முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒன்றுபட்ட இந்தியா உறுவான 74வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

 ஒன்றுபட்ட இந்தியாவின் 74 வது குடியரசு தினத்தை 



யொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை


குடியரசு தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.




பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று காலை தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது."குடியரசு தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்






குடியரசு தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார்

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:




“குடியரசு தினத்திற்கு வெகுவான நல் வாழ்த்துக்கள். இம்முறை இவ்விழா சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா காலத்தில் கொண்டாடப்படுவதால்  இவ்விழாவும் சிறப்பு வாய்ந்தது. நாட்டின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம் ஒற்றுமையாக முன்னேற விரும்புகிறோம்.

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான குடியரசுதின வாழ்த்துக்கள்!”பத்ம விருது பெற்றவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்




பத்ம விருது பெற்றவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"பத்ம விருது வழங்கப்பட்டோருக்கு வாழ்த்துக்கள். நாட்டிற்கு இவர்களின் வளமான மற்றும் பன்முகப் பங்களிப்புக்காகவும் நமது வளர்ச்சிப் பாதை விரிவாக்கத்திற்கு இவர்களின் முயற்சிகளுக்காகவும் இந்தியா இவர்களைப் போற்றுகிறது.சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் கோலாகலமாகக் குடியரசு தினவிழா கொண்டாட்டம்


சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில்  74வது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி பள்ளிக் கட்டிடம் மூவண்ணப்  பூந்தொட்டிகளாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் கேந்திரிய வித்யாலயாவின் சென்னை மண்டல துணை ஆணையர் திருமதி டி ருக்மணி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு  மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார். ஐஐடி சென்னை கேந்திரிய  வித்யாலயாவின் முதுநிலை கணித ஆசிரியை திருமதி எஸ். மைதிலி கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.  அவர் தமது உரையில் மாணவர்களின் பொறுப்புகள் பற்றி எடுத்துரைத்தார். 



தங்களுக்கான விருப்பங்களையும் இலக்குகளையும் நிர்ணயித்து அதற்காக திட்டமிட்டு அவற்றை அடைவதற்கு கடுமையாக பாடுபட வேண்டும் என்று அவர் மாணவர்களை வலியுறுத்தினார்.  இந்த விழாவில் உரையாற்றிய தலைமை விருந்தினர் திருமதி டி. ருக்மணி,  குடியரசு தினம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பை வலியுறுத்தும் நாள் என்பதை எடுத்துரைத்தார். தாய்க்கு  மதிப்பளிக்க மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இது தாய் நாட்டை மதிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.



குடியரசு தின விழாவையொட்டி  "வேற்றுமையில், ஒற்றுமை" என்பதை விளக்கும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாணவர்களின் தேசப்பற்று மிக்க எழுச்சி உரைகள் இடம்பெற்றன.  யோகாவில் தங்களின் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.  குழு நடனங்களும் சேர்ந்திசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.  பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக பள்ளியின் முதல்வர் டாக்டர் எம். மாணிக்கசாமி வரவேற்புரையாற்றினார். விழா நிறைவில் துணை முதல்வர் திரு ராஜேஷ்குமார் மிஸ்ரா நன்றி கூறினார்.புதுதில்லி கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாக் கொண்டாட்ட அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த வந்தே பாரதம் என்ற கலாச்சார நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது





புதுதில்லியில்  உள்ள கடமைப்பாதையில் இன்று நடைபெற்ற தேசிய அளவிலான குடியரசு தினக் கொண்டாட்டத்தில், கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் இடம்பெற்றிருந்த  வந்தே பாரதம் என்ற கலாச்சார நிகழ்ச்சி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சிக்காக,  பெண் சக்தி என்ற கருப்பொருளின் அடிப்படையில், தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு, அதில் இருந்து 479 கலைஞர்கள்  தேர்வு செய்யப்பட்டனர்.  அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட அணிவகுப்பில், கலைஞர்கள் தங்கள் தன்னிகரில்லாத் திறமைகளை வெளிப்படுத்தினர். இது, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கொள்கையின் அடிப்படையில், இந்தியாவின்  பல்வேறு கலாச்சார மற்றும் கலை பாரம்பரியத்தை வெளியிடுத்துவதாக  அமைந்திருந்தது.


