முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய. உணவுக் கழகத்தில் 59-வது நிறுவக தின விழாவில் அமைச்சர் தொடக்க உரை

இந்திய உணவுக் கழகத்தில் விரைவான முறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது: இந்திய உணவுக் கழகத்தில்    59-வது நிறுவன தின விழாவில் தொடக்க உரை ஆற்றிய மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்சிஐ) மாற்றங்கள் விரைவான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன எனவும், இதன் மூலம் இந்த அமைப்பு நாட்டு மக்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு தொடர்ந்து அதிக அளவில் உதவ முடியும் என்றும் மத்திய  நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற இந்திய உணவுக் கழகத்தின் 59-வது நிறுவக தின விழாவில் தொடக்க உரை ஆற்றிய அவர், இந்திய உணவுக் கழகம், மத்திய கிடங்குக் கழகம் (சிடபிள்யூசி) ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை ஒவ்வொரு வாரமும் கண்காணித்து, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தகவல்களைத் தெரிவிக்குமாறு உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளருக்கு அறிவுறுத்தினார். மாற்றங்களுக்கு ஒத்துழைக்காத அல்லது மாற்றங்களைத் தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்திய உணவுக் கழகத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீது நடந்து வரும் விசாரணையைப் பற்றிப் பேசிய அவர், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று உறுதிபட தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான  கொள்கையை இந்திய உணவுக் கழகம் முழுமையாக பின்பற்றும் என்று அவர் கூறினார். ஊழலை வெளிப்படுத்தும் விதமான தகவல்களை வழங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கும் நடைமுறையை உருவாக்குமாறு உணவுத் துறைச் செயலாளருக்கு திரு பியூஷ் கோயல் உத்தரவிட்டார். ஊழல் நடந்தால் புகார் அளிக்குமாறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் (PMGKAY) உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக, குறிப்பாக கொவிட் காலத்தின்போது, உலகின் மிகப்பெரிய உணவு விநியோகச் சங்கிலி அமைப்பை இந்திய உணவுக் கழகம் மேற்கொண்ட விதத்திற்காக திரு பியூஷ் கோயல் பாராட்டினார். கொவிட் பாதிப்பு காலத்திலும், நாட்டில் யாரும் பசியுடன் உறங்வில்லை என்று அவர் கூறினார். உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரச் சூழலை வலுப்படுத்துதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிற துறைகளில் இந்தியா உலகளாவிய முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டிற்கான அரிசி கொள்முதல் புள்ளிவிவரங்கள் நன்றாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதேபோல் கோதுமை கொள்முதலும் நல்ல முறையில் உள்ளதாகக் கூறிய அவர், வரும் பருவத்திலும் வலுவான கோதுமை கொள்முதலை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசிய உணவுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, கொவிட் காலத்தின்போது நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் போதுமான அளவு உணவு தானியங்களை வழங்க, குறிப்பாக பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை வழங்க இந்திய உணவுக் கழகம் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க பணியைப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ராவும் கலந்து கொண்டார். ஊழலை ஒழிப்பதற்கும் மக்களுக்கு மேலும் திறம்பட்ட, வெளிப்படையான சேவைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு அசோக் கே.கே. மீனாவை அவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...