முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி எடப்பாடி கே.பழனிச்சாமி வசமான அதிமுக

உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி


2022 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  11 ஆம் தேதியில் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கி அந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம்  உபர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி, ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசயசாமி  தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லுமென தீர்ப்பு வழங்கியது.




அந்த இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் 2023 ஜனவரி மாதம் 11ஆம் தேதி ஒத்திவைத்திருந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.


ஓ.பன்னீர் செல்வமஹ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்வு செய்தது செல்லும். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து நீக்கியதும் செல்லும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி வசமாக கொண்டு செல்லப்படடது. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஓபன்னீர் செல்வம்  தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. ஈரோடு இடைக்காலத் தேர்தல் பிப்ரவரி  27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்..

மேலும், எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணியாக பிரிந்து அதிமுக முன்னால் முதல்வர்  ஜெ.ஜெயலலிதா மறைவிற்குப் பின்  பல பிரிவுகளில் பிளவுபட்டுக்  கிடக்கிறது. இதில், யாருக்கு அதிமுக சொந்தம் என்பதையும் இன்றைய தீர்ப்பு தீர்மானித்ததால், தமிழக அரசியலில் இப்போது அதிமுக பாதை இனி எடப்பாடி கே.பழனிச்சாமி வசமான நிலை  ஏற்பட்டுள்ளது. இதில் ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி தரும் முடிவே அதிமுக எதிர்காலமாக மக்கள் ஜனநாயகத்தில் பார்க்கப்படுகிறது.ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இந்த தீர்ப்பு குறித்த கருத்தை முன்வைத்த வைத்திலிங்கம் இது தங்களுக்குச்  சாதகமான தீர்ப்பு எனத் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் இடையிலான ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்தது. எடப்பாடி கே. பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்கும் நோக்கத்தில் 2022 ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்ட அனுமதியளித்தாலும், அதில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றத் தடை விதித்தது.

அதனைத் தொடர்ந்து கூடிய பொதுக்குழுவில் தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்தது எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு.  தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் . தரப்பின் அடுத்தடுத்த முட்டுக்கட்டைகள், வழக்குகளைக் கடந்து ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டியதை.

 அடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்ததை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.

இப்படி இரு தரப்பினும் மாறி மாறி நடத்திய சட்டப்போராட்டத்திற்கு  தீர்வு கிடைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை  வெளியிட்ட உச்சநீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.  தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தவர். தெரிவித்ததாவது, "சென்னை ஐகோர்ட் நீதியரசர்கள் சொன்னதை போன்று உச்சநீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டியது செல்லும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால் சிவில் கோர்டில் இருக்கும் வழக்கை எங்களுடைய கருத்து கட்டுப்படுத்தாது என்று சொல்லி இருக்கிறார்கள்.




பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். முழு தீர்ப்பையும் பார்த்துவிட்டு பேசுவோம். சிவில் கோர்டை எங்கள் கருத்து கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்றால் இது எங்களுக்கு சாதகமான தீர்ப்புதான்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



அதாவது உச்சநீதிமன்றம் செல்லும் என்று தீர்ப்பளித்த பொதுக்குழுவில்தான் எடப்பாடி கே.பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது, ஓ.பனனீர் செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது,


ஜெ.ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்பது ரத்து போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்காததுடன் சிவில் கோர்டை இந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தாது



என்று தெரிவித்ததன் மூலம் அதில் தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்த முடியும். என்பதே அவர்கள் கருத்து இடைத் தேர்தல் நடைமுறைகள் உள்ள நிலையில் இந்த தீர்ப்பு


தற்போது வந்தது ஈரோட்டில் தாக்கத்தை உறுவாக்குமா என்பதே பலரும் பேசும் கருத்தாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,