சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், தரிசனம் செய்ய குடும்பத்துடன்
சனிக்கிழமையன்று சென்னை வடபழனி முருகன் கோவிலிலுக்கு மக்களோடு மக்களாகச் சென்றுள்ளார். தான் யார் என்பதை வெளிப்படுத்திக் கொண்து, விஐபி வரிசையில் செல்லாமல் கட்டண தரிசன வரிசையில் சென்றுள்ளார். தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து கட்டண தரிசனத்துக்கான நுழைவு கட்டணமாக 150 ரூபாயைக் கொடுத்து, மூன்று கட்டணச் சீட்டுகளையும் வாங்கியுள்ளார். அவருக்கு இரண்டு 50 ரூபாய் சீட்டுகளும், ஒரு 5 ரூபாய் சீட்டும் கொடுத்த கோவில் ஊழியர்களிடம்.
தான் கொடுத்த தொகைக்கு 45 ரூபாய் குறைவாக சீட்டு அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே 45 ரூபாய்க்கான உரிய ரசீதை வழங்கும்படியும் நுழைவு சீட்டு அளித்தவரிடம் கேட்டுள்ளார் நீதிபதி. அதற்கு அந்த ஊழியர் பதிலெதுவும் கூறாததால், அதிருப்தியடைந்த நீதிபதி, இதுதொடர்பாக செயல் அலுவலரிடம் பேச வேண்டும் என்றும், அவருடைய செல்லுலர் தொலைபேசி எண்ணைத் தரும்படியும் கேட்டுள்ளார்.
செயல் அலுவலரின் தொடர்பு எண்ணைத் தர மறுத்த கோவில் ஊழியர்கள், வந்திருப்பவர் நீதிபதி என்று தெரியாமலேயே அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த நீதிபதியின் மனைவி, 'முதல்வரே தமது தொடர்பு எண்ணை பொதுமக்களுக்கு பகிரும்போது செயல் அலுவலரின் தொடர்பு எண்ணை ஏன் தர மறுக்கிறீர்கள் என்று கேட்க, முதல்வர் வேண்டுமானால் தரலாம். அதற்காக செயல் அலுவலர் அவரது தொடர்பு எண்ணை தர வேண்டிய அவசியமில்லை என்று பதில் கூறி உள்ளனர் இப்படி வாக்குவாதம் முற்றவே, ஒரு கட்டத்தில் கோவில் பணியாளர்கள் எல்லாம் சேர்ந்து நீதிபதியை குடும்பத்துடன் கோவிலை விட்டு வலுகட்டடாயமாக வெளியேற்ற முயற்சித்துள்ளனர்.விபரம் காவல்துறைக்கு தெரியவே, பதறி்ப்போய் கோவிலுக்கு காவல் துறை வந்த பிறகே வந்திருப்பவர் நீதிபதி என்பது கோவில் ஊழியர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் தவறு செய்ததை உணர்ந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றப் பதிவாளர் நடவடிக்கை காரணமாக கோவிலின் செயல் அலுவலர் அரசு தரப்பு வழக்கறிஞருடன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேரில் ஆஜராகினர்.
100 கோடி ரூபாய்க்கு அதிமான சொத்து்களும் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் வருமானமும் வரக்கூடிய வடபழனி முருகன் கோவிலில் இதுபோன்று முறைகேடு நடைபெறுவது குறித்து வருத்தமும், கண்டனமும் தெரிவித்த நீதிபதி, தமிழ்நாட்டில் இதைவிட அதிக வருமானம் வரும் கோவில்களின் நிலை என்ன என்பது குறித்து கவலை தெரிவித்தார்.அறநிலையத் துறை ஆணையரும், செயல் அலுவலர்களும் இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சாமானிய மக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்க செயல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பக்தர்களின் பார்வையில் படும்படி தகவல் பலகை வைக்கப்படவேண்டுமென்று அறிவுறுத்தினார்.முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுகுறித்த அறிக்கையை 2023. ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திற்குள் தனக்கு அளிக்க வேண்டுமென்றும் நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.
இச் சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதியவில்லை என்பதும். இந்து சமய அறநிலையத் துறை இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை காரணமாக வழக்குப் பதியவில்லை என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிக்கே இந்த நிலை எனில் ஆலயத்தில் சாமானிய மக்களின் நிலை கவலை தருவதாகவே உள்ளன.நீதிபதி சுப்ரமணியத்தின் கூற்றுப்படி, உள்ளூர் காவல்துறை வந்து அவரை அடையாளம் காணவில்லை என்றால், கோயில் ஊழியர்கள் மற்றவர்களைப் போல, சட்டவிரோதத்தை கேள்வி கேட்டதற்காக அவரையும் கோயிலுக்கு வெளியே தள்ளியிருப்பார்கள். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், ஆண்டு வருமானம் ₹14 கோடியும் உள்ள ஒரு கோவிலின் நிலைமை இப்படி என்றால், மற்ற கோவில்களில் என்ன நடக்கும் என்பதை நினைத்தால் நடுங்குகிறது. இவ்வளவு பெரிய கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை (HR and CE) துறை துணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை இ.ஓ.வாக நியமித்துள்ளதாக நீதிபதி கூறினார்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கான பயனுள்ள பொறிமுறையை உருவாக்கத் தவறியதால், இந்த சோகமான நிலைக்கு EOவும் சமமான பொறுப்பு என்று அவர் கூறினார். எனவே, அவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதி, மனிதவள மற்றும் CE துறை ஆணையரிடம் எழுத்துப்பூர்வ புகாரை எஸ்ஜிபியிடம் ஒப்படைத்தார், தேவைப்பட்டால், முரட்டுத்தனமாக நடந்துகொண்ட கோயில் ஊழியர்களை அடையாளம் காணவும் தயங்க மாட்டோம் என்றார்.
HR மற்றும் CE கமிஷனர் அவர்களே இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன் தானாக முன்வந்து நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தவிர்ப்பதாக நீதிபதி சுப்பிரமணியம் கூறினார். ஜனவரி இரண்டாவது வாரத்திற்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்று நீதிபதியிடம் எஸ்ஜிபி உறுதியளித்தார். "அரசியலமைப்புச் சட்டப் பணியாளர்கள் விஐபி சிகிச்சையின்றி பொது இடங்களுக்குச் செல்லும்போதுதான், சாமானியர்கள் படும் சிரமங்களையும், அதிகாரிகளின் விதிமீறல்களையும் நாம் பார்க்கிறோம்," என்று நீதிபதி கூறினார், மேலும் கழிப்பறை வசதிகளையும் அவர் வலியுறுத்தினார். பல முதியோர்கள், குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் கோவில்களுக்கு வருவதால், கோவில் வளாகத்திற்கு வெளியே வழங்கப்பட வேண்டும்.
கருத்துகள்