முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதானிக்கு நெருக்கடி. சௌகிதாருக்குத் தலைவலி, மக்கள் பணம் ஸ்வாகா!. .

அதானிக்கு நெருக்கடி.‌ சௌகிதாருக்குத்  தலைவலி.  மக்கள் பணம் ஸ்வாகா!. 


  அதானி குழுமத்தின் பொருளாதாரக் குற்றங்களை  விசாரணை செய்து நாட்டுக்கும், மக்களுக்கும் தீங்கிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவும், மிகச் சாதாரண நபர் இதில் தவறு செய்திருந்தால்  அவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு கைது செய்து வழக்கு பதிவு செய்திருப்பர்கள் என்பதே ஏல்லோரும் அறிந்த உண்மை  உண்மை.‌  பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில்   அதானி குழுமம் பாதுக்காப்புக்கென்று ஏதேனும் தனி சட்டம் உள்ளதா என பல அரசியல் தலைவர்களும்,விமர்சகர்களும் கேள்வியை முன்வைக்கும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் எழும் சந்தேகங்கள் பல,

பங்கு மார்க்கெட் ஒரு வியாபார நிலையில்லா விளையாட்டு 


 நிறுவனம் தரமாக லாபமாக நடந்தால் அதன் பங்குகளைவைத்து நடத்திய விளையாட்டுகள் மறுவிளையாட்டுக்களால்  ஏற்படும் சரிவுகள் அனைத்தும் நிரந்தரமல்ல.   சமாளிக்க முடியும் .

அந்தச் சரிவுகளை எதிர்பார்த்துத் தான் யாருமே பங்குசய சந்தையில் விளையாடுவார்கள் , அந்த முன்னெச்சரிக்கையைச் செய்திருக்காவிட்டால் அது வியாபாரிகளின் சுய பொறுப்பு , அந்த வகையில் 

ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம். உலக அளவில் பொருளாதார சரிவு மற்றும் வளர்ச்சி மதிப்பீடு  அதன் இலக்கு,  அதானி நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தி 88 வினாக்களை முன் வைத்திருக்கிறது, அதற்கு அந்த நிறுவனம்.   பதிலும் சொல்லி இருக்கிறார்கள் .

அதில் சில 

அதானியின் நிறுவனங்களின் மதிப்பு 139.3 மடங்காக உயர்த்திக் காட்ட பட்டிருக்கிறது,  .

அவர்களது கடன்கள் சொத்துக்களை விட அதிகமாகிறது, .

பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது .அது சுமையாகும்,


பல ஊழியர்கள் மேல் வழக்குகள், குற்றசாட்டுகள், வரி ஏய்ப்பு, ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளன,

பொது நிறுவனத்தில் மக்களின் நிலைப்பாடு 25 சதம் பங்கில்லாமல், ஷெல் கம்பெனிகள்  மூலம்  அதானியே அதில் நிறைய பங்குகளை வைத்திருக்கிறார் .இது எதிர்கால தவறுகளுக்கு வழி  வகுக்கும், 

பல்வேறுவழிகளில் கிட்டத்தட்ட 74 சதவீதம்  பங்குகளை அதானியே வைத்திருக்கிறார், 

கேத்தன் பரேக் போன்ற பங்கு சந்தை மாயாவிகளை வைத்து மேனிப்புலேட்  செய்து தன்  பங்குகளின் விலையை உச்சத்தில் வைக்கிறார்,  . 

அதானியின் க்ரீன் எனர்ஜி பங்குகள் விவகாரம் செபி யால்  விசாரிக்கப்பட்டு பிரச்சனைகளைச் சந்தித்ததுள்ளது, .


