முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மையம்

அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி இடம்பெற நடிகர் கமல்ஹாசன் விரும்புகிறார்.


அதற்கான அடித்தளமாகவே அவரது டெல்லிப் பயணம் பார்க்கப்பட. டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் ஒன்றாகச் சென்றார், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்த வாய்ப்பாகவும் கூறப்படுகிறது.



டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமலஹாசன் நெருங்கிய நட்புடன் உள்ளார். டெல்லியில் அவரையும் கமல் சந்தித்து பேசுவாரென்று கூறப்படுகிறது.டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயண யாத்திரையில் கமல்ஹாசன் பங்கற்ற நிகழ்வு அவரது 108-வது நாளாக  ராகுல்காந்தி தலைநகர் டெல்லி நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் பங்கற்றுள்ளனர்.காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி பாத யாத்திரையை இந்திய ஒற்றுமை நடைபயணம் ( பாரத் ஜோடோ யாத்திரை) என்ற பெயரில் தமிழ்நாட்டில் தொடங்கி காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு.108-வது நாளான நேற்றுக் காலையில் டெல்லி சென்றடைந்தார்.  டெல்லி மாநில எல்லை பதர்பூரில்  ஆயிரக்கணக்கில் திரண்ட  காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர். 



பின்னர் அங்கிருந்து செங்கோட்டையை நோக்கி ராகுல்காந்தி நடைபயணம் சென்றார். இந்த யாத்திரையில்  சோனியாகாந்தி, பிரியங்கா வதேரா, ராபர்ட் வதேரா உள்பட அவரது  குடும்பத்தினரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். அத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தனது கட்சியினர் 250 பேருடன் பேரணியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, ல்லிகார்ஜுன கார்கே, கமலஹாசன் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமைப் பயணக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னால் செயல் தலைவர் ராகுல்காந்தி, மநீமை தலைவர் நடிகர்  கமல்ஹாசனை  தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்டார். அது ஒருவரின் தாய்மொழிக்கு, தமிழுக்கு அவர் தருகிற மரியாதை.

அவர் தமிழில் பேசுவதை கரூர் நாடாமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திடீரென கமல்ஹாசன் தமிழுக்குப் பதில் ஆங்கிலத்திலேயே சிறிது பேசிவிட்டார். அதை 

ஆங்கிலத்திலேயே திருப்பிச் சொன்னார்.  தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.  ஆனால் ராகுல் காந்தியின் பேரணியில் பங்கேற்ற யாரும் முகக்கவசம் அணியவில்லை. அதில் சோனியா காந்தி மட்டும் முககவசம் அணிந்திருந்தார்.  அந்த நிலையில் ராகுல்காந்தியின்  நடைபயணத்துக்கு ஏழுநாட்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு ஓய்வுக்குப் பின்னர் 2023  ஜனவரி மாதம் 2 ஆம் தேதி மீண்டும் டெல்லியில் பாத யாத்திரை புறப்படுகிறது.  இதனால் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள்  அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராகுலின் பாதயாத்திரையில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக  64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் தற்போது கடும் குளிர் நிலவுவதால், கண்டெய்னரில் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அதனால் குளிர்சாதனப் பெட்டிகளை அகற்றிவிட்டு ஹீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.  இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   மீண்டும் ஜனவரி 1 ஆம் தேதி அவரவர் கண்டெய்னர்களில் வந்து ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...