முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடனை திருப்பிக் கேட்ட மாமனார் மஸ்தான் கொலையில் ஐவர் கைது

தி.மு.க. வின்  சிறுபான்மையினர் நல உரிமைகள் பிரிவின் மாநிலச் செயலாளரும், தமிழ்நாடு சிறுபான்மையர் நல வாரிய துணைத் தலைவருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் .


டாக்டர் மஸ்தான்  சென்னையிலிருந்து காரில் கூடுவாஞ்சேரி சென்று கொண்டிருந்த நிலையில் . அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்ற

போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு நோய் வந்ததாகவும் கூறி அவரை கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் ஆனால் அதற்குள் மஸ்தான் பரிதாபமாக இறந்துவிட்டாரென்றும் டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் அன்று மாலை நடைபெற இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாம்,

அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.  தகவலறிந்ததும் தி.மு.க. வின்  நிர்வாகிகள் விரைந்து  அஞ்சலி செலுத்தினார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட பலர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.  இந்த நிலையில்  தற்போது வரும் தகவல் வேறுவிதமாக உள்ளன கைக்குட்டையை வாயில் திணித்து கொலை செய்யப்பட்டதாக வெளியான வாக்குமூலம். தற்போது அதிர்ச்சியை உருவாக்கியது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . மஸ்தான் மரணம் கொலை வழக்காகப் பதியப்பட்டு ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடுவாஞ்சேரி பகுதியில் டிசம்பர் மாதம்  21 ஆம் தேதி காரில் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக கூறப்பட்டது.

டாக்டர் மஸ்தானின் மகன் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், மருத்துவமனையில் என்னுடைய அப்பா மஸ்தானைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

அதன் படி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டனர். விசாரணையில் மஸ்தான் இறப்பில் சந்தேகம் இருப்பது தெரிந்ததையடுத்து அமைக்கபட்ட தனிப்படைக் காவல்துறையினர் மஸ்தானுடன் காரில் பயணித்த அவர் மருமகன் இம்ரான் பாஷாவிடம் விசாரித்தனர். 


டாக்டர் மஸ்தான் மாரடைப்பு காரணமாகவே இறந்தார் என்ற இம்ரான்பாஷா கூற, மஸ்தானின் சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளித்த தகவலில் மஸ்தான் மூச்சுத் திணறி இறந்தார் எனத் தெரியவந்தது.

அதனால் இம்ரான் பாஷாவின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகளை தனிப்படைக் காவல்துறையினர் இரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினர். தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று மஸ்தானின் காரைப் பின்தொடர்ந்து மற்றோரு காரும் சென்றது தெரியவந்தது.

திடீரென இரண்டு கார்களும் ஆங்காங்கே நிறுத்தப்படுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்தப்பகுதியில் இருந்த செல்போன்களின் சிக்னலைக் கண்காணித்தனர். அப்போது மஸ்தான் பயணித்த காரில் இம்ரான் பாஷாவைத் தவிர மேலும் இரண்டு பேர் காரில் சென்றதும்,

அவர்கள் குறித்து விசாரித்தபோது இம்ரான் பாஷாவின் சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது, அவரின் நண்பர் நஷீர் எனவும் தெரியவந்த நிலையில்  அவர்களிடம் விசாரித்த போது 15 லட்சம் ரூபாய் பணத்துக்காக மஸ்தானை இம்ரான் பாஷா கொலை செய்தது தெரியவந்தது.

சம்பவம் குறித்து  காவல்துறையினர் கூறும் போது ``திமுக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்  மஸ்தானிடம் இம்ரான் பாஷா சிறுகச் சிறுக 15 லட்சம் ரூபாய் வரை கடனாக வாங்கியிருக்கிறார். தன்னுடைய மகன் ஷாநவாஸின் திருமணச் செலவுக்காக மஸ்தான், கடனாகக் கொடுத்த பணத்தை மருமகன் இம்ரான் பாஷாவிடம் கேட்டிருக்கிறார். பணத்தை திரும்பக் கொடுக்க விரும்பாத இம்ரான் பாஷா, மஸ்தானைக் கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவருடைய உறவினர்கள் சுல்தான் அகமது மற்றும் அவரது  நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன், ஆகியோருடன் சேர்ந்து சம்பவத்தன்று ஃபைனான்ஸியர் ஒருவரிடம் பணம் வாங்கித் தருவதாகக் கூறி மஸ்தானைக் காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது மஸ்தானின் காரை இம்ரான் பாஷா ஓட்டியிருக்கிறார். அந்தக் காரில் தமீம், நஷீர் ஆகியோர் சென்றிருக்கிறார்கள். மஸ்தான் சென்ற காரைப் பின்தொடர்ந்து மற்றொரு சொகுசுக் காரும் சென்றிருக்கிறது. அதில் தௌபிக் அகமதுவும் லோகேஸ்வரனும் வந்திருக்கிறார்கள். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய இம்ரான் பாஷா, மஸ்தானின் காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்த நஷீருக்கும் தமீமுக்கும் கண்ணால் சைகை கொடுத்திருக்க உடனே நஷீர், மஸ்தானின் கைகளைப் பின்புறமாக பிடித்திருக்கிறான். அடுத்து மஸ்தானின் வாய், மூக்கை சுல்தான் பிடித்து அவரை மூச்சுவிடாமல் அழுத்தியிருக்கிறான். அப்போது மற்றொரு காரில் வந்த தௌபிக், லோகேஸ்வர் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்களும் சேர்ந்து மஸ்தான் சத்தம் போடமிலிருக்க கைக்குட்டையை அவர் வாய்க்குள் திணித்திருக்கிறார்கள். அதனால் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்.

மஸ்தான் இறந்ததும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததைப் போல நடித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து நபருடன் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்திருக்கிறோம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...