வந்தே பாரதம் நிகழ்ச்சிக்கு  இசைஞானி இளையராஜாவின் மகள் ராஜா பவதாரணி இசையமைத்திருந்தார். அவருடன் அலோக்நந்த தாஸூம் இணைந்து, ஹிந்துஸ்தானி, கர்நாடக  மற்றும் ஜாஸ் இசைகளின் உட்கூறுகளை உள்ளடக்கிய இசையை வடிவமைத்திருந்தனர்.

கடமைப்பாதையில் நடைபெற்றிருந்த  இந்த அணிவகுப்பில், கலாச்சார  அமைச்சகம் சார்பில், பெண் கடவுள் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக பிரம்மாண்ட கடவுள் உருவமும் இடம்பெற்றிருந்தது. இதில் பல்வேறு நாட்டுப்பற நடனக்கலைஞர்களின் கண்கவர் நடனமும் இடம்பெற்றிருந்தன.




இந்த வந்தே பாரதம் நடன விழாவானது, மத்திய பாதுகாப்பு மற்றும் கலாச்சார அமைச்சகங்களின் கூட்டு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த நடனங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, உலகிற்கு வெளிப்படுத்தியதுடன், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கொள்கையை மக்களிடையே முன்னிறுத்தும் முயற்சியாகவும் அமைந்திருந்தது.






இதற்காக நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள கலைஞர்களை அடையாளம் காண ஏதுவாக, 2022 அக்டோபர் 15ம் தேதி 2-வது கட்ட நடனப் போட்டி நடத்தப்பட்டது. இதில்  மாநிலம், மண்டல மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  17 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட  நாட்டுப்புற நடனக் கலைஞர்களுக்கு மட்டுமே இந்தமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது.  இவர்களுக்கு 2022 டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில், பிரம்மாண்ட இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.குடியரசு தினவிழாவில் பங்கேற்றமைக்காக அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியிக்கு பிரதமர் நன்றி




இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பித்த  எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்- சிசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  நாட்டின் 74-வது குடியரசு தின விழாவில் அதிபர் எல்-சிசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில்,  பங்கேற்று சிறப்பித்தமைக்காக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்- சிசிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கடமைப்பாதையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாக் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

தில்லி கடமைப்பாதையில் நடைபெற்ற இன்றைய குடியரசு தினவிழாவின் காட்சிகளை பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தொடர் ட்விட்டர் பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.   





 தமிழ்நாடு அரசு சார்பில் குடியரசு தினவிழா நடைபெற்றதில் ஆளுநர்  ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய. பின்னர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

 நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்

"நாம் சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளாகிறது. நீண்ட சுதந்திரப் போராட்ட களத்தில் முன்னனி வீரர்களைத் தவிர, பல வீரர்கள், வீராங்கனைகள் வரலாறு அறியப்படாமலே போனது. அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக அவர்களின் வாழ்கையை ஆவணப்படுத்தும் கடமை நமக்குள்ளது.



தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அந்நியர்களை இந்த மண்ணைவிட்டு விரட்ட தியாகங்கள் செய்துள்ளனர். இதில் பலரது தியாகங்கள் அறியப்படாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் கண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் ஒரு வருடம் முடிவில் ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் சிறப்பிக்கப்படுவார்கள். எனத் தெரிவித்துள்ளார்.சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆகியோர் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார்கள்.   




குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேநீர் விருந்தை புறக்கணித்துவிட்ட விசிக,  ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது.



விசிகவைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்த. கருத்தில் “ஆளுநர் ஆளுநராக இல்லை, ஆர்எஸ்எஸ்காரராக செயல்படுகிறார். எனவே தேநீர் விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை, புறக்கணிக்கிறோம்” என தெரிவித்திருந்தனர்.           சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு இரயில் நிலையத்தில் SS பொறுப்பு - தர்மேந்திரகுமார்சௌத்ரி ,


ஸ்டேஷன் மாஸ்டர்  - கமலேஸ்குமார் ராம்  , P.MAN- யு.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அழைப்பில் பப்ளிக் ஜஸ்டிஸ் செய்தி ஆசிரியர் குடியரசு தினத்தில் கலந்து கொண்ட நிகழ்வு சிவகங்கை சமஸ்தானம் மேதகு இராணி DSK மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுமைக்கு உட்பட்ட சிவகங்கை மன்னர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான மன்னர் மேல்நிலைப்பள்ளியில் இன்று 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதுகள் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மறைந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகிய 6 பேருக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, இன்போசிஸ் நிறுவனத் தலைவரும்  நாராயணமூர்த்தியின் மனைவியும்,  பிரிட்டிஷ் பிரதமரின் மாமியாருமான சுதா மூர்த்தி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.பெரிய அளவில் அறியப்படாத பலரில் தமிழ்நாட்டின் இருளர் சமூகத்தின் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் எவ்வித கல்வி அறிவுமின்றி, உலகம் முழுவதும் சுற்றி, பல விஷ பாம்புகளை இருவரும் நேர்த்தியாக பிடித்து, விஷ முறிவு துறைக்கு சிறந்த பங்களிப்பை  வழங்கி வரும். இவர்கள்       


 இந்திய  இருளர்கள் இருவரும் 
அமெரிக்கா பறந்த, அந்த 10 நாட்களில் மட்டும் 14 பைத்தான்களைப் பிடித்து அமெரிக்காவுக்கு ஆச்சரியமளித்துள்ளனர். இவர்களின் திறமையை கண்ட ஃப்ளோரிடா மாகாணத்தின் வன உயிரின அமைச்சக நிர்வாகிகள், பாம்பு பிடிக்கும் யுக்திகளையும், வியூகங்களையும் தங்கங்களுக்கும் சொல்லித் தரும்படி கேட்டுள்ளனர்.
அமெரிக்கா மட்டுமல்லாமல் தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கும் பாம்பு பிடிப்பதற்காக இருவரும் சென்றுள்ள நிலையில் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் இருவருக்கும் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் போலவே இன்னும் பல பழங்குடி இருளர்கள் பலர் இந்தியாவில் இருக்கும் நிலையில் இவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிர்ஷ்டம் என்பதே நமது பார்வை.    இவர்கள் தவிர திருமணமே செய்யாமல், தனது



வாழ்க்கையையே சமூக சேவைக்கு அர்ப்பணித்த ஓய்வுபெற்ற நூலகரான பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவர் கோபாலசாமி வேலுசாமி, கலைத்துறையைச் சேர்ந்த கே.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் 74 வது குடியரசு தின விழா 

 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் பள்ளியின் ஆசிரியை விசாலாட்சி வரவேற்புரையாற்றினார் வழங்கினார். நிர்வாக இயக்குனர் . அருண்குமார்  தலைவர்களை நினைவுபடுத்தும் வகையில் எம் பள்ளி மாணவ மாணவிகள் தேசிய தலைவர்களின் வேடங்களில் அன்னை தெரசா, நேதாஜி சுபாஷ் சந்ரபோஸ், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, இராஜேந்திர பிரசாத் மற்றும் பாரதியார்) உள்ளிடட பலரது வேடமிட்டு பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.சென்னை வருமானவரித் துறை அலுவலகத்தில் குடியரசு தின விழா

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை  அலுவலகத்தில் 74-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித் துறையின் முதன்மை தலைமை ஆணையர் திரு ஆர். ரவிச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மூத்த அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ரவிச்சந்திரன், சுதந்திரத்துக்காக பாடுபட்ட பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மாவீரன் அழகுமுத்து கோன், தீரன் சின்னமலை, வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார், வேலு நாச்சியார் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.

நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்று கூறிய அவர், மூன்று ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் போது, தமிழ்நாடு நாட்டின் ஜிடிபி பங்களிப்பில் பெரிய மாநிலமாக மாறும் என்று கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலக வளாகத்தில் உள்ள அகரம் குடியிருப்பு பகுதியில் மரம் நடும் இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார் என்று சென்னை வருமானவரி அலுவலக கூடுதல் ஆணையர் திரு வி.வித்யாதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு