முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வன்னியர்கள் தனி இடஒதுக்கீடு குறித்த ஒரு பொதுவான பார்வை.

வன்னியர்கள் 10.5சதவீதம்


உள்ஒதுக்கீடு பெறப்பட்ட வழிமுறை.



1989 ஆம் ஆண்டில் 108 ஜாதிகளை இணைத்து 20 சதவீதம் MBC இட ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில்   அப்போது முதல்வர் டாக்டர்  கலைஞர் மு.கருணாநிதி யுடன்  வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில்  கையெழுத்திட்டு வாங்கிக் கொடுத்தவர் சி என் ஆர்


பிறகு அந்த 20 சதவீதம் எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னிய சமுதாயத்துக்கு  சரியான பங்கீடு கிடைக்கவில்லை என்று 1990 ஆம் ஆண்டிலிருந்து  லிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஆட்சியாளர்களைக் கேட்டு அது நடக்கவில்லை என்றதும் 2009 ஆம் ஆண்டில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎன்ஆர் 15 சதவீதம் உள் ஒதுக்கீடு 20 சதவீதத்திலிருந்து கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.  2012 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்றார்.அந்த வெற்றியை நடைமுறைப்படுத்த. 


2010 ஆம் ஆண்டில் சிஎன்ஆர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  W.P. No. 14025 of 2010. 


 பலமுறை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இறுதியாக வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.  2012 ஆம் ஆண்டில் உள்ஒதுகீடு செயல்படுத்த நீதிமன்ற ஆணையும் பெற்றார். 





அந்த நீதிமன்ற ஆணையின் படி, 2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அரசாணை எண் GO MS No.35 பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையைக் கேட்டு  வெளியிட்டது.  



 2012. அம் அண்டில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் இதற்கு முன் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம்  உள்ஒதுக்கீடும் அருந்ததியர்களுக்கு 3.0 சதவீதம் உள் ஒதுக்கீடும் கொடுத்த வழிமுறை தரவுகளின் அடிப்படையில் 10.5 சதவீதம் பரிந்துரை செய்தது.



அதைச் செயல்படுத்தாத தமிழ்நாடு  அரசை எதிர்த்து சிஎன்ஆர் 2015 ஆம் ஆண்டில் நீதிமன்றம் சென்று முறையிட்டு 30 நாட்களுக்குள் செயல்படுத்துமாறு  சென்னை உயர்நீதிமன்றத்தில்  இறுதியானையைப் பெற்றார்.




2011 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை அதிமுக அரசுக்கு ஆதரவு கொடுத்தவர் சி என் ஆர். அந்த ஆதரவுக் காலத்தில் இத்தனை வழிமுறைகளையும் சட்ட போராட்டத்தில் மூலம் சிஎன்ஆர் அதிமுக அரசைச் செய்ய வைத்தார். பிறகு அன்றைய முதலமைச்சர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா  இறந்ததால் 10.5 சதவீதம்  உள் ஒதுக்கீடு கிடப்பில் போடப்பட்டது. பின்  எடப்பாடி கே.பழனிச்சாமி  மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு வன்னியர் பொதுச்சொத்து வாரியத்துக்கான 41 வது சட்டத்தை குடியரசுத்தலைவர்  கையெழுத்துடன் ஒப்புதல் பெற்று சட்டப் போராட்டத்தின் மூலம் சட்டமாக்கியவர் சிஎன்ஆர் 2019- அலாம் ஆண்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.  இராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு சி என் ஆர் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.





 பிறகு 2020 ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியில் மிகப்பெரிய உண்ணாவிரதப்  போராட்டத்தை சிஎன்ஆர் தலைமையில் நடத்தினார். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  1ஆம் தேதி மருத்துவர் ச் ராமதாஸ் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் அறிவித்தார்.  20 சதவீதம்  தனி ஒதுக்கீடு சாத்தியமில்லை என்றதும்  உள் ஒதுக்கிட வேண்டும் என்றார்.  





2021 ஆம் ஆண்டு 3 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசுக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் சி என் ஆர் வழக்குத் தொடுத்தார். 

