முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தைப்பூசம் நட்சத்திரத் திருநாள் பழனியில் கோலாகலம்

தைப்பூசம்  நட்சத்திரத் திருநாளை முன்னிட்டு போகர் வழிபாடு செய்த ஸ்ரீ தண்டாயுதபாணியாகிய தமிழ் முருகக் கடவுளை வழிபட்ட பழனி மலைக்கு 


 பாதயாத்திரையாகக் காவடி கட்டி கடந்த ஒருவார காலமாகச் செல்லும் தமிழ்நாட்டின்  மக்கள் வழி நெடுகிலும் பக்திப்பரவசம்       "நெஞ்சம் உருகா நிதிப்பெருக்கரோ எனக்கோர்

தஞ்சம்? முருகா, தனிமுதல்வா, – செஞ்சதங்கைத்

தாள் உடையாய், தென் பழனிச் சண்முகா, பன்னிரண்டு

தோள் உடையாய், நீயே துணை.’..........முருகப்பெருமான்  மெய்க்கீர்த்தி கூறும்   செப்புப்பட்டயம் 

வரி 8 லிருந்து 11 வரை. 



“உ ஸ்ரீபுற தகன பரமேஷ்வரன் குமாரன்,அரு பரவி

அமரர் சிறை மீட்ட தேவர்கள் தேவன்,தெய்வலோக நாயகன்

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன், கோகநகனை

சரசமாடி குட்டி குடுமி நெஷ்ட்டை போக்கி கோல பரமபதம்

கொடுத்த குமார கெம்பீரன்”  முருகன் வீரம் குறித்த மெய்கீர்த்தி ..

வரி 11 முதல் 13 வரை 




“கொக்கறு வரையாழி கொட்ட ராவுத்தன்

வக்கிரமிகு அசுரேசர் வடநீரொப்பன்

உக்கிர மயிலேறிவரும் உத்தண்ட தீரன்,

பக்கரைப் பகட்டரக்கர் பட்டிட படைக் களத்தில்

கொக்கறித்துடல் கிழித்த குக்குடக் கோடிக் குமாரன்”  எனும் வரி 13 முதல் 18 வரை 




“கூளி கொட்ட குகைப்பிசாசுகள்

தொக்கநிற்ற தாளமொற சூரன் மாழுவதற்க்கு

பாரிய நீலிய கச்சை கட்டி

பாரவே லெடுத்த பராக்கிரம சேவுக தீரன்

அசுரர் குலைகாரன், அமராபதி காவலன்,

தோடு சிரி காதினான்,தோகைமயில் வாகனன்,

சீதரன் திருமருகன், சிவா சுப்ரமணியன்,

சண்டப்பிரசண்டன், அன்பர் கொரு மிண்டன்,

உத்தண்ட தேவாதிகள் கண்டன்,

ஆறாறு நூறாறு அஷ்ட்ட மங்கலம்

ஆவினங்குடி பழனிக்கதிபன்,

பகுத்தப் பிரியன், பகுத்தச் சீலன்,

பார்வதி புத்திரன்,விக்கின விநாயகன்,

தெய்வ சகோதரன்,எல்லாத் தேவர்க்கும்

வல்லபனாகிய ஸ்ரீவீரப் பழனிமலை சுவாமியார்

திருவுளப்படிக்கு வீரவாகு தேவர் அருளிப்படல்”


யாகம சாலையும் அந்தணர் வெளிவியும் தண்ணீர் பந்தலும் தர்ப்ப சாயூச்சமும் இப்படி தருமத்துக்குள்ளாய் நடந்து வருகிற சாலியவாகனம் சகார்த்தம் 1450 கலியுக சகார்த்தம் 4629 செல்லா நின்ற துன்முகி வருஷம் தையி மாசம் 19 தேதி சுக்குர வாரமும்,சதுர்த்தியும் உத்திர நட்செத்திரமும் பெற்ற சுபதினத்தில் கொங்கு வய்காபுரி நாட்டில் சண்முகநதி தீர்த்த வாசமாய் பழனிமலை மேல்