அதற்கு அதானியின் நிறுவனம் 413 பக்கத்தில் பதில்களைக்  கொடுத்துள்ளது.அதன் சுருக்கம்  :

"எங்கள் நிறுவனம் எந்த பித்தலாட்டமும் செய்யவில்லை.ஆதாரமில்லாமல் நிறுவன ஊழியர்களை தவறாக சித்தரிப்பது உள்நோக்கம் கொண்டதைப்போலுள்ளது  .எங்கள்  நிறுவன மதிப்புகளை மிகப்பெரிய  6 ஆடிட்டர்கள் தான் தணிக்கை செய்கின்றனர் . அவர்கள் அறிக்கைப் படிதான் மதிப்புகள் முடிவு செய்யப்பட்டன . 

ஹிண்டன் பர்க் கொடுத்துள்ள விபரங்கள் எங்கும் சென்று தேடி  எடுக்கப்படவில்லை .அவர்கள் கொடுத்த 88 சங்கதிகளில் 65 நாங்களே எங்கள் ப்ரொபைல் விபரத்தில் கொடுத்துள்ளதுதான் .



இதுவரை யாருக்கும் -வரிகள் உட்பட -நாங்கள் பாக்கி வைத்திருக்கவில்லை .அதுவே எங்கள்  நிறுவனங்களின்  தரத்தைச் சொல்லும்.

பொருளாதார வல்லுனர்கள் வியாபார இழுப்புகள்  சொல்லும் தீர்ப்பு :

இந்த குற்றசாட்டுகள் சரியான நேரத்தில் அதானியின் புதிய எப்பிஓ வில்  வரும் நேரத்தில் வேண்டுமென்றே அதை சிதைக்கும் நோக்கத்தோடு வெளியிட்டுட்டிருப்பதாகத் தெரிகிறது .

யாருக்கும் எந்தவிதமான பாக்கியும் வைத்திருக்காததோடு 2016 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு  வரை அதானி குழும நிறுவனத்தின் வங்கி திருப்பிச் செலுத்தும் விகிதம் ஸ்திரமாக இருப்பதால் நிறுவனங்களின் நிலை அசைக்க முடியாதது .

எல் ஐ சி அதானி நிறுவனத்தில் முதலீடு  செய்த  முதலீட்டை எப்பொழுதோ திரும்ப பெற்றுவிட்டது . இப்பொழுதிருப்பது போனஸ்.         எல் ஐ சி  என்ற மாபெரும் நிறுவனமும் சரி அதானி எனும்  உலகப் பணக்காரரால் நிர்வகிக்கப்படும் இணை நிறுவனமும் அசையாது .

 உடனடி உதாரணமாக ஏற்கனவே பெரும் தொகையை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அரபு நிறுவனம் ஓன்று இந்த  விவகாரத்துக்குப்பின் மறுபடியும் பல ஆயிரம் கோடி நேற்று முதலீடு செய்திருக்கிறது 

அதன் பின்னர்  அதானியின் பங்குகள் 100 க்கு மேல் ஓவர் சப்ஸ்கிரைபாகி விட்டது .

இறுதியாக,  உலகத்தாருக்கு நியாயம் சொல்லும் ஹிடேன்பர்க்  நிறுவனம் தங்கள் அறிக்கைகள் பலமான ஆராச்சிக்குப்பிறகு வெளியிடப்படுவதாகவும் இதில் தாங்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவம் பெற்றவர்கள் என்று சொல்கிறது .


இதைச் சுட்டிக்காட்டிய ஒரு பொருளாதார நிபுணர்  

"  2017. ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தான் தலைமுறை தலைமுறையாக அனுபவம் வாய்ந்ததா ?  "  என்று கேட்டிருக்கிறார் .ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டால் சரிவைச் சந்திக்கும்

அதானி குழும நிறுவனங்களை நோக்கி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அடுத்தடுத்து வீசியிருக்கும் தகவல்கள் , இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களையும் கதிகலக்கியுள்ளது !

பாரதிய ஜனதா கட்சியின் கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் அதானியின் நிறுவனங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி மிகப்பெரியது, உலகின் முதல் பெரிய பணக்காரர் என்கிற இடத்தையும் கூடப் பிடித்துவிட்டார் அதானி.

