முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈரோடு கிழக்கு இடைக்காலத் தேர்தல் ஒரு முதல் நிலவரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் நேற்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது.  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 26 ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாமென இடைக்காலப் பொதுச்செயலாளராக கூறிவரும் எடப்பாடி கே பழனிச்சாமி  அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு  இடைத் தேர்தல்  ஒரு முதல் நிலவரம் 


காங்கிரஸ் கட்சியில் யார் வேட்பாளர்  என்பதைக் குறித்து திமுக ஸ்டாராங்காக முடிவெடுத்த பிறகு அதை தட்ட முடியாமல் ஏற்க வேண்டியாதாகிவிட்டது  வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிலை,  இடைக்காலத் தேர்தலை திமுக அரசின் கெளரவப் பிரச்சினையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்ப்பதன் விளைவிது.

தங்கள் அணி வெற்றி பெறுவதற்காக திமுக கையாளும் முதல் அஸ்திரம்  இது.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனே தனக்கு 74 வயதாகி உடல் நலனும் சரியில்லை. பல உடல் நலப் பிரச்சினைகள் இருப்பதால் நான் நிற்கவில்லை. என் இரண்டாவது மகனுக்கு வாய்ப்பு தாருங்களெனக் கேட்ட நிலையில், தற்போது அவர் வலுக்கட்டாயமாக களமிறக்கப்பட்டுள்ளார்.


மிகவும் பரிச்சயமான, துணிச்சலான, அதிரடிப் பேச்சுக்கு சொந்தக்காரர், ஈரோடு கிழக்குத் தொகுதியை எடுத்துக் கொண்டால், அங்கு மக்கள் ராஜன் என்ற காங்கிரஸ்காரர் தொகுதி மக்களிடம் நன்கு பெயரெடுத்த களச் செயற்பாட்டாளர் எனவும் பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அயராது பணியாற்றி தொடர்ந்து வாய்ப்புக்காக முட்டி மோதி வருகிறார். நியாயப்படி அரசியலே வேண்டாம் என விலகி தொழில் செய்து கொண்டிருந்த இளைய மகனை வம்படியாக இழுத்து வந்து சீட் கேட்ட ஈ.வி.கே.எஸ்,இளங்கோவன் இளைஞரான மக்கள் ராஜனுக்கு தாருங்கள் எனக் கேட்டிருந்தால், அது காங்கிரஸின் எதிர்காலத்திற்கே சிறப்பாக இருக்கும்.

எந்த தொகுதி மக்களுக்கும் ஒரு நல்ல களச் செயற்பாட்டாளர் தான் தேவைப்படுவாரே அன்றி, வெற்று பேச்சு வீணரல்ல! உண்மையில் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் கடந்து யதார்தத்தை தரிசிக்கும் மனநிலையில் அரசியல் தலைமைகளும் இல்லை. நல்ல தரமான மீடியாக்களும் இல்லை! நிச்சயமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு பளபளக்கும் அட்டைக் கத்தி தானே அன்றி, செயல் வீரல்ல எனற வாதம் புறம்தள்ள முடியாது.

இந்த இடைத் தேர்தலுக்கு திமுக கடும்  முஸ்தீபுகளைச் செய்யத் தொடங்கிவிட்டது. 33 பெருந்தலைகளைக் கொண்ட ஏகபப்ட்ட அமைச்சர்களை உள்ளடக்கிய – தேர்தல் பணிக்குழுவும் அறிவிக்கப்பட்ட நிலை,

கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரமும், அதைத் தொடர்ந்து பள்ளிக் கூடத்தை தீவைத்து எரித்து, அதை தலித் இளைஞர்கள் மீது திசை திருப்பிய விவகாரம், வேங்கை வயல் குடி நீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் முத்துராஜா எதிர் ஆதிதிராவிட மோதல் போன்ற மக்கள் இதயங்களை உலுக்கும் எந்த விவகாரத்திலும் நீதியை நிலை நாட்ட, குற்றவாளிகளை தண்டிக்க களம் காணாத – குறைந்தபட்ச அக்கறை கூட இல்லையே என்ற விவாதமும் மக்கள் மத்தியில் வருகிறது, தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் ரோடு, ரோடாக வலம் வர உள்ளனர். 

தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திக்க தயாராகும் பலருக்கும் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே கிடையாதெனவும்,

ஏழையின் சொல் அம்பலத்தில் ஏறாது நிலை தான். ஊடகங்களுக்கு இனி நல்ல தீனி கிடைக்கும். தேர்தல் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை, நிதர்சனங்களை நினைத்துப் பார்க்க யாருக்கு இனி நேரம் இருக்கப் போகிறது பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...