தெய்வேந்திர வம்சத்தார்

 செப்புப்பட்டயம் சாட்சிகள் வரி 38 முதல் 44 வரை உள்ளதில்,


ஆறு காலமும் அனந்த வடிவுமாய் மகாபூசை கொண்டருளிய சர்வ பரிபூரணச் சச்சிதானந்த பறபிரம மூர்த்தியாகிய பாலசுப்பிரமணிய சுவாமியார் சன்னதி முன்பதாய் இஷ்தானியம் சின்னோப நாயக்கர் சரவணை வேல் தபராசபண்டிதர் பழனியப்ப நம்பியார் அறவளர்த்த நம்பியார் பாணிபாத்திர உடையார் பழனிக்கவுண்டன் தலத்து கணக்கு விருமையான பிள்ளை குமாரவேலாசாரியார் மர்ருமுண்டாகிய தானம் பரிகலத்தார் முன்பதாயி தெய்வேந்திர வம்மிஷத்தார்கள் அனைவோருக்கும் கூடி தெய்வேந்திர மடம் ஆலயம் பழனி மலை உடையாருக்கு சத்திய சாட்சியாய் எழுதி கொடுத்த தரும சாதினமாகிய தாம்பூர சாதீன பட்டையம்  கூறும்




சோழநாட்டின் மகுட வைசியர்கள் பாண்டிய நாட்டிற்கு புலம்பெயர்ந்த பின்னர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை, கண்டனூர்,  தேவகோட்டை  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார் எனும்  கடந்த 200 ஆண்டுகளாகப் பாரம்பரியமிக்க வைரவேல், காவடிகளுடன் பழநி மலைக்கு பாதயாத்திரையாகச் சென்று வழிபடும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நகரத்தார் காவடி ஜனவரி மாதம் 29 ஆம் தேதியில் குன்றக்குடியிலிருந்து பழநிக்கு வைரவேல், உடன் 291 காவடிகளுடன் பாதயாத்திரையாகப் புறப்பட்டவர்கள் நேற்று முன்தினம் நத்தம் வந்தடைந்தனர். காலை  நத்தம் வாணியர் பஜனை மடத்தில் தங்கிய நகரத்தார் காவடி காலையில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் காவடிச் சிந்து நடைடப்பாட்டுப்பாடி  காவடிகளுடன் பழநி மலை நோக்கிப் புறப்பட்டனர். பிப்ரவரி மாதம் .4-ஆம் தேதி தைப்பூசத்தன்று மலைக்கோயிலைச் சென்றடைபவர்கள்,





சுவாமியை வழிபட்ட பின்னர் ஒரு நாள் பழநியில் தங்கி விட்டு மீண்டும் பாதயாத்திரையாகவே ஊர் திரும்புவார்கள். நகரத்தார்களுக்கு மன்னர் நாயக்கர்கள் காலத்தில் எட்டு அறப்பட்டையங்கள் கி.பி. 1600 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1805 வரையுள்ள காலத்தில் எழுதப் பட்டுள்ளன. அவைகளின் விவரம் பின் வருமாறு.

