முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈரோடு கிழக்கு இடைக்காலத் தேர்தல் ஒரு முதல் நிலவரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் நேற்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது.  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 26 ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாமென இடைக்காலப் பொதுச்செயலாளராக கூறிவரும் எடப்பாடி கே பழனிச்சாமி  அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு  இடைத் தேர்தல்  ஒரு முதல் நிலவரம் 


காங்கிரஸ் கட்சியில் யார் வேட்பாளர்  என்பதைக் குறித்து திமுக ஸ்டாராங்காக முடிவெடுத்த பிறகு அதை தட்ட முடியாமல் ஏற்க வேண்டியாதாகிவிட்டது  வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிலை,  இடைக்காலத் தேர்தலை திமுக அரசின் கெளரவப் பிரச்சினையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்ப்பதன் விளைவிது.

தங்கள் அணி வெற்றி பெறுவதற்காக திமுக கையாளும் முதல் அஸ்திரம்  இது.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனே தனக்கு 74 வயதாகி உடல் நலனும் சரியில்லை. பல உடல் நலப் பிரச்சினைகள் இருப்பதால் நான் நிற்கவில்லை. என் இரண்டாவது மகனுக்கு வாய்ப்பு தாருங்களெனக் கேட்ட நிலையில், தற்போது அவர் வலுக்கட்டாயமாக களமிறக்கப்பட்டுள்ளார்.


மிகவும் பரிச்சயமான, துணிச்சலான, அதிரடிப் பேச்சுக்கு சொந்தக்காரர், ஈரோடு கிழக்குத் தொகுதியை எடுத்துக் கொண்டால், அங்கு மக்கள் ராஜன் என்ற காங்கிரஸ்காரர் தொகுதி மக்களிடம் நன்கு பெயரெடுத்த களச் செயற்பாட்டாளர் எனவும் பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அயராது பணியாற்றி தொடர்ந்து வாய்ப்புக்காக முட்டி மோதி வருகிறார். நியாயப்படி அரசியலே வேண்டாம் என விலகி தொழில் செய்து கொண்டிருந்த இளைய மகனை வம்படியாக இழுத்து வந்து சீட் கேட்ட ஈ.வி.கே.எஸ்,இளங்கோவன் இளைஞரான மக்கள் ராஜனுக்கு தாருங்கள் எனக் கேட்டிருந்தால், அது காங்கிரஸின் எதிர்காலத்திற்கே சிறப்பாக இருக்கும்.

எந்த தொகுதி மக்களுக்கும் ஒரு நல்ல களச் செயற்பாட்டாளர் தான் தேவைப்படுவாரே அன்றி, வெற்று பேச்சு வீணரல்ல! உண்மையில் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் கடந்து யதார்தத்தை தரிசிக்கும் மனநிலையில் அரசியல் தலைமைகளும் இல்லை. நல்ல தரமான மீடியாக்களும் இல்லை! நிச்சயமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு பளபளக்கும் அட்டைக் கத்தி தானே அன்றி, செயல் வீரல்ல எனற வாதம் புறம்தள்ள முடியாது.

இந்த இடைத் தேர்தலுக்கு திமுக கடும்  முஸ்தீபுகளைச் செய்யத் தொடங்கிவிட்டது. 33 பெருந்தலைகளைக் கொண்ட ஏகபப்ட்ட அமைச்சர்களை உள்ளடக்கிய – தேர்தல் பணிக்குழுவும் அறிவிக்கப்பட்ட நிலை,

கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரமும், அதைத் தொடர்ந்து பள்ளிக் கூடத்தை தீவைத்து எரித்து, அதை தலித் இளைஞர்கள் மீது திசை திருப்பிய விவகாரம், வேங்கை வயல் குடி நீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் முத்துராஜா எதிர் ஆதிதிராவிட மோதல் போன்ற மக்கள் இதயங்களை உலுக்கும் எந்த விவகாரத்திலும் நீதியை நிலை நாட்ட, குற்றவாளிகளை தண்டிக்க களம் காணாத – குறைந்தபட்ச அக்கறை கூட இல்லையே என்ற விவாதமும் மக்கள் மத்தியில் வருகிறது, தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் ரோடு, ரோடாக வலம் வர உள்ளனர். 

தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திக்க தயாராகும் பலருக்கும் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே கிடையாதெனவும்,

ஏழையின் சொல் அம்பலத்தில் ஏறாது நிலை தான். ஊடகங்களுக்கு இனி நல்ல தீனி கிடைக்கும். தேர்தல் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை, நிதர்சனங்களை நினைத்துப் பார்க்க யாருக்கு இனி நேரம் இருக்கப் போகிறது பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த