இந்த நிலையில், 'பங்குச் சந்தையில் பலவிதமான முறைகேடுகளை நடத்தியதன் மூலமாகவே அதானி குழுமம்  உச்சபட்ச வளர்ச்சியை அடைந்துள்ளது. அரசாங்கத்திலிருக்கும் செல்வாக்கு காரணமாக, பங்குச் சந்தைகளை கண்காணிக்கும் செபி அமைப்பும், அதானியின் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது' என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளால் அதானி குழும நிறுவனங்கள் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான சரிவைச் சந்தித்ததனால் அதானியின் சொத்து மதிப்பு  சுமார் ரூ.1.8 லட்சம் கோடி அளவுக்குச் சரிந்தததையடுத்து உலகின்  பணக்காரர்கள் பட்டியலில் 3 -ஆம் இடத்திலிருந்தவர் 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டு பின் 11-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள தற்போது 15 ஐத் தொடும் நிலை உள்ளதாகத் தெரிகிறது.

 கௌதம் அதானியிண் நிறுவனம்  குறித்து தகவல் தந்த  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனம் தான் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம், கடந்த 24-ஆம் தேதி வெளியிட்ட 106 பக்க அறிக்கை தான் பங்குச் சந்தைகளையே உலுக்கியுள்ளது.

'அதானி குழும நிறுவனப் பங்குகளில் அதானி குடும்பத்தினர் தான் அதிகளவிலான பங்குகளை வைத்துள்ளனர். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனத்தில் 75 சதவிகிதப் பங்குகள் மட்டுமே அந்நிறுவனத்தின் புரமோட்டர்கள் வசம் இருந்திருக்க வேண்டும். 25 சதவிகிதம் பொது முதலீட்டாளர்களிடம் இருக்கவேண்டும்.

ஆனால், அதானி நிறுவனங்களில் எஃப்ஐஐ (வெளிநாட்டு முதலீடு) மூலமாக வெளியிலிருந்து செய்யப்பட்ட முதலீடும் அதானி குடும்பத்தினருக்குச் சொந்தமான மோசடி நிறுவனங்கள் மூலமாகவே செய்யப்பட்டிருக்கின்றதன் காரணமாக 75 சதவிகிதம் என்கிற அளவுக்கும் கூடுதலாக அதானி குடும்பத்தினர் வசம் பங்குகள் இருக்கின்றன. இது, 13- முதல் 16 சதவிகிதம் வரை கூடுதலாக இருக்கலாம் என ஹிண்டன்பர்க் அறிக்கை சொல்கிறது.

நிறுவனத்தின் முதன்மைப் பதவி17 ல் அதானி குடும்பத்தினரே இருக்கின்றனர். ஒரு பொதுக் கம்பெனி மாதிரி இல்லாமல் குடும்பக் கம்பெனி மாதிரி தான் அதானி நிறுவனங்கள் இருக்கின்றன. அதானி குழும நிறுவனங்கள் பெற்றிருக்கும் கடன், அவை சார்ந்த துறையின் சராசரி கடன் அளவைவிட கூடுதலாகவே இருக்கின்றன. இந்தக் கடன்களைத் திரும்பச் செலுத்தும் திறன் அந்த நிறுவனங்களுக்கு இல்லை.

அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அந்நிறுவனங்களின் தொழிலுக்குத் தொடர்பே இல்லாத அளவில் இருக்கிறது. பங்குச் சந்தையைப் பொருத்தவரை ஒரு நிறுவனத்தின் தொழில் வளர்ச்சியைப் பொறுத்துத் தான் பங்கு மதிப்பு நிர்ணயிக்கப்படும். ஆனால், தொழில் வளர்ச்சி பெரிதாக இல்லாத சூழலிலும் பங்கு மதிப்பு மட்டும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆக, இதில் ஏதோ மோசடி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்' இப்படி அடுக்கடுக்காக அந்த அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டுகளை வைக்கவே, அதானி நிறுவனப் பங்குகள் கடுமையான சரிவைத் தொடர்ந்து  சந்தித்து வருகின்றன.

அதானி குழுமம் மற்றும் அதற்காக அரசாங்கம் காட்டும் சலுகைகள் பற்றி யெல்லாம் இந்திய ஊடகங்களில் எப்போதாவதுதான் செய்திகள் வரும், வருகின்றன.

அதேசமயம், எதிர்க்கட்சிகள் அவ்வப்போது அதானி மீதான குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துப் பேசியும் வருகின்றன. என்கிற போதும், மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக அதானி நிறுவனத்துக்கு எதிரான செய்திகள் விரிவாக வெளியில் பேசப்படவில்லை என்பது தான் உண்மை. 'நாங்கள் இந்தியாவில் இல்லை. அதனால் எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை' என்கிற அடிக் குறிப்புடனேயேதான் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களில் அதானி போர்ட் நிறுவனம் தவிர மற்ற எந்த நிறுவனத்தின் வர்த்தக மாடலும் தற்போது மதிப்பிடப்பட்டுள்ள சந்தை மதிப்புக்குத் துளியும் ஒப்பிட முடியாததாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு மதிப்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக அதானி கிரீன் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் 2000 மெகாவாட் மட்டுமே இதன் சந்தை மதிப்பு ரூ.2.35 லட்சம் கோடி. ஆனால், என்.டி.பி.சி நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 60,000 மெகாவாட். அதன் சந்தை மதிப்பு ரூ.1.61 லட்சம் கோடி மட்டுமே.

 அதானி தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது" அதானியின் 413 பக்க அறிக்கைக்கு ஹிண்டன்பர்க் பதிலானது 

ஷெல் கம்பெனிகளின் (லெட்டர் பேட் கம்பெனிகள் என்றும் சொல்லலாம்) சொர்க்கபுரி என்றழைக்கப்படும் மொரிஷியஸ், கரிபியன், சைப்ரஸ் தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து செய்யப்பட்ட எஃப்ஐஐ முதலீடுகளால் (வெளிநாட்டு முதலீடு), அதானி குழும நிறுவனங்கள் பலவற்றின் பங்கு விலை செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதானி தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடச் செய்து மக்களையும் அதன் பங்குகளில் முதலீடு செய்யத் தூண்டியிருக்கின்றனர். அதானி குழும நிறுவனங்களில் ரூபாய்.87 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது அரசாங்க நிறுவனமான எல்.ஐ.சி. அப்படியிருக்க மக்களும் பணம் பண்ணும் ஆசையில் முதலீடு செய்வார்கள் தானே!

இப்படி, அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை அனைத்தும் பல மடங்கு செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால், தற்போதைய விலை வீழ்ச்சியில் பல மடங்கு அந்தப் பங்குகள் சரிந்தாலும் அவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பது தான் மக்களுக்கு நல்லது" அதானி குடும்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகள், செபி கண்டும் காணாமல் து இருப்பது பற்றி யெல்லாமும் அமெரிக்க நிறுவனம் அந்த 88 கேள்விகளாக எழுப்பியுள்ளது. அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, பிரதமர் நரேந்திர மோடியின் மிகமுக்கியமான நண்பர். அவருடைய தயவுடன் தான் கடந்த காலங்களில் குஜராத் மாநிலத் தேர்தல் மற்றும் இந்திய பொதுத்தேர்தல்களை கட்சி பிரமாதமாகச் சந்தித்துத் தொடர் வெற்றிகளைக் குவித்தது.

இந்த நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தற்போது பூதாகரமாக வெடித்து வெளி வரத்துவங்கியிருப்பதால், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் இந்தியபஹ பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு  என்ன மாதிரியான வரவேற்பு மற்றும் விளைவுகளை ஏற்படுத்தும். என்பதே தற்போது அரசியல் பார்வையாளர்கள் நிலை,  நாட்டின் சௌகிதார் பிரதமர் நரேந்திர மோடி என்ன எதிர்வினையாற்றுவார் என்பதையெல்லாம் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த