பிப்ரவரி மாதம்  26 ஆம் தேதியில் 10.5 சதவீதம்  உள்இடஒதுக்கீடு அதிமுக அரசால் தேர்தல் அறிவிப்புக்கு முன் கொடுக்கப்பட்டது.பின்  திமுக ஆட்சியில் வந்ததும் 10.5 சதவீதம் நடைமுறைப்படுத்த சட்டத்தை சட்டமன்றத்தில் 2021-ஆம் ஆண்டில்  நிறைவேற்றியது.

சகோதர சமுதாயத்தின் தவறான புரிதலால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மார்ச்சில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஏழு காரணங்களைச் சொல்லி தடையுத்தரவு பிறப்பித்து.

10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்குத் தடை நீதிமன்றம்_கேள்வி.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடைவிதித்த 184 பக்கத் தீர்ப்பில் கேட்ட கேள்வி, ஏன் CN.Ramamurthy Vs Tamilmadu govt 2015 உள்ஒதுக்கீட்டு ஆவணத்தை இடஒதுக்கீடு கொடுத்தபோது மறைத்தீர்கள் எனக் கேட்டுள்ளது. அதனால் 10.5 சதவீதம் கொடுத்தது உள்நோக்கத்திற்காக என்றது.

அதன் பிறகு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வாதிட்டது. அந்த வாதத்தில் சிஎன்ஆர் கொடுத்த சட்ட ஆவணங்களை வாதிட்டு அதனுடன் பொதுவான வாதங்களை அதிகமாக வைத்தது.

பிறகு உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பில்,  மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை தடை உத்தரவுக்காக சொன்ன ஏழு காரணங்களில் ஆறு காரணங்கள் தவறென்று உச்சநீதிமன்றம் சொல்லி நீக்கியது. ஒரே ஒரு காரணம் மட்டும் சரி என்றும் அந்த காரணத்தின் சரியான தரவுகள் ஏதாவது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  சமுதாய பயன்படுத்த சரியான தரவுகளை வைத்து மீண்டும் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுவரை உள் ஒதுக்கீடு செயல்படுத்தப்பட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. 

இதன் பிறகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  சிஎன்ஆரிடம் 10.5 சதவீதத்துக்கான அனைத்து சட்டப் போராட்ட ஆவணங்களையும் மேலும் உரிய தரவுகளையும் ஒரு புத்தகமாகக் கேட்டிருந்தார். 

அனைத்து சட்ட போராட்ட ஆவணங்களையும் தரவுகளையும் ஒரு புத்தகமாக தமிழ்நாடு  முதல்வரிடம் அக்டோபர் மாதம் 2022- ஆம் ஆண்டில் 10.5 சதவீதம்  மீண்டும் நடைமுறைப்படுத்த வழங்கினார். 

இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் உரிய தரவுகளை சரி செய்து 10.5 சதவீதம்   நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

சிஎன்ஆர் சமூகநீதிபடி அனைத்து சமுதாயமும் பாதிக்காத வண்ணம் சட்டப் போராட்டத்தை கையில் எடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து  2010 ஆமத ஆண்டிலிருந்து இன்றுவரை போராடுகிறார். 

 சகோதர சமுதாயம் இந்த உண்மையான போராட்டத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றும்  அனைத்து சகோதர சமுதாயத்துடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்பது தான் சிஎன்ஆரின்  தலையாய கொள்கையாகும். 

அதனால் தான் இன்று வரை சிஎன்ஆர் அறிவாயுதம் ஏந்திப் போராடுகிறார்.என் கருத்தை முன் வைத்த நிலையில்  இவர்களைப் போலவே மற்ற பெரிய சமுதாயத்தில் உள்ள அனைவரும் தனி இடஒதுக்கீட கேட்டால் என்ன நிலைமை வரும் என்பதற்கு அவர்களே பதில் கூறினால் சரியாக இருக்கும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பீகாரில் துவங்கியது போல தமீழ் நாட்டில் துவங்க வேண்டும் என்பதே இங்குள்ள பொதுநீதி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த