முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அலங்காநல்லூர், சிராவயல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது

 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்' எனும் மரபுப் பாடலுக்கு 


புலவர் நச்சினார்க்கினியர் உரையில்: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும்.





தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில்  கடைசி அடையாளமாக தற்போது  அடையாளம் காணப்படும் ஜல்லிக்கட்டு, அல்லது ஏறுதழுவல், மற்றும் மஞ்சுவிரட்டு  மட்டுமே மிஞ்சியும் ஏஞ்சியுமுள்ளது. வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தில் மதுரை மாவட்டம் "அலங்காநல்லூரிலும், சிவகங்கை மாவட்டம் சிறாவயலிலும் நடைபெ,றும் ஜல்லிக்கட்டே.   







 "அலங்காநல்லூர் மதுரை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சி, முல்லை, மருத நிலங்கள் ஒரு சேர சங்கமிக்கும் இடம் "இடுக்கியில் இருந்து உற்பத்தியகும்  முல்லைஆறும்  பேரியாறும் இணைந்து முல்லைபேரியாறானது அலங்கை நாட்டிலே உற்பத்தி ஆகும் சாத்தியாரும் அலங்காநல்லூர் பகுதியில்  வளப்படுத்தி அப் பகுதியை பச்சைப் பசுமையாகவா வைத்துள்ளது,


இவ்வாறான பல பெருமைகளை கொண்ட "அலங்கை நாட்டின் தலைநகரான அலங்காநல்லூர் வரலாற்டில் மேலூர் அருகில் "பால்குடி" யைச் சேர்ந்த வலையர் சமூகத்தவர்கள் புலம் பெயர்ந்து இன்றைய அலங்காநல்லூர் அன்றைய "வலசை"(வலையர் சமுதாயத்தினர் மட்டும் வாழும் பகுதி) என்னும் ஊரின் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள ஓர் தெப்பக்குளத்தைச் சுற்றிக் குடியேறி அந்த பகுதியில் குடியிருப்புகளை அமைத்து கால் நடைகளை வளர்த்தும்  அப்பகுதிகளில் வேட்டையாடியும் பிற்காலங்களில்  விவசாயமும் செய்த அந்தக்  குழுவினரே" தற்போது "கெங்கை வலையர் பங்காளிகள்" என்று அழைக்கப்படுகின்றனர்.

அந்த  கெங்கை வலையர்களுக்கு இடம் கொடுத்து அவர்கள் வம்சம் தலைக்க பெண்ணும் கொடுத்தவர்கள் சம்பந்த வழி "வலசை வலையர்கள் ஆதலால்  தான் வலசை கிராமத்தை அலங்காநல்லூரின் "தாய் கிராமம்" என்கின்றனர்.


முன்பு வரை "அலங்காநல்லூரி"ன் பெயரானது "அலங்கெங்கைநல்லூர்" என்றிருந்தது. அதாவது "கெங்கை வலையர்களால்" உருவாக்கப்பட்ட ஊர் "அலங்கெங்கைநல்லூர்"  பிற்காலத்தில் இது மருவி "அலங்காநல்லூர்" என்றானது.

முதலில் வலையர் சமுதாயம் மட்டுமே வாழ்ந்த இவ்வூரில் பிறகு மதுரை விஜயநகர ஆட்சியில் குடிவந்த "நாயக்கர்" மற்றும் பலகுடி மக்கள்  எனக் குடிவந்தனர். இவ்வாறே சிறு கிராமமாக இருந்து இன்று பேரூராக காட்சியாகின்றது...




"அலங்காநல்லூர் திருமலை நாயக்கர்" ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டானது இவ்வூரில் நடைபெற்றது என்று ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.  அலங்காநல்லூரை உருவாக்கிய "கெங்கை வலையர் பங்காளிகளில்" மூத்த வாரிசு மற்றும் "கெங்கை வலையர் உறவின்முறை" தலைமையாக யார் செயல்படுகின்றார்களோ அவருக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் மரியாதை பரிவட்டம் கட்டப்படும்.



வேறு யாருக்கும் மரியாதை கிடையாது. பிறகு ஜல்லிக்கட்டு ஆரம்பித்த பிறகு 'முதல் மாடு' "அலங்காநல்லூர் கிராம மாடு" 

 இரண்டாவது மாடு ஊரை உருவாக்கியவர்களான "கெங்கை வலையர்களின்" மாடும்,

மூன்றாவதாக தாய் கிராமம் "வலசை" கிராம மாடு விடப்படும்.