ஏடுகளின் பெயர் காலம்

1. பழனிக்கோயில் நடப்பு அட்டவணை கி. பி. 1600

2. ஏழுநகரத்தார் தருமசாசனம் கி. பி. 1608

3. ஏழுநகரத்தார் தருமசாசனம் கி. பி. 1766

4. ஏழுநகரத்தார் தருமசாசனம் கி. பி. 1788

5. பிரான்மலை ஆதீனம் நடப்பு அட்டவணை கி. பி. 1770

6. ஆதீனம் பட்டாபிடேக அட்டவணை கி. பி. 1610

7. மடவாலயத் தருமசாசனம் கி. பி. 1805

8. நிரம்ப வழகிய தேசிகர் பட்டயம் கி. பி. 1627

இவற்றுள் முதலில் குறிப்பிடப்பட்ட பழனிக்கோயில் நடப்பு அட்டவணை என்ற பட்டயத்தில் நகரத்தார்கள் பழனி வேலாயுத சாமிக்குக் காவடி எடுத்த வரலாறு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது  பழனியிலுள்ள முருகப் பெருமானுக்கு காவடிகள் சமர்பிக்கும் வரை, காவடிக்கு பூஜை நடக்கும். ஒவ்வொரு காவடியிலும் முருகன் பழனி ஆண்டவர் இருப்பதாக நம்பப்படுகிறது. குன்றக்குடியில் துவங்கி பல இடங்களில் பூஜை நடக்கிறது.

அதில்  முதல் நாள் இரவு - மருதிப்பட்டி இரண்டாம் நாள் இரவு - சமுத்திரப்பட்டி மூன்றாம் நாள் இரவு - இடைச்சி மடம் நான்காம் நாள் இரவு - செம்மடப்பட்டி ஐந்தாம் நாள் இரவு - கலிங்கப்பய்யா ஊரணி ஆறாம் நாள் - அன்னதான மடத்தில் முதல் பூஜை ஏழாம் நாள் - அன்னதான மடம் மற்றும் தைப்பூசத்தில் இரண்டாம் பூஜை எட்டாம் நாள் - அன்னதான மடத்தில் மூன்றாம் பூஜை ஒன்பதாம் நாள் - அன்னதான மடத்தில் நான்காம் நாள் பூஜை மற்றும் பழனி மலைக்கோயிலில் உள்ள முருகனுக்கு காவடி பிரசாதம் பத்தாம் நாள் - அன்னதான மடத்தில் ஐந்தாம் நாள் பூஜை பதினோராம் நாள் - அன்னதான மடத்தில் ஆறாம் நாள் ஆடுபடி பூஜை பன்னிரண்டாம் நாள் - சந்தன அபிஷேகமும் முடித்து காவடியும் சொந்த ஊருக்கு கால்நடை பயணமாகத் திரும்பத் தொடங்கும். சைவ மத நம்பிக்கையும் கடவுள் வழிபாடும் பிரிக்க முடியாத ஒன்றாகும். இதில் கடவுளை வணங்குவோர், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடியும்  வணங்கியும்  வருவதுண்டு. சிலர் என்ன தான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், வீட்டிலேயே கும்பிட்டு விட்டு, அத்தோடு தன் கடமை முடிந்தது என்று விட்டு விடுவார்கள். சிலர் கோவிலுக்குச் சென்று கடவுளை மனமுருக தரிசித்துச்  செல்வார்கள். நகரத்தார் காவடி என்பது பழனியில் உள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக நகரத்தார்  செட்டிநாடு பகுதியில் ( சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து  வட்டங்களிலும்  புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று வட்டங்களிலும் அடங்கிய 76 ஊர்களிலும் உள்ள மக்கள் தைப்பூச விழாவில் பங்கேற்பார்கள் . நகரத்தார் காவடியில் இரண்டு வெவ்வேறு குழுக்கள் பழனியை நோக்கிப் பயணித்து பழனிக்கு சில கிலோமீட்டர்கள் முன்னதாகவே இணையும். மேலவட்டகைக் காவடி மற்றும் கீழ்வட்டகை காவடி.

செட்டிநாட்டு ஊர்களிலுள்ள மக்கள் அந்தந்த ஊர்களிலிருந்து புறப்பட்டு தைப்பூசத்திற்கு முன் 8 ஆம் நாள் இரவு குன்றக்குடியை அடைகின்றனர் . ஊர் முழுவதுமிருந்து வரும் காவடிகள் குன்றக்குடியில் திரண்டு, மறுநாள் காலை வேல் தலைமையில் அனைத்துக் காவடிகளும், இறுதியில் பச்சைக் காவடியும் அனைத்து காவடிகளும் தொடங்கும்.

