முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது சம்பந்தமாக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய ஆட்சேபனை

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது சம்பந்தமாக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய ஆட்சேபனை.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகும் . நாடு முழுதும் அதிக வழக்குகள் தேங்கிய நிலையில், நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்துவது குறித்து நீண்ட காலமாக பேசப்படுகிறது.பாரதிய ஜனதா கட்சியின் சுஷில்குமார் மோடி தலைமையிலான சட்டம், நீதி, பணியாளர்கள் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு இது குறித்து ஆய்வு செய்த பின் மத்திய சட்ட அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது: நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்துவதை தனியாகப் பார்க்கக் கூடாது. பல்வேறு அம்சங்களுடன் இணைத்தே பார்க்க வேண்டும். ஓய்வு வயதை நீட்டித்தால், சரியாக செயல்படாத நீதிபதிகளுக்கும் அந்த சலுகை கிடைக்கும்; இது, நீதிமன்றத்தின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும்.  மேலும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டும். இவற்றுடன் இணைத்து ஓய்வு வயதை நீட்டிப்பது குறித்து ஆராயலாம்.

கீழமை நீதிமன்றங்களில் காலியாகும் இடங்களை நிரப்புவது, வழக்குகள் தேங்குவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தவிர பல்வேறு தீர்ப்பாயங்களுக்குத் தேவையான தலைவர்கள், உறுப்பினர்கள் கிடைக்காமல் போகும் அபாயமும் உண்டு.

நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தினால், மத்திய - மாநில அரசு அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இதே கோரிக்கையை முன் வைக்கும் வாய்ப்புள்ளது. அதனால், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, இதில் முடிவுஎடுக்கலாம். என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நீதிபதிகளை நியமிக்கும், 'கொலீஜியம்' முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு இடையே கருத்து மோதல் நிலவும் நிலையில், சட்ட அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளதுஉச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும்  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

"உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்காக 2010 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (114 வது திருத்தம்) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், அது பாராளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை மற்றும் 15 வது நாடாளுமன்ற மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது" என்று ரிஜிஜு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதில் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 124(2) பிரிவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65. அரசியலமைப்பின் 217(1) பிரிவின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதில் ஓய்வு பெறுவார்கள். தொடக்கத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 60, பின்னர் 1963. ஆம் ஆண்டில் 114 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 62 ஆக அதிகரித்தது. அரசியலமைப்பின் பிரிவு 124(7) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்த மன்றத்திற்கும் முன்பாகப் பணிபுரிவதைத் தடுக்கிறது, அதே நேரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, அவர்கள் பணியாற்றியதைத் தவிர மற்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பயிற்சி பெற அனுமதிக்கும் வகையில் 1956 ஆம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது.

1974 ஆம் ஆண்டில், சட்ட ஆணையத்தின் 58 வது அறிக்கை உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதிற்கு இடையே சமமான நிலையைக் கொண்டு வர பரிந்துரைத்தது. 2002 ஆம் ஆண்டில், நீதிபதி வெங்கடாசலயா அறிக்கை - அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை - உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை முறையே 65 மற்றும் 68 ஆக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை,

நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதித்துறை காலியிடங்களை கையாள்வதற்கான தீர்வாக நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டது

மாநிலங்களவையில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு 

" ராஜ்யசபாவிற்கு எழுத்துப்பூர்வ பதில் மூலம் மேற்கூறிய தகவல் தெரிவித்த போதிலும்  நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது பல தசாப்தங்களாக முன்வைக்கப்படுகிறது. பணிபுரியும் நீதிபதிகள், பணி ஓய்வுக்குப் பிந்தைய பணியை நிறைவேற்று அதிகாரிகளிடம் இருந்து தேடுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் சூழலிலும் இது விவாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த