இந்த மூன்று மாடுகளுக்கு மட்டுமே மரியாதை.



இம்மூன்று மாடும் விடப்பட்டவுடன் ஜல்லிக்கட்டு தொடங்கி சிறப்பாக   ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை, இந்த ஆண்டு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடக்கி வைத்தார் காலை 7. 30 மணிக்குத் தொடங்கியதில் நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி திரைப்பட நடிகர் சூரி எனப் பலரும் கூடிக் கண்டுகளித்தனர்.           


  இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அலங்காநல்லூருக்கு வந்தனர். நேற்றைய போட்டியில் கலந்து கொள்ள 1200 காளைகளுக்கும் காளைகளைப் பிடிக்க 300 வீரர்கள் வரை அனுமதிக்கப்பட்டார்கள். நான்காம் சுற்றின் முடிவில், 275 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இதுவரை 13 காளைகளை பிடித்த அபி சித்தர் முதலிடத்தில் இருந்தார், இரண்டாவது இடத்தில் 9 காளைகளை பிடித்த அஜய்யும், முன்றாவது இடத்தில் 7 காளைகளை பிடித்த கோபாலகிருஷ்ணனும், ரஞ்சித்தும் இருந்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் , 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழுக்கள் தயாராக இருந்தனர்.     ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்தது. பாதுகாப்புப் பணியில் 2000 காவலர்கள் வரை ஈடுபட்டனர்.

வெற்றி பெறும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், மிதிவண்டி , கட்டில், அலமாரி , சமையல் அரவை இயந்திரங்கள்  உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல், மற்றும்  இரண்டு, மூன்றாமிடம் பிடித்த வீரர்களில் முதலிடத்தில் அபிசித்தன் - பூவந்தியும், இரண்டாமிடத்தில்
அஜய் ஏனாதியும்,
மூன்றாமிடத்தில் ரஞ்சித் - அலங்காநல்லூர். ஆகியோர்களாவர்.               அதேபோல் 1,000 காளைகள் பங்கேற்ற சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர், 2 காளைகள் உயிரிழப்புடன் 131 பேர் காயமடைந்தனர்.


 சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி நேற்று காலை அக்கிராமத்தில் அருள்மிகு பெரியநாயகி அம்மன், அருள்மிகு தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து கிராம மக்கள் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்து அங்கிருந்த மாடுகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்த பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவில் காளை அவிழ்த்துவிட்டதற்குப் பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

தொழுவிலிருந்து 280 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 120 மாடு பிடிவீரர்கள் பங்கற்றனர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு,தகர அலமாரி, கட்டில், அண்டா, குத்துவிளக்கு,சமையல் அரவை இயந்திரம், மின்சார அடுப்பு, பட்டுச்சேலை போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.


அனுமதிக்கப்படாத காளைகளை 

முன்னதாக சிராயவல் பொட்டல், கம்பனூர் பரணிக் கண்மாய், கும்மங்குடி பொட்டல் உள்ளிட்ட  இடங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, காரைக்குடி, திருப்புத்தூர், அறந்தாங்கி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

மாடுகள் முட்டியதில் மதுரை மாவட்டம் சுக்காம்பட்டியைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 52) உயிரிழந்தார். மேலும் 131 பேர் காயமடைந்தனர். இதில் 31 பேர் உயர் சிகிச்சைக்காக திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை, காரைக்குடி அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றவர்கள் மஞ்சுவிரட்டு பொட்டலில் உள்ள மருத்துவ முகாமிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திருப்பத்தூர் சமத்துவபுரம் அருகே பேருந்து மோதியதில் மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளை ஒன்று உயிரிழந்தது. அதேபோல் நாச்சியாபுரம் அருகே கிணற்றில் விழுந்து ஒரு காளையும் உயிரிழந்தது.அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில்

 நடைபெற்ற ஜல்லிக்கட்டு  போட்டியில் கலந்துகொண்டு சிறிய லாரியில் திரும்பிய போது கோர சம்பவம்

திருவரங்குளம் அருகே அரசு பேருந்தில் அசோக் லேலண்ட் வாகனம்  மோதியதில் மணப்பாறையை சேர்ந்த 3 ஜல்லிக்கட்டு காளைகளும் மற்றும் நான்கு நபர்களும் உயிரிழந்தனர் 3 நபர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த