முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈஷா மையம் சென்ற பெண் பிரேதமாக மீட்பு, கொலையா? தற்கொலையா? விசாரணை

ஈஷா யோகா மையம் சென்ற சுப ஸ்ரீ என்ற பெண்  கிணற்றில் சடலமாக மீட்பு, காவல்துறையினர் தீவிர விசாரணை,

ஈஷா யோகா மைம் நடத்திய பயிற்சிக்குச் சென்று மாயமான பெண் 14 நாள்களுக்குப் பின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பழனிகுமார். பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் அவரது மனைவி சுபஶ்ரீயும் (வயது 34) ம் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். 


அவர்களுக்கு ஒரு பெண்  குழந்தையுமுள்ளது., கடந்த நான்காண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ சைலன்ஸ் ?... என்கிற யோகா பயிற்சியை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் மேற்கொண்டுள்ளார். மேலும் 


அதைத்தொடர்ந்து மற்றொரு பயிற்சிக்காக டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி கோயமுத்தூர்  ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார். அப்போது அவரது கணவர் காலை 6 மணியளவில் அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.





டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முடிந்த நிலையில் அவரை மீண்டும் அழைத்து செல்ல அவரது கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்துக்கு  அதிகாலை 6 மணிக்கே வந்து காத்திருந்தவர் முற்பகல் 11 மணியாகியும் சுபஶ்ரீ வராத நிலையில், அவரது செல்லுலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவருக்கு அழைப்பு செல்லாத நிலையில்  ஈஷா யோகா மையத்தினர் காலையிலேயே பயிற்சியை அனைவரும்  முடிந்துவிட்டுச் சென்று  விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சரி பார்த்தபோது காலையிலேயே ஈசா யோகா மையத்தின் மற்றொரு கேட் வழியே வெளியேறிய சுபஶ்ரீ, வாடகை காரில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்குச் சென்ற தகவல் தெரிந்தது.வேறொரு எண்ணிலிருந்து தனக்கு வந்த அழைப்பை  பழனிக்குமார் தொடர்பு கொண்டு கேட்டபோது, “என் கணவரிடம் பேச வேண்டுமென பெண் ஒருவர் சொல்லிவிட்டு, அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறி சென்றுவிட்டார்” என அந்த எண்ணில் அப்போது பேசிய நபர் கூறியுள்ளார் என தகவல் கூறப்படும் நிலையில் .

அதன் பின்னர் சுபஶ்ரீயை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பழனிக்குமார், மனைவி சுபஶ்ரீ மாயமானது குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காணொளிக் காட்சிகளை வைத்து காவல்துறையில் விசாரணையை தொடங்கினர்.  பயிற்சியின் போது கையில் செல்போன் மற்றும் உடமைகளுடன் சென்றிருந்த சுபஶ்ரீ, பயிற்சிக்கு பின் வெளியே வரும் போது கையில் எதுவுமில்லாமல் வெள்ளை நிரத்தில் துறவி போல உடை அணிந்து காணப்பட்டார்.

மேலும், அவர் சாலையில் ஓடுவது போலிருக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியதற்கிடையில், சுபஶ்ரீயை கண்டுபிடிக்க. ஆறு காவல்துறை ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையும் அமைககப்பட்டது.

அவரது புகைப்படம் அனைத்துப் பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டது.    

ஈசா யோகா மையத்தின் பயிற்சிக்குச் சென்று மாயமான நிலையில் 14 நாள்களுக்கு பிறகு  மாயமான பெண் சுபஸ்ரீ, நேற்று காலை செம்மேடு காந்திநகர் அருகிலுள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் அந்த உடலை மீட்டனர். இறந்தது சுபஸ்ரீ தான் என அவரது கணவர் மோதிரம் மற்றும் ஈசாவின் அடையாளம் அவரது கையில் அணிந்திருந்ததை வைத்து உறுதிப்படுத்தினார். சுபஸ்ரீயின் உடலை  அங்கிருந்து மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுபஸ்ரீ தற்கொலையா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ?என்ற தெரியாத நிலையில் கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வகுப்பிற்குச் சென்ற பெண் காணாமல் போனது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , வழக்கு விசாரணையில் உள்ளதால் சில தகவல்களை வெளிப்படையாகக் கூற முடியாதெனவும் சனிக்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில்

கோயமுத்தூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது.. மிகவும் பலம் பொருந்திய நபராக கடந்த பத்து வருடத்தில் மாறிப்போன ஜாவா ஜக்கி என்ற ஜக்கி வாசுதேவ் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த எல்லாவற்றிலும் ஆசைப்பட்ட துறவி?  இந்த நிகழ்வு அரசியல் தலையீடு இன்றி நடந்து உண்மை வெளிவந்தால் தமிழக அரசுக்கும் ,காவல்துறைக்கும் நற்பெயர் வரும் தற்போது தமிழகத்தில் போலிச் சாமியார்களின் நடவடிக்கைகள் பல வகையில் புதிது புதிதாக. வெளிவரும் நிலை உள்ளது. இது  உண்மையான ஆன்மீக வாதிகளை கவலை கொள்ள வைக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...