முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது சம்பந்தமாக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய ஆட்சேபனை

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது சம்பந்தமாக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய ஆட்சேபனை.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகும் . நாடு முழுதும் அதிக வழக்குகள் தேங்கிய நிலையில், நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்துவது குறித்து நீண்ட காலமாக பேசப்படுகிறது.பாரதிய ஜனதா கட்சியின் சுஷில்குமார் மோடி தலைமையிலான சட்டம், நீதி, பணியாளர்கள் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு இது குறித்து ஆய்வு செய்த பின் மத்திய சட்ட அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது: நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்துவதை தனியாகப் பார்க்கக் கூடாது. பல்வேறு அம்சங்களுடன் இணைத்தே பார்க்க வேண்டும். ஓய்வு வயதை நீட்டித்தால், சரியாக செயல்படாத நீதிபதிகளுக்கும் அந்த சலுகை கிடைக்கும்; இது, நீதிமன்றத்தின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும்.  மேலும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டும். இவற்றுடன் இணைத்து ஓய்வு வயதை நீட்டிப்பது குறித்து ஆராயலாம்.

கீழமை நீதிமன்றங்களில் காலியாகும் இடங்களை நிரப்புவது, வழக்குகள் தேங்குவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தவிர பல்வேறு தீர்ப்பாயங்களுக்குத் தேவையான தலைவர்கள், உறுப்பினர்கள் கிடைக்காமல் போகும் அபாயமும் உண்டு.

நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தினால், மத்திய - மாநில அரசு அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இதே கோரிக்கையை முன் வைக்கும் வாய்ப்புள்ளது. அதனால், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, இதில் முடிவுஎடுக்கலாம். என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நீதிபதிகளை நியமிக்கும், 'கொலீஜியம்' முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு இடையே கருத்து மோதல் நிலவும் நிலையில், சட்ட அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளதுஉச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும்  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

"உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்காக 2010 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (114 வது திருத்தம்) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், அது பாராளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை மற்றும் 15 வது நாடாளுமன்ற மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது" என்று ரிஜிஜு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதில் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 124(2) பிரிவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65. அரசியலமைப்பின் 217(1) பிரிவின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதில் ஓய்வு பெறுவார்கள். தொடக்கத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 60, பின்னர் 1963. ஆம் ஆண்டில் 114 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 62 ஆக அதிகரித்தது. அரசியலமைப்பின் பிரிவு 124(7) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்த மன்றத்திற்கும் முன்பாகப் பணிபுரிவதைத் தடுக்கிறது, அதே நேரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, அவர்கள் பணியாற்றியதைத் தவிர மற்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பயிற்சி பெற அனுமதிக்கும் வகையில் 1956 ஆம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது.

1974 ஆம் ஆண்டில், சட்ட ஆணையத்தின் 58 வது அறிக்கை உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதிற்கு இடையே சமமான நிலையைக் கொண்டு வர பரிந்துரைத்தது. 2002 ஆம் ஆண்டில், நீதிபதி வெங்கடாசலயா அறிக்கை - அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை - உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை முறையே 65 மற்றும் 68 ஆக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை,

நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதித்துறை காலியிடங்களை கையாள்வதற்கான தீர்வாக நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டது

மாநிலங்களவையில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு 

" ராஜ்யசபாவிற்கு எழுத்துப்பூர்வ பதில் மூலம் மேற்கூறிய தகவல் தெரிவித்த போதிலும்  நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது பல தசாப்தங்களாக முன்வைக்கப்படுகிறது. பணிபுரியும் நீதிபதிகள், பணி ஓய்வுக்குப் பிந்தைய பணியை நிறைவேற்று அதிகாரிகளிடம் இருந்து தேடுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் சூழலிலும் இது விவாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...