முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐஐடி மெட்ராஸ் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு

ஐஐடி மெட்ராஸ், 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20


கருத்தரங்கை நடத்த உள்ளது        ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்துவரும் நிலையில், ஜி20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடையே சாத்தியமான ஆராய்ச்சி, கல்விசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகுதிகள் மற்றும் கருப்பொருள்களைக் கண்டறியும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்    (ஐஐடி மெட்ராஸ்) தனது ஆராய்ச்சிப் பூங்காவில் (Research Park) 31 ஜனவரி 2023 அன்று  'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு ஒன்றை நடத்த உள்ளது. ஜி20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்த கொள்கைகளை அடையாளம் காண்பதே இதன் நோக்கமாகும்.

சென்னையில் 31 ஜனவரி 2023 முதல் 2 பிப்ரவரி 2023 வரை நடைபெற உள்ள பிரதிநிதிகள் சந்திப்பு- முதலாவது கல்விப் பணிக்குழுக் கூட்டத்தின் (Sherpa Track - 1st Education Working Group Meeting) ஒரு பகுதியாக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் (IIT Madras Research Park - IITMRP) ஜி20 கருத்தரங்கு நடைபெறுகிறது. ஜி20 உறுப்பு நாடுகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள் இடையே, ஆராய்ச்சி, கல்வி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகுதிகள் மற்றும் கருப்பொருள்களை அடையாளம் காண்பதை இந்தியத் தலைமையின் கீழ் இயங்கும் ஜி20 கல்விப் பணிக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாபெரும் இந்நிகழ்வையொட்டி ஐஐடி மெட்ராஸ்  ஆராய்ச்சிப் பூங்காவில் 50 அரங்குகளுடன் கூடிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி, புதுமை, திறன் சார்ந்த அம்சங்கள் இந்த அரங்குகளில் இடம்பெற்று இருக்கும். கருத்தரங்கில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தையும் பார்வையிட உள்ளனர். புதிதாகப் புதுப்பிக்கப்பட்டு உள்ள ஐஐடி மெட்ராஸ் ஹெரிடேஜ் சென்டரில் இருந்து இக்கல்வி நிறுவனத்தின் பல ஆண்டுகால வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

ஐஐடி மெட்ராஸ் 'சுதா கோபாலகிருஷ்ணன் ப்ரெயின் சென்டரில் நடைபெற்றுவரும் அதிநவீன ஆராய்ச்சிகள், மாணவர்களால் நடத்தப்படும் புத்தாக்க மையத்தில் (CFI) இடம்பெற்றுள்ள கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட உள்ளனர். மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களைத் தவிர பல்வேறு ப்ராஜக்ட்டுகளில் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள முடியும். நாட்டின் வளமான கலாச்சாரப் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இக்கல்வி நிறுவன வளாகத்தில் கலாச்சார அணிவகுப்பும் நடைபெற உள்ளது.                                      இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (28 ஜனவரி 2023) செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றில் சமூக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் மதிப்புமிக்க சர்வதேசக் கருத்தரங்கு நடைபெறுவதை இக்கல்வி நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாகக் கருதுகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கல்விக்காகப் பயன்படுத்துவதில் இக்கல்வி நிறுவனத்திற்கு சிறந்ததொரு வரலாறு உண்டு. தடைகளைத் தகர்த்தெறிந்து அனைவரும் தரமான கல்வியைப் பெறும் வகையில், புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியல் பாடத்திட்டத்தில் ஆன்லைன் முறையில் பி.எஸ். பட்டம் வழங்கும் திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக கடந்த 2020ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியது" எனக் குறிப்பிட்டார்.

பேராசிரியர் காமகோடி மேலும் கூறுகையில், "மாணவர்களின் கற்றல் வாய்ப்புகள் மற்றும் விளைவுகளை மேம்படுத்தும் விதமாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வலுப்படுத்துதல், சிறப்புக் குழந்தைகளின் கல்விக்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற அம்சங்கள் குறித்து ஜி20 கருத்தரங்கில் கவனம் செலுத்தப்படும். ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வியை தரமாக வழங்குவது எப்படி என பங்கேற்பாளர்கள் விவாதிப்பார்கள்" எனக் குறிப்பிட்டார்.

மாணவர்களின் கற்றல் வாய்ப்புகள், கற்றல் விளைவுகள் ஆகியவற்றை விரிவுபடுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்த முடியும் எனக் கருத்தரங்கின்போது கலந்துரையாட உள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய, தரமான கல்வியை அடைவதற்கு ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், நிலையான 4 வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goal 4 - SDG4)  குறித்து விவாதிக்கப்படும்.

கருத்தரங்கில் பங்கேற்க உள்ளோர்

ஜி20-யின் உறுப்பினர் நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஜி20 கல்விக்கான பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள்

அனைவருக்கும் தரமான கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்யவும், கற்றல் விளைவுகளை மேம்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜி20 உறுப்பினர் நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள்

யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி, OECD போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள்

இந்தியாவில் இருந்து அறிவுசார் பங்குதாரர்களின் பிரதிநிதிகள்

கடந்த சில ஆண்டுகளில், அனைத்து ஜி20 உறுப்பு நாடுகளும் கல்வி அணுகல் மற்றும் கற்பித்தல்-கற்றல் செயல்முறையை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. SDG4-கல்வி 2030 என்ற இலக்கை எட்ட வேண்டுமெனில், கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல், வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல், கற்றல் குறைபாடுகளைக் குறைத்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் காண்பது அவசியமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...