முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடனை திருப்பிக் கேட்ட மாமனார் மஸ்தான் கொலையில் ஐவர் கைது

தி.மு.க. வின்  சிறுபான்மையினர் நல உரிமைகள் பிரிவின் மாநிலச் செயலாளரும், தமிழ்நாடு சிறுபான்மையர் நல வாரிய துணைத் தலைவருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் .


டாக்டர் மஸ்தான்  சென்னையிலிருந்து காரில் கூடுவாஞ்சேரி சென்று கொண்டிருந்த நிலையில் . அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்ற

போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு நோய் வந்ததாகவும் கூறி அவரை கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் ஆனால் அதற்குள் மஸ்தான் பரிதாபமாக இறந்துவிட்டாரென்றும் டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் அன்று மாலை நடைபெற இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாம்,

அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.  தகவலறிந்ததும் தி.மு.க. வின்  நிர்வாகிகள் விரைந்து  அஞ்சலி செலுத்தினார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட பலர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.  இந்த நிலையில்  தற்போது வரும் தகவல் வேறுவிதமாக உள்ளன கைக்குட்டையை வாயில் திணித்து கொலை செய்யப்பட்டதாக வெளியான வாக்குமூலம். தற்போது அதிர்ச்சியை உருவாக்கியது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . மஸ்தான் மரணம் கொலை வழக்காகப் பதியப்பட்டு ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடுவாஞ்சேரி பகுதியில் டிசம்பர் மாதம்  21 ஆம் தேதி காரில் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக கூறப்பட்டது.

டாக்டர் மஸ்தானின் மகன் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், மருத்துவமனையில் என்னுடைய அப்பா மஸ்தானைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

அதன் படி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டனர். விசாரணையில் மஸ்தான் இறப்பில் சந்தேகம் இருப்பது தெரிந்ததையடுத்து அமைக்கபட்ட தனிப்படைக் காவல்துறையினர் மஸ்தானுடன் காரில் பயணித்த அவர் மருமகன் இம்ரான் பாஷாவிடம் விசாரித்தனர். 


டாக்டர் மஸ்தான் மாரடைப்பு காரணமாகவே இறந்தார் என்ற இம்ரான்பாஷா கூற, மஸ்தானின் சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளித்த தகவலில் மஸ்தான் மூச்சுத் திணறி இறந்தார் எனத் தெரியவந்தது.

அதனால் இம்ரான் பாஷாவின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகளை தனிப்படைக் காவல்துறையினர் இரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினர். தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று மஸ்தானின் காரைப் பின்தொடர்ந்து மற்றோரு காரும் சென்றது தெரியவந்தது.

திடீரென இரண்டு கார்களும் ஆங்காங்கே நிறுத்தப்படுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்தப்பகுதியில் இருந்த செல்போன்களின் சிக்னலைக் கண்காணித்தனர். அப்போது மஸ்தான் பயணித்த காரில் இம்ரான் பாஷாவைத் தவிர மேலும் இரண்டு பேர் காரில் சென்றதும்,

அவர்கள் குறித்து விசாரித்தபோது இம்ரான் பாஷாவின் சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது, அவரின் நண்பர் நஷீர் எனவும் தெரியவந்த நிலையில்  அவர்களிடம் விசாரித்த போது 15 லட்சம் ரூபாய் பணத்துக்காக மஸ்தானை இம்ரான் பாஷா கொலை செய்தது தெரியவந்தது.

சம்பவம் குறித்து  காவல்துறையினர் கூறும் போது ``திமுக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்  மஸ்தானிடம் இம்ரான் பாஷா சிறுகச் சிறுக 15 லட்சம் ரூபாய் வரை கடனாக வாங்கியிருக்கிறார். தன்னுடைய மகன் ஷாநவாஸின் திருமணச் செலவுக்காக மஸ்தான், கடனாகக் கொடுத்த பணத்தை மருமகன் இம்ரான் பாஷாவிடம் கேட்டிருக்கிறார். பணத்தை திரும்பக் கொடுக்க விரும்பாத இம்ரான் பாஷா, மஸ்தானைக் கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவருடைய உறவினர்கள் சுல்தான் அகமது மற்றும் அவரது  நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன், ஆகியோருடன் சேர்ந்து சம்பவத்தன்று ஃபைனான்ஸியர் ஒருவரிடம் பணம் வாங்கித் தருவதாகக் கூறி மஸ்தானைக் காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது மஸ்தானின் காரை இம்ரான் பாஷா ஓட்டியிருக்கிறார். அந்தக் காரில் தமீம், நஷீர் ஆகியோர் சென்றிருக்கிறார்கள். மஸ்தான் சென்ற காரைப் பின்தொடர்ந்து மற்றொரு சொகுசுக் காரும் சென்றிருக்கிறது. அதில் தௌபிக் அகமதுவும் லோகேஸ்வரனும் வந்திருக்கிறார்கள். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய இம்ரான் பாஷா, மஸ்தானின் காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்த நஷீருக்கும் தமீமுக்கும் கண்ணால் சைகை கொடுத்திருக்க உடனே நஷீர், மஸ்தானின் கைகளைப் பின்புறமாக பிடித்திருக்கிறான். அடுத்து மஸ்தானின் வாய், மூக்கை சுல்தான் பிடித்து அவரை மூச்சுவிடாமல் அழுத்தியிருக்கிறான். அப்போது மற்றொரு காரில் வந்த தௌபிக், லோகேஸ்வர் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்களும் சேர்ந்து மஸ்தான் சத்தம் போடமிலிருக்க கைக்குட்டையை அவர் வாய்க்குள் திணித்திருக்கிறார்கள். அதனால் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்.

மஸ்தான் இறந்ததும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததைப் போல நடித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து நபருடன் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்திருக்கிறோம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,