அது மிகவும் பாரம்பரியம் கொண்ட அடிப்படை விதிகள் வகுத்து எழுதப்பட்ட பட்டயத்தின் அடிப்படையில் , ஒருவர் காவடியைத் தூக்கி தோளில் வைப்பதற்கு முன் குளிக்க வேண்டும். தோளில் காவடியுடன் நடக்க ஆரம்பித்தவுடன் தண்ணீர் குடிக்கவோ சிறுநீர் கழிக்கவோ கூடாது. அப்படிச் செய்ய வேண்டுமானால், காவடியைத் தோளில் போடுவதற்கு முன் மீண்டும் குளிக்க வேண்டும். காவடி ஏந்துபவர் வெள்ளை வேஷ்டி அணிந்து பழனியில் முருகப்பெருமானுக்கு காவடி படைக்கும் வரை அதே வேஷ்டியில் தான் இருக்க வேண்டும்.   என்பது ஐதீகம்.     ‘ஞான விரகு அறியா நானும் சில தமிழால்

வானவர் ஏத்தும் பழனி வந்தானைத் – தானவரை வென்றானை வாழ்த்த விரைப் பாதிரி வனம் சேர் கன்று யானை மாமுத்தோன் காப்பு.’    அதேபோலவே 363 ஆண்டு காலம் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் பகுதியில் பரமத்தி வேலூர் பக்தர்களின்  காவடிகள் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை, காவடிகள் என மூன்று ஊர் ஒன்று சேர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தக் காவடிகள் கட்டி பூஜை செய்து உணவு வழங்கிப் புறப்பட்டுச் செல்வார்கள். அப்படி  பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தற்போது 30 வருடமாக பாத யாத்திரையாக இப்போது அணைவரும் செல்கிறார்கள். இதில், எடப்பாடியைச் சேர்ந்த பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அதாவது பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் கற்றுக் கொடுத்தது போல் காவடிகள் கட்டிச் செல்லும் வழியில், ஒவ்வொரு இடத்திலும் பூஜைகள் செய்து இவர்களுக்கென்று பழனியில் சிறப்புப் பூஜைகள் வைத்து வழிபாடு நடக்கும் கோயமுத்தூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சித் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தலைமையில் கோயமுத்தூரிலிருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்வதன் படி ஈச்சனாரி விநாயகர் கோவிலில் முன்பிருந்து தொடங்கிய பாத யாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுச் செல்கிறார்கள்.பாதயாத்திரையை அக்கட்சியின்  மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்து, துவக்கி வைத்தார். (இதேபோல கடந்த இருபதாண்டு முன் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறியப்பட்ட என்.சுதாகரன் பிரபலமானது நம் நினைவுக்கு வந்தது) முருகனைப் பல வழிகளிலும் வழிபடலாம் என்றாலும் பக்தி மார்க வழிபாடே சிறந்த மார்கம். பாத யாத்திரை என்ற நடைப் பயணம் அதில் ஒரு மார்கம். கடவுளின் அருளைப் பெறுவதற்காகவே உண்மையில் பாத யாத்திரை செய்கின்றனர். ஒவ் ஒருவருக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. அப்போது  வணங்குவதின் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அவர் களைந்து விடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கலியுக வரதன் என்ற அவரை வணங்குகின்றனர்.     


             "வேறோ, விளக்கும் விளக்கொளியும்? வேறிரண்டு

கூறோ, நவரசமும் கூத்தாட்டும்? – நாறும் மலர்க்

கள் உயிர்க்கும் தென் பழனிக் கந்தன், குருபரன்

உள் உயிர்க்கு வேற்றுமை ஆமோ?’  என்பதே அடியேன் கருத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த