழங்கி, வருவாய் ஆய்வாளரிடம் வழங்கக் கூறினர். வருவாய் ஆய்வாளர் தாண்டவ நடராஜனிடம், அரசு சாட்சி முன்னிலையில் ஜான்பாஸ்கோ பணத்தை வழங்கும்  போது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாண்டவ நடராஜனைக் கைது செய்தனர்.

அது தொடர்பான வழக்கு உதகமண்டலத்திலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்  தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி சி.ஸ்ரீதர், குற்றவாளியான தாண்டவ நடராஜனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் . மேலும், ரூபாய்.6 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். ரூ.500 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 9 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படட நிகழ்வு அரசுத் தரப்பில் பணியாளர்கள் பலருக்குப் பயம் நிலவும் படி செய்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த