முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறையுணர்வு பெறாத இறையூரின் இரக்கமற்ற கொடியோர்

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் வட்டம்  இறையூர் கிராமத்திலுள்ள ஆதிதிராவிட  மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்ற நிலையில், 


தரம்தாழ்த்திப் பேசிய சிங்கம்மாள், மற்றும் அஞ்சப்பன் மீது குடியுரிமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் படி வழக்குப்பதிவு  செய்யப்பட்ட நிலையில், தேனீர் விற்பனை செய்யும்  கடையில் தனிக் குவளை  முறையை பின்பற்றிய கடையின் உரிமையாளர் மூக்கையா  மற்றும் அவரது  மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் வட்டம்  முத்துக்காடு ஊராட்சி மன்றம்  இறையூர் கிராமத்தின்   பகுதியில் 50 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட  அனைத்து மக்களும்  வசிக்கின்றனர் அங்கு  ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் சேகரித்து  வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது சில தினங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்தது அதை அறிந்த அப் பகுதி மக்கள் தொட்டியின் மேல் சென்று பார்த்த போது யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை  கலந்தது தெரியவே அச் சம்பவம் பெரும்  அதிர்ச்சியான நிலை ஏற்படுத்தியதால்


சுகாதார அலுவலர்கள் அங்கு சோதனை செய்த போது மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அது குறித்து  வெள்ளானுர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது , அதுகுறித்து விபரம் வருமாறு :-அன்னவாசல, அருகில் இறையூரில்  அமைந்த வேங்கிவயல் கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்களிடம் அப்பகுதியினர் நீண்ட காலமாக  பாகுபாட்டுடன் நடந்துகொள்வதாகவும்., சமீபத்தில்  ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த நான்கு  குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சையின் போது குடிநீர் பிரச்சனைகள் இருப்பது  தெரிந்தது. ஊரிலிருந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை அவ்வூர் இளைஞ்ர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பார்வையிட்ட. போதுதான், 



அதில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டறிந்த நிலை . இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் ஆட்சியர்  கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் அந்தப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.குடிநீர் தேவைக்காக 2016-17-ஆம் ஆண்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டதிலிருந்து. அவர்கள் குடிநீர் விநியோகம் செய்து  வந்தனர். இந்தச் சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சின்னதுரை அப்பகுதிக்கு சென்ற பின்னர்  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அது தொடர்பாக, வேங்கைவயல் ஊராட்சி மன்றத் தலைவர் அளித்த புகாரில், வெள்ளானூர் காவல் நிலையத்தினர் 5 பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.குடிநீர்த் தொட்டியைப் பராமரிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுகிறதா, மற்றவர்கள் ஏறும் வகையில் அந்த ஏணி திறக்கப்பட்டிருந்ததேனென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.



இந்த அவரது ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, இழுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் ச. ராம்கணேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில செயல் தலைவர் இளமுருகு முத்து, மாநிலச் செயலர் மெய்யர் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டு அப் பகுதி  மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


இச் சூழலில்  மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் ஆய்வு செய்தனர். பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டனர். அப்போது பகுதி மக்கள் குற்றம் செய்த  மர்ம நபர்களைக் கண்டறிந்து அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மேலும் தங்களை அய்யனார் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையென்றும் தேனீர் விற்பனை செய்யும்  கடையில் தனிக் குவளை முறை இருப்பதாகவும் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து


மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதிதிராவிட வகுப்பின்  அனைத்து மக்களையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபடச் செய்தார்.அப்போது அவர்கள் வழிபட்ட போது, அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென்று ஆவேசமாகி, அந்த மக்களைப் பார்த்து கோவிலுக்குள் ஏன் வந்தாய் எனக் கேட்டதால் மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை உயர் அலுவலர்களும் அதிர்ச்சியாகி அந்த ஆவேசம் கொண்ட பெண் மீதும், தனிக்குவளை முறையைப் பயன்படுத்தி வந்த  தேனீர் விற்பனைக் கடை உரிமையாளர் மீதும், குடியரிமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ர் கவிதா ராமு உத்தரவிட்டார். இது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இறையூர் கிராமத்தில் சிங்கம்மாள் எனும் பெண், அஞ்சப்பன் ஆகியோர் மீது குடியுரிமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி  வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தேனீர் விற்பனைக் கடையில் தனிக்குவளை முறையைக் கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் அவரது  மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சிங்கம்மாள், மூக்கையா இருவரும்  கைது செய்யப்பட்டனர். மேலும் இச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை கைது செய்யத்  திட்டமிட்டுள்ளனர், சுதந்திரம் பெற்ற பின்னரும் ஜனநாயக நாட்டில் இதுபோன்ற கொடும் நிகழ்வுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இழுப்பூர் வட்டத்தில் மட்டுமே நிகழும் காரணம் பல



காவல்துறையில்  அங்கு ஒரு பிரிவு ஆதரவான நிலை இன்றும் காணலாம். அது களையப்பட்டால் நீதி நிலைபெரும் என்பதே அப்பகுதி நடுநிலை  மக்களின் பேச்சாகும்.  சமூகநீதி சமநீதியானால் அதுவே பொது நீதி மாவட்ட ஆட்சியரும்,காவல்துறைக் கண்காணிப்பாளரும் பாரட்டுக்கு உரியவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த