முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறையுணர்வு பெறாத இறையூரின் இரக்கமற்ற கொடியோர்

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் வட்டம்  இறையூர் கிராமத்திலுள்ள ஆதிதிராவிட  மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்ற நிலையில், 


தரம்தாழ்த்திப் பேசிய சிங்கம்மாள், மற்றும் அஞ்சப்பன் மீது குடியுரிமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் படி வழக்குப்பதிவு  செய்யப்பட்ட நிலையில், தேனீர் விற்பனை செய்யும்  கடையில் தனிக் குவளை  முறையை பின்பற்றிய கடையின் உரிமையாளர் மூக்கையா  மற்றும் அவரது  மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் வட்டம்  முத்துக்காடு ஊராட்சி மன்றம்  இறையூர் கிராமத்தின்   பகுதியில் 50 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட  அனைத்து மக்களும்  வசிக்கின்றனர் அங்கு  ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் சேகரித்து  வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது சில தினங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்தது அதை அறிந்த அப் பகுதி மக்கள் தொட்டியின் மேல் சென்று பார்த்த போது யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை  கலந்தது தெரியவே அச் சம்பவம் பெரும்  அதிர்ச்சியான நிலை ஏற்படுத்தியதால்


சுகாதார அலுவலர்கள் அங்கு சோதனை செய்த போது மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அது குறித்து  வெள்ளானுர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது , அதுகுறித்து விபரம் வருமாறு :-அன்னவாசல, அருகில் இறையூரில்  அமைந்த வேங்கிவயல் கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்களிடம் அப்பகுதியினர் நீண்ட காலமாக  பாகுபாட்டுடன் நடந்துகொள்வதாகவும்., சமீபத்தில்  ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த நான்கு  குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சையின் போது குடிநீர் பிரச்சனைகள் இருப்பது  தெரிந்தது. ஊரிலிருந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை அவ்வூர் இளைஞ்ர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பார்வையிட்ட. போதுதான், 



அதில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டறிந்த நிலை . இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் ஆட்சியர்  கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் அந்தப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.குடிநீர் தேவைக்காக 2016-17-ஆம் ஆண்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டதிலிருந்து. அவர்கள் குடிநீர் விநியோகம் செய்து  வந்தனர். இந்தச் சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சின்னதுரை அப்பகுதிக்கு சென்ற பின்னர்  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அது தொடர்பாக, வேங்கைவயல் ஊராட்சி மன்றத் தலைவர் அளித்த புகாரில், வெள்ளானூர் காவல் நிலையத்தினர் 5 பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.குடிநீர்த் தொட்டியைப் பராமரிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுகிறதா, மற்றவர்கள் ஏறும் வகையில் அந்த ஏணி திறக்கப்பட்டிருந்ததேனென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.



இந்த அவரது ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, இழுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் ச. ராம்கணேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில செயல் தலைவர் இளமுருகு முத்து, மாநிலச் செயலர் மெய்யர் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டு அப் பகுதி  மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


இச் சூழலில்  மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் ஆய்வு செய்தனர். பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டனர். அப்போது பகுதி மக்கள் குற்றம் செய்த  மர்ம நபர்களைக் கண்டறிந்து அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மேலும் தங்களை அய்யனார் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையென்றும் தேனீர் விற்பனை செய்யும்  கடையில் தனிக் குவளை முறை இருப்பதாகவும் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து


மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதிதிராவிட வகுப்பின்  அனைத்து மக்களையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபடச் செய்தார்.அப்போது அவர்கள் வழிபட்ட போது, அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென்று ஆவேசமாகி, அந்த மக்களைப் பார்த்து கோவிலுக்குள் ஏன் வந்தாய் எனக் கேட்டதால் மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை உயர் அலுவலர்களும் அதிர்ச்சியாகி அந்த ஆவேசம் கொண்ட பெண் மீதும், தனிக்குவளை முறையைப் பயன்படுத்தி வந்த  தேனீர் விற்பனைக் கடை உரிமையாளர் மீதும், குடியரிமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ர் கவிதா ராமு உத்தரவிட்டார். இது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இறையூர் கிராமத்தில் சிங்கம்மாள் எனும் பெண், அஞ்சப்பன் ஆகியோர் மீது குடியுரிமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி  வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தேனீர் விற்பனைக் கடையில் தனிக்குவளை முறையைக் கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் அவரது  மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சிங்கம்மாள், மூக்கையா இருவரும்  கைது செய்யப்பட்டனர். மேலும் இச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை கைது செய்யத்  திட்டமிட்டுள்ளனர், சுதந்திரம் பெற்ற பின்னரும் ஜனநாயக நாட்டில் இதுபோன்ற கொடும் நிகழ்வுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இழுப்பூர் வட்டத்தில் மட்டுமே நிகழும் காரணம் பல



காவல்துறையில்  அங்கு ஒரு பிரிவு ஆதரவான நிலை இன்றும் காணலாம். அது களையப்பட்டால் நீதி நிலைபெரும் என்பதே அப்பகுதி நடுநிலை  மக்களின் பேச்சாகும்.  சமூகநீதி சமநீதியானால் அதுவே பொது நீதி மாவட்ட ஆட்சியரும்,காவல்துறைக் கண்காணிப்பாளரும் பாரட்டுக்கு உரியவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...