உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதியில் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கி அந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் உபர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி, ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசயசாமி தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லுமென தீர்ப்பு வழங்கியது.
அந்த இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் 2023 ஜனவரி மாதம் 11ஆம் தேதி ஒத்திவைத்திருந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஓ.பன்னீர் செல்வமஹ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்வு செய்தது செல்லும். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து நீக்கியதும் செல்லும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி வசமாக கொண்டு செல்லப்படடது. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஓபன்னீர் செல்வம் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. ஈரோடு இடைக்காலத் தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்..
மேலும், எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணியாக பிரிந்து அதிமுக முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்குப் பின் பல பிரிவுகளில் பிளவுபட்டுக் கிடக்கிறது. இதில், யாருக்கு அதிமுக சொந்தம் என்பதையும் இன்றைய தீர்ப்பு தீர்மானித்ததால், தமிழக அரசியலில் இப்போது அதிமுக பாதை இனி எடப்பாடி கே.பழனிச்சாமி வசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி தரும் முடிவே அதிமுக எதிர்காலமாக மக்கள் ஜனநாயகத்தில் பார்க்கப்படுகிறது.ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இந்த தீர்ப்பு குறித்த கருத்தை முன்வைத்த வைத்திலிங்கம் இது தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு எனத் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் இடையிலான ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்தது. எடப்பாடி கே. பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்கும் நோக்கத்தில் 2022 ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்ட அனுமதியளித்தாலும், அதில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றத் தடை விதித்தது.
அதனைத் தொடர்ந்து கூடிய பொதுக்குழுவில் தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்தது எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு. தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் . தரப்பின் அடுத்தடுத்த முட்டுக்கட்டைகள், வழக்குகளைக் கடந்து ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டியதை.
அடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்ததை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.
இப்படி இரு தரப்பினும் மாறி மாறி நடத்திய சட்டப்போராட்டத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட்ட உச்சநீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தவர். தெரிவித்ததாவது, "சென்னை ஐகோர்ட் நீதியரசர்கள் சொன்னதை போன்று உச்சநீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டியது செல்லும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால் சிவில் கோர்டில் இருக்கும் வழக்கை எங்களுடைய கருத்து கட்டுப்படுத்தாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். முழு தீர்ப்பையும் பார்த்துவிட்டு பேசுவோம். சிவில் கோர்டை எங்கள் கருத்து கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்றால் இது எங்களுக்கு சாதகமான தீர்ப்புதான்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது உச்சநீதிமன்றம் செல்லும் என்று தீர்ப்பளித்த பொதுக்குழுவில்தான் எடப்பாடி கே.பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது, ஓ.பனனீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது,
ஜெ.ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்பது ரத்து போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்காததுடன் சிவில் கோர்டை இந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தாது
என்று தெரிவித்ததன் மூலம் அதில் தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்த முடியும். என்பதே அவர்கள் கருத்து இடைத் தேர்தல் நடைமுறைகள் உள்ள நிலையில் இந்த தீர்ப்பு
தற்போது வந்தது ஈரோட்டில் தாக்கத்தை உறுவாக்குமா என்பதே பலரும் பேசும் கருத்தாக உள்ளது.
கருத்துகள்