முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை விமர்சித்தாரென அவரது மகள் கருத்து

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை விமர்சித்தாரென அவரது மகள் அனிதா போஸ் பிஃபாஃப்


ஒரு தனியார்‌ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஜனவரி மாதம் 23 ஆம் தேதியன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களைப் போற்ற பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டதற்காக வலதுசாரி அமைப்பை அவர் பாராட்டியதுடன் அவர் சில விஷயம் குறித்து  சாடினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126 வது பிறந்தநாளை கொல்கத்தாவிலுள்ள ஷஹீத் மினார் எனுமிடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் அதன் சர்சங்க சாலக் மோகன் பகவத் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். அதுகுறித்து குறிப்பிட்டவர், "என் தந்தை ஒரு பக்தியுள்ள ஹிந்துவாக இருந்தாலும், எல்லா மதங்களையும் மதித்து, அனைவரும் ஒன்றாக வாழ முடியும் என நம்பியவர். ஆர்எஸ்எஸ் அதை நம்புகிறதென்று நான் நினைக்கவில்லை, ”என அவர் கூறினார். “ஆர்எஸ்எஸ் அமைப்பு என் தந்தை நேதாஜியின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், அது இந்தியாவுக்கு நல்லது. நேதாஜி மதச்சார்பின்மையை நம்பினார், ஆர்எஸ்எஸ் இந்து தேசியவாதக் கருத்துக்களை முன்வைக்க விரும்பினால், அது நேதாஜியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாது. அதற்கு நேதாஜி பயன்படுத்தப்பட்டால் நான் பாராட்ட மாட்டேன்,” எனக் கூறினார். மேலும் 


“நிச்சயமாக அவர்கள் நேதாஜிக்கு வெறும் உதட்டளவில் பேசவில்லை என்று நினைக்கிறேன். அவருடைய 126 வது பிறந்தநாளை அவர்கள் கொண்டாடுவதை நான் மதிக்கிறேன். இந்தியத் துணைக்கண்டத்தின் நன்மைகளுக்கு, நேதாஜியின் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும்,” என தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறினார் மேலும்  கூற்றுகளுக்கு பதிலளித்தார் மற்றும் நேதாஜி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை விமர்சித்தார் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்றும் கூறினார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவம் துவங்கிய பின்னர், அது வளர்ச்சி கண்ட நிலையில்    ஜப்பானிலிருந்து ஜெர்மனிக்குச் சென்றபோது விமான விபத்தில் ஜெர்மனியில் இறந்து போனார் என்பது தான்  பலருக்கும் தெரியும். அவர் மரணத்தில் என்ன மர்மம் இருக்கிறது ? என்பது குறித்து அரசும் தற்போது ஆய்வுகள் நடத்தும் நிலையில், அப்போதய காலத்தில் நேதாஜி ஒரு ஜப்பானியப் பெண்ணை மணந்தார்.


அந்தப் பெண்ணுக்கும் நேதாஜிக்கும் ஒரு மகள் பிறந்தார். அவர் தான் அனிதா போஸ் பிஃபாஃப் ஆவார், இந்தியாவில் அப்போது ஒரிசா என்றும் தற்போது  ஒடிசா  மாநிலத்திலுள்ள கட்டாக்கில், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  23 ஆம் நாள், வங்காளத்தின் , ஹிந்துக் குடும்பத்தில், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். அவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்காள மன்னர்களின் சேனாதிபதியாக அதாவது  படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியாகும்


அவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவருக்கு 8 ஆண் பிள்ளைகளும், 6 பெண் பிள்ளைகளும் கொண்ட குடும்பத்தில், ஒன்பதாவதாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். தந்தை ஜானகிநாத் போஸ்,தாயார் பிரபாவதி தேவி, மனைவி எமிலி செங்கல், மகள் அனிதா போஸ் ஆவார்  1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியன்று தைவான் நாட்டில்  விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970 ஆம் ஆண்டில்  இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து வந்து 1985 ஆம் ஆண்டில் இறந்து விட்டதாகவும் பலவேறு வித கருத்துக்களும் .


1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14. ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை எந்தவிதமான  விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்த நாட்டு அரசு தெரிவித்திருப்பது, நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டிய நிலையில். இந்திய அரசால் நியமிக்கப்பட்டு அதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. இந்த நிலையில் தற்போது நாளை அவரது பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அதை முன்னெடுத்து  தற்போது நடந்த  ஒரு விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவரும் வீராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் தலைவருமான முன்னால் மத்திய சட்ட அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி  பேசிய போது "ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரி ஹிட்லர். இத்தாலியில் ஒரு சர்வாதிகாரி முசோலினி இந்தியாவில் பாஜக வில் இருக்கிறவர்கள்  அத்தனை பேரும் ஹிட்லர், முசோலினியைப்  போலவே இருக்கிறார்கள்.நான் ஜனசங்கம் மூலம் அரசியலில் நுழைந்தேன், நானாஜி தேஷ்முக் மற்றும் தத்தோபந்த் தெங்கடி ஆகியோரால் நான் அரசியலில் வளர்ந்தேன். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் மாதவராவ் முலே என்னைப் பதவியில் உயர்த்தினார். ஏபிவி மற்றும் நரேந்திர மோடியால் பாஜக தற்போது பரப்பும் இந்த சித்தாந்த பாரம்பரியத்தை நான் கைவிட மாட்டேன்". எனக் குறிப்பிட்டார் குறிப்பாக டாக்டர் மோகன் பகவத் உடன் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி ராஜ்கோட்டில் நேற்று காலை ஹிந்து தர்ம ஆச்சார்யா சபாவிலிருக்கும் போது, ​​இருவரும் சந்தித்துப்  